Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»அரசு உதவிபெறும் நகர்ப்புற பள்ளிகளில் தள்ளிப்போகும் காலை உணவு திட்டத்தால் ஏமாற்றம்!
    கல்வி

    அரசு உதவிபெறும் நகர்ப்புற பள்ளிகளில் தள்ளிப்போகும் காலை உணவு திட்டத்தால் ஏமாற்றம்!

    adminBy adminJuly 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அரசு உதவிபெறும் நகர்ப்புற பள்ளிகளில் தள்ளிப்போகும் காலை உணவு திட்டத்தால் ஏமாற்றம்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    அரசு உதவிபெறும் நகர்ப்புற தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தள்ளிப்போகும் காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் முதல்வரின் காலை உணவு திட்டம் 2022-ம் ஆண்டு செப்.15-ல் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக, அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதன் பிறகு, ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் கடந்தாண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள 30,992 அரசுப் பள்ளிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள 3,995 அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 17.53 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில், நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள 1,545 அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு நிகழாண்டு காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும் எனவும், இதன் மூலம் 1.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் எனவும் தமிழக அரசின் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி நகர்ப்புற அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்போது தொடங்கப்படவில்லை. தொடர்ந்து, காமராஜர் பிறந்த நாளான இன்று(ஜூலை 15) அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படாததால் மாணவ, மாணவிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    கரூர் மாவட்டத்தில் 541 தொடக்கப் பள்ளிகள், 164 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 705 அரசுப் பள்ளிகள் உள்ளன. மேலும், 38 தொடக்கப் பள்ளிகள், 7 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 45 அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில், கிராமப் பகுதிகளில் உள்ள 24 அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் கடந்தாண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால், நகர்ப்புறங்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படாததால், கரூர் மாநகராட்சி பகுதியில் 11, குளித்தலை, பள்ளபட்டி பகுதிகளில் தலா 4, புகழூரில் 2 என மொத்தம் 21 அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இது குறித்து கரூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) முருகேசன் கூறியபோது, “காலை உணவு திட்டம் அமலாக்கம் குறித்து எவ்வித அறிவிப்பும் இதுவரை வரவில்லை” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    தேசிய விளையாட்டு தின கொண்டாட்டம்: கல்லூரிகளில் போட்டிகளை நடத்த யுஜிசி உத்தரவு

    August 24, 2025
    கல்வி

    முதுகலை பொறியியல் படிப்பு – ‘கேட்’ நுழைவுத் தேர்வுக்கு ஆக.25 முதல் விண்ணப்பிக்கலாம்

    August 22, 2025
    கல்வி

    பொறியியல் சேர்க்கை துணை கலந்தாய்வு தொடக்கம்

    August 22, 2025
    கல்வி

    திறனறி தேர்வுகளை எதிர்கொள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம்தோறும் பயிற்சி: பள்ளிக்கல்வித் துறையின் புதிய முன்னெடுப்பு

    August 22, 2025
    கல்வி

    போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தல்

    August 21, 2025
    கல்வி

    மெய்நிகர் நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி?

    August 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மில்லியன் கணக்கானவர்களை பாதிக்கும் ‘அமைதியான கொலையாளி’ இதய நிலை குறித்து அமெரிக்க மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்; அறிகுறிகள் மற்றும் ஆபத்து காரணிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘தூய வாய்ப்பு’: சிங்கப்பூரில் பிகாமிக்காக சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மூல மனிதர்; இரண்டாவது மனைவியின் பிரசவத்திற்குப் பிறகு மருத்துவமனையில் அம்பலப்படுத்தப்பட்டது – இந்தியாவின் டைம்ஸ்
    • வரதட்சணை கொடுமை: நொய்டாவில் மனைவியை தீ வைத்து எரித்துக் கொன்ற கணவன் கைது
    • ஓய்வை அறிவித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா
    • அதிமுகவின் ஒன் மேன் ஆர்மியாக மாற நினைக்கிறாரா பழனிசாமி? – செல்லூர் கே.ராஜூ பளிச் நேர்காணல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.