Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம்: தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி
    கல்வி

    அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம்: தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி

    adminBy adminJune 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம்: தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

    தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த 2.2 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதற்கிடையே பணிஓய்வு உட்பட பல்வேறு காரணங்களால் மாநிலம் முழுவதும் சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து கற்றல், கற்பித்தல் பணிகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி நடப்பு கல்வியாண்டிலும் (2025-26) தற்காலிக ஆசிரியர்களை பணிநியமனம் செய்து கொள்ள வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் சிலர் கூறியதாவது: ‘பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை அந்தந்த பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) மூலமாக நிரப்பிக் கொள்ள தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புதிய பணி நியமனம் மேற்கொள்வதால் மாணவர்கள் நலன்கருதி இந்த முடிவெடுக்கப்பட்டு உள்ளது. பணி நியமனத்தின் போது ஏற்கெனவே வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், கடந்தாண்டு நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது. நீண்டகால விடுப்பில் உள்ள அல்லது மகப்பேறு விடுமுறையில் சென்ற ஆசிரியர்களுக்கு மாற்றாகவும் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யவும் தலைமையாசிரியர்களிடம் தெரிவித்துள்ளோம். இதனால் கற்றல் பணிகள் தொய்வு ஏதும் ஏற்படாது.

    இதற்கிடையே ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தி முடித்த பிறகே தற்காலிக ஆசிரியர் பணிநியமனங்களை மேற்கொள்ள வேண்டுமென உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதேநேரம் ஆசிரியர்கள் பதவி உயர்வு தொடர்பான வழக்குவிசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் மாறுதல் கலந்தாய்வு நடத்துவதில் தாமதம் ஏற்படும் சூழல் இருக்கிறது. எனவே, தற்காலிக ஆசிரியர்களை முன்கூட்டியே நியமிக்கிறோம். கலந்தாய்வின் போது அனைத்து காலிப் பணியிடங்களும் வெளியே காண்பிக்கப்படும்.’ இவ்வாறு அவர்கள் கூறினர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    இந்தியா வளர்ந்த நாடாக மாற கல்வி வளர்ச்சி முக்கியம்: விஐடி பல்கலை. வேந்தர் கோ.விசுவநாதன் கருத்து

    August 17, 2025
    கல்வி

    இளநிலை யோகா மருத்துவ படிப்புக்கு 4,200 பேர் விண்ணப்பம்

    August 17, 2025
    கல்வி

    20 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்வு

    August 17, 2025
    கல்வி

    பொறியியல் படிப்புகளுக்கான துணை கலந்தாய்வு தள்ளிப்போக வாய்ப்பு

    August 16, 2025
    கல்வி

    ஏழை மாணவர்களின் பெரும் கனவுகளை வசமாக்கும் ‘வெற்றிப் பள்ளிகள் திட்டம்’ – பள்ளிக்கல்வித் துறை செயலர் உறுதி

    August 16, 2025
    கல்வி

    பட்​ட​தாரி ஆசிரிய​ராக பதவி உயர்வு பெறும் அமைச்சுப் பணியாளர்களின் கல்வி தகுதியை சரிபார்க்க உத்தரவு

    August 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அமைச்சர் ஐ.பெரியசாமி, மகன், மகளின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை – முழு விவரம்
    • ஆப்டிகல் மாயை: உங்களுக்கு கூர்மையான கண்கள் இருக்கிறதா? இந்த படத்தில் மறைக்கப்பட்ட எண்ணைக் கண்டறியவும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்தியா வளர்ந்த நாடாக மாற கல்வி வளர்ச்சி முக்கியம்: விஐடி பல்கலை. வேந்தர் கோ.விசுவநாதன் கருத்து
    • நீலகிரி, கோவையில் இன்று கனமழை
    • ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்தால் குழப்பம் ஏற்படும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.