Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»40 எப்​சி-31 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கும் சீனா
    உலகம்

    40 எப்​சி-31 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கும் சீனா

    adminBy adminJune 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    40 எப்​சி-31 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கும் சீனா
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பாகிஸ்தானுக்கு ரேடாரில் சிக்காத 40 ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை சீனா வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் இந்த தொழில்நுட்பம் கொண்ட சில நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானும் இணைய உள்ளது.

    இந்திய விமானப் படையில் ரேடாரில் சிக்காத 5-ம் தலைமுறை போர் விமானம் எதுவும் இல்லை. இத்தகைய விமானங்களை இந்தியா உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்க உள்ளது. அட்வான்ஸ்டு மீடியம் காம்பாட் ஏர்கிராப்ட் (ஏஎம்சிஏ-ஆம்கா) எனப்படும் இந்த விமானங்களை 2035-ல் இந்திய விமானப் படையில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்திய விமானப் படை முன்னாள் விமானியும் பாதுகாப்பு விமர்சகருமான குரூப் கேப்டன் அஜய் அலாவத் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:

    பாகிஸ்தானுக்கு ரேடாரில் சிக்காத 40 ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை சீனா வழங்க உள்ளது. இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. ஏனெனில் இதற்காக பாகிஸ்தானால் நியமிக்கப்பட்ட போர் விமானிகள் குழு 6 மாதங்களுக்கும் மேலாக பயிற்சிக்காக சீனாவில் உள்ளது. பாகிஸ்தானுக்கு சீனா வழங்க இருப்பது எப்சி-31 ரக விமானம் ஆகும். இது சீனா தற்போது வைத்திருக்கும் ஐந்தாம் தலைமுறை ஜே-35 ரக விமானத்தை விட சற்று குறைந்த போர்த் திறனை கொண்டிருக்கும். ஏனெனில் அதிகபட்ச போர்த் திறனை கொண்டிருக்கும் ஒரு விமானத்தை எந்த நாடும் மற்றொரு நாட்டுக்கு வழங்காது.

    பாகிஸ்தானை விட இந்திய விமானப்படை நீண்ட காலமாக வலுவாக இருந்து வருகிறது. சிறந்த பயிற்சி, உத்திகள், ஆயுத மேலாண்மை என பல வகையிலும் பாகிஸ்தானை விட இந்தியா முன்னிலையில் இருந்து வருகிறது.

    இந்நிலையில் பாகிஸ்தானுக்கு இந்த வகை விமானம் வழங்கப்படுவது ஒரு கவலைக்குரிய விஷயமாகும்.

    இதற்கு ஐந்தாம் தலைமுறை போர் விமானம் தயாரிப்பதற்கான நமது முயற்சிகளை நாம் இயன்றவரை விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஓய்வு பெற்ற மற்றொரு அதிகாரி ஏர் மார்ஷல் சஞ்சீவ் கபூர் கூறுகையில், “இரு பக்கமும் எதிரிகளை வைத்துக்கொண்டு ரேடாரில் சிக்காத ஐந்தாம் தலைமுறை விமானங்களுக்காக 9-10 ஆண்டுகள் நாம் காத்திருக்க முடியாது. இடைக்கால ஏற்பாடாக தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்த அடிப்படையில் ரஷ்யாவிடம் இருந்து சுகோய் எஸ்யு-57 போர் விமானங்களை நாம் கொள்முதல் செய்யலாம்” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    இந்தியப் பெண் அமெரிக்காவில் காணாமல் போயிருக்கிறாள்: ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்திற்கு சென்றுவிட்டாள்; தேடல் செயல்பாடு நடந்து கொண்டிருக்கிறது | உலக செய்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    June 29, 2025
    உலகம்

    ‘பெரிய தவறு’: ‘பெரிய அழகான’ வரி மசோதாவை நிராகரித்ததற்காக டிரம்ப் செனட்டர் டில்லிஸைப் பின் தொடர்கிறார் | உலக செய்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    June 29, 2025
    உலகம்

    51-49 செனட் வாக்கு: ட்ரம்பின் ‘பெரிய அழகான’ மசோதாவுக்கு ‘இல்லை’ என்று கூறிய மூன்று குடியரசுக் கட்சியினர் | உலக செய்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    June 29, 2025
    உலகம்

    டொனால்ட் டிரம்ப் Vs எலோன் மஸ்க் பகுதி 2: தொழில்நுட்ப கோடீஸ்வரர் வாதத்தை மறுதொடக்கம் செய்கிறார்; ‘பெரிய பில் அழகான’ முற்றிலும் பைத்தியம் | உலக செய்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    June 29, 2025
    உலகம்

    ட்ரம்பின் ஈரான் குண்டுவெடிப்புகளுக்கு நெட்டிசன்கள் பதிலளிக்கின்றன; ஈரான் வேலைநிறுத்தங்களுக்குப் பிறகு அமெரிக்க இராணுவத்தில் சேர பரோன் டிரம்ப் அழைக்கிறார் | உலக செய்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    June 29, 2025
    உலகம்

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் அழிக்கப்பட்ட தீவிரவாத முகாம்களை மீண்டும் கட்டுகிறது பாகிஸ்தான்

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • புரி நெரிசல் சம்பவத்துக்கு அலட்சியமும், தவறான நிர்வாகமும் தான் காரணம்: கார்கே குற்றச்சாட்டு
    • ‘நான் ஏன் கிளப் உலகக் கோப்பை தொடரில் விளையாடவில்லை என்றால்…’ – ரொனால்டோ ஓபன் டாக்
    • கலாநிதி – தயாநிதி விவகாரம்: சன் குடும்ப மோதல்… கலைஞர் இல்லாத குறையை தீர்ப்பாரா ஸ்டாலின்?
    • உயர் யூரிக் அமிலம்: இது திடீர் மாரடைப்பு மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி மற்றும் அதை நிர்வகிப்பதற்கான வழிகளுக்கு எவ்வாறு வழிவகுக்கிறது – இந்தியாவின் நேரங்கள்
    • உத்தராகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பு: 9 தொழிலாளர்களின் நிலை என்ன?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.