Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»Moon Mission 2035: சீனாவின் உதவியுடன் நிலவில் தரையிறங்க தயாராகும் பாகிஸ்தான்!
    உலகம்

    Moon Mission 2035: சீனாவின் உதவியுடன் நிலவில் தரையிறங்க தயாராகும் பாகிஸ்தான்!

    adminBy adminAugust 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    Moon Mission 2035: சீனாவின் உதவியுடன் நிலவில் தரையிறங்க தயாராகும் பாகிஸ்தான்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பயங்கரவாத அச்சுறுத்தல், கடன் சுமையால் மூழ்கும் பொருளாதாரம், அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத நிலையில் நிலவில் தரையிறங்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாகிஸ்தான் நாட்டின் விண்வெளி முகமையான ‘SUPARCO’, இதுவரை தன்னிச்சையாக வடிவமைத்த செயற்கைகோள் அல்லது விண்வெளி திட்டம் என எதையும் மேற்கொண்டது இல்லை. அனைத்தும் சீனாவின் ஆதரவுடன்தான் மேற்கொண்டு வருகிறது. காலநிலை மாற்றம் சார்ந்த அச்சுறுத்தலை சமாளிப்பது தொடர்பாக கடந்த மாதம் பாகிஸ்தான் விண்ணில் நிலைநிறுத்திய ரிமோட் சென்ஸிங் செயற்கைக்கோள் சீனாவில் இருந்து ஏவப்பட்டது. பாகிஸ்தான் கொடி உடன் அது விண்ணில் ஏவப்பட்டு இருந்தாலும் தொழில்நுட்ப ரீதியான பணிகளை சீனா மேற்கொண்டதாக தகவல்.

    இந்நிலையில், சீனா சென்றுள்ள பாகிஸ்தான் அமைச்சர் ஹசன் இக்பால், தங்கள் நாட்டின் விண்வெளி திட்டங்கள் குறித்து திங்கட்கிழமை அன்று பேசி இருந்தார். அதற்கு சீனாவின் உதவி அவசியம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் தான் வரும் 2035-ம் ஆண்டில் நிலவில் விண்கலனை தரையிறக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

    முன்னதாக, அடுத்த ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த விண்வெளி வீரரை விண்ணுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு சீனாவின் Chang’e 8 திட்டத்திலும் பாகிஸ்தான் அங்கம் வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவிலான சந்திரனை ஆய்வு செய்வதற்கான ஆராய்ச்சி நிலையம் தொடர்பான திட்டத்தில் ஒரு பகுதியாகும். பாகிஸ்தானின் இந்த விண்வெளி சார்ந்த முயற்சிகளில் சீனாவின் பங்கு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 1961-ல் SUPARCO-வை நிறுவியது பாகிஸ்தான். இருப்பினும் விண்வெளி திட்டம் சார்ந்த பணிகளுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படாத காரணத்தால் அதன் பணியில் பின்னடைவு ஏற்பட்டது.

    கடந்த 2023-ல் இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, விண்வெளி சார்ந்த பல்வேறு பணிகளில் முன்னணியில் உள்ளது. அதன் மூலம் பல சாதனைகளை படைத்து வருகிறது. மற்ற நாடுகளின் செயற்கைக்கோள்களை குறைந்த செலவில் விண்ணில் செலுத்துவதும் இதில் ஒன்றாகும்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    போலி வதிவிட அட்டை: நியூயார்க்கில் இந்திய மனிதர் கைது செய்யப்பட்டார்; 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை – இந்தியாவின் டைம்ஸ்

    August 6, 2025
    உலகம்

    ரஷ்யாவிடம் தொடர்ந்து எரிபொருள் வாங்குவதால் இந்தியா மீதான வரியை மேலும் உயர்த்துவேன்: ட்ரம்ப் தகவல்

    August 6, 2025
    உலகம்

    அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியா மீது கூடுதல் வரி: ட்ரம்ப் அறிவிப்பு

    August 6, 2025
    உலகம்

    சிட்னி ஸ்வீனியின் ‘ஜீன்ஸ்’ விளம்பரமும்; டொனால்டு ட்ரம்ப்பின் ரியாக்‌ஷனும்!

    August 5, 2025
    உலகம்

    மதுரா ஸ்ரீதரன் ‘பிண்டி’ படத்திற்காக ட்ரோல் செய்யப்பட்டார், ஓஹியோ ஏஜி கூறுகிறார், ‘அவளுடைய பெயர் அல்லது நிறம் உங்களைத் தொந்தரவு செய்தால் …’ – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    August 5, 2025
    உலகம்

    அர்வீந்தர் சிங் பஹால் யார்? இந்திய – ஆரிஜின் தொழிலதிபர் நீல தோற்றத்துடன் விண்வெளிக்கு செல்கிறார்; உரிமம் பெற்ற பைலட் மற்றும் குளோப் – ட்ரொட்டர் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    August 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சொகுசு கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொல்லப்பட்ட வழக்கு: திமுக பிரமுகர் பேரனின் ஜாமீன் மனு தள்ளுபடி
    • ஆப்டிகல் மாயை: இந்த குடும்ப காட்சியில் மறைக்கப்பட்ட வாத்து மற்றும் பட்டாம்பூச்சியைக் கண்டுபிடிக்க உங்களுக்கு கூர்மையான கண்கள் இருக்கிறதா? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘கிங்டம்’ படத்துக்கு பாதுகாப்பு கோரிய மனு: காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
    • கோவை காவல் நிலையத்தில் தற்கொலை செய்துகொண்ட நபரால் பரபரப்பு: ஆணையர் விளக்கம்
    • இரண்டாவது காபியைத் தவிர்க்கவும்: பிற்பகல் சரிவை வெல்ல 5 ஆற்றல் அதிகரிக்கும் பானங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.