Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, January 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»36 மணி நேரத்துக்குள் இந்தியா தாக்குதல்: பாகிஸ்தான் அமைச்சர் தகவல்
    உலகம்

    36 மணி நேரத்துக்குள் இந்தியா தாக்குதல்: பாகிஸ்தான் அமைச்சர் தகவல்

    adminBy adminMay 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    36 மணி நேரத்துக்குள் இந்தியா தாக்குதல்: பாகிஸ்தான் அமைச்சர் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இஸ்லாமாபாத்: அடுத்த 24 மணி நேரம் முதல் 36 மணி நேரத்துக்குள் இந்தியா தாக்குதல் நடத்தவிருப்பதாக நம்பகமான உளவுத்துறை தகவல் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.

    அவ்வாறு, இந்தியா தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும், இந்தியா விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

    ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த தீவிரவாத தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு அறிவித்தது. மேலும், பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது.

    இதே போல் பாகிஸ்தான் அரசு, தனது வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாகவும், சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் அறிவிப்புகளை வெளியிட்டது. மேலும் இருநாட்டு அரசுகளும் தங்கள் ராணுவ படைகளை தயார் நிலையில் வைத்துள்ளன.

    இதனிடையே, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த சில மணி நேரத்தில் பாகிஸ்தான் தரப்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பாகிஸ்தான் அமைச்சர் அத்தாவுல்லா தரார் கூறியதாவது: ஆதாரமற்ற ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கைகளை எடுக்க இந்திய அரசு தயாராகி வருகிறது.

    பாகிஸ்தானும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தின் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் நாங்கள் எப்போதும் கண்டித்து வருகிறோம்.

    இந்த விவகாரத்தில் வெளிப்படையான, நடுநிலையான விசாரணை நடத்த பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது. ஆனால், இதனை தவிர்த்து மோதல் பாதையை இந்தியா தேர்ந்தெடுக்கிறது. அடுத்த 24 மணி முதல் 36 மணி நேரத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதலை தொடங்கும் என பாகிஸ்தான் அரசை எங்கள் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்தியாவின் எவ்வித ராணுவ தாக்குதலுக்கும் உறுதியாகவும் தீர்க்கமாகவும் பதிலடி கொடுக்கப்படும். அனைத்து விளைவுகளும் இந்தியாவையே சாரும். இவ்வாறு பாகிஸ்தான் அமைச்சர் அத்தாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.

    சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதல் கொடும்செயலில் ஈடுபட்டது தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான டிஆர்எப் என்பது தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கிறது என்று இந்தியா குற்றம்சாட்டி வருகிறது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    MAGA கிறிஸ்டி நோயமை ‘ஆன்’ செய்யுமா? ICE படப்பிடிப்பை ‘மிகவும் சிக்கலான’ கையாள்வதில் டிரம்ப் கூட்டாளிகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 12, 2026
    உலகம்

    ஜெஃப் பெசோஸ் முதல் பில் கேட்ஸ் வரை: பில்லியனர்கள் கிரீன்லாந்தில் பந்தயம் கட்டுகிறார்கள், டிரம்ப் அதை ‘கடினமான வழியில்’ எடுப்பதாக சுட்டிக்காட்டுகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 12, 2026
    உலகம்

    பெரிய இந்திய இக்கட்டான நிலை: புலம்பெயர் சூதாட்டமானது வெளிநாட்டில் வாழ்வதற்கான பாதுகாப்பைக் கொண்டதா? விளக்கப்பட்டது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 12, 2026
    உலகம்

    பில் கேட்ஸ் $7.9 பில்லியனை மெலிண்டா கேட்ஸின் இலாப நோக்கற்ற நிறுவனத்திற்கு அனுப்பிய மிகப்பெரிய தொண்டு பரிமாற்றங்களில் ஒன்று | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 11, 2026
    உலகம்

    மினியாபோலிஸ் துப்பாக்கிச் சூடுக்குப் பிறகு இந்திய வம்சாவளி தானேதர் ICE ஐ ஒழிப்பதற்கான மசோதாவை அறிமுகப்படுத்துகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 11, 2026
    உலகம்

    தினப்பராமரிப்பு மோசடிக்காக டிரம்ப் நிர்வாகியை ‘வரி டாலர்களை ஒப்படைக்க’ கட்டாயப்படுத்தியதாக இந்திய வம்சாவளி நீதிபதி குற்றம் சாட்டினார்; எலோன் மஸ்க் அதை ‘சிக்கல்’ என்று அழைக்கிறார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • MAGA கிறிஸ்டி நோயமை ‘ஆன்’ செய்யுமா? ICE படப்பிடிப்பை ‘மிகவும் சிக்கலான’ கையாள்வதில் டிரம்ப் கூட்டாளிகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஜெஃப் பெசோஸ் முதல் பில் கேட்ஸ் வரை: பில்லியனர்கள் கிரீன்லாந்தில் பந்தயம் கட்டுகிறார்கள், டிரம்ப் அதை ‘கடினமான வழியில்’ எடுப்பதாக சுட்டிக்காட்டுகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தினசரி நீர்ப்பாசனம் தேவையில்லாத 5 தாவரங்கள் – இந்திய நிலைமைகளுக்கு ஏற்றது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பெரிய இந்திய இக்கட்டான நிலை: புலம்பெயர் சூதாட்டமானது வெளிநாட்டில் வாழ்வதற்கான பாதுகாப்பைக் கொண்டதா? விளக்கப்பட்டது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பில் கேட்ஸ் $7.9 பில்லியனை மெலிண்டா கேட்ஸின் இலாப நோக்கற்ற நிறுவனத்திற்கு அனுப்பிய மிகப்பெரிய தொண்டு பரிமாற்றங்களில் ஒன்று | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.