Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»“வங்கதேசம் இந்தியாவுடன் நல்லுறவையே விரும்பியது, ஆனால்…” – முகமது யூனுஸ்
    உலகம்

    “வங்கதேசம் இந்தியாவுடன் நல்லுறவையே விரும்பியது, ஆனால்…” – முகமது யூனுஸ்

    adminBy adminJune 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “வங்கதேசம் இந்தியாவுடன் நல்லுறவையே விரும்பியது, ஆனால்…” – முகமது யூனுஸ்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    லண்டன்: “வங்கதேச இடைக்கால அரசாங்கம் இந்தியாவுடன் நல்லுறவையே விரும்பியது, ஆனால் எப்போதும் ஏதோ தவறாகிவிடுகிறது” என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

    லண்டனில் சாத்தம் ஹவுஸ் சிந்தனையாளர் குழுவின் இயக்குநர் பிரான்வென் மேடோக்ஸ் உடன், முகமது யூனுஸ் உரையாடினார். அப்போது, “பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக் கோரி இந்தியாவுக்கு அனுப்பிய ராஜதந்திர குறிப்பை மீண்டும் நினைவூட்டுவீர்களா?” என பிரான்வென் மேடோக்ஸ் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த முகமது யூனுஸ், “அது தொடரும். முழு செயல்முறையும் மிகவும் சட்டப்பூர்வமாகவும், மிகவும் முறையாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவுடன் சிறந்த உறவை உருவாக்க விரும்புகிறோம். அது எங்கள் அண்டை நாடு. அவர்களுடன் எந்த அடிப்படை பிரச்சினையும் இருக்க நாங்கள் விரும்பவில்லை.

    ஆனால் இந்திய பத்திரிகைகளில் இருந்து வரும் அனைத்து போலி செய்திகளாலும் ஒவ்வொரு முறையும் எப்படியோ விஷயங்கள் தவறாகிவிடுகின்றன. அவர்களுக்கு, உயர்மட்ட கொள்கை வகுப்பாளர்களுடன் தொடர்பு இருப்பதே இதற்குக் காரணம் என்று பலர் கூறுகிறார்கள்.

    இதுதான் வங்கதேசத்தை மிகவும் பதட்டமாகவும், மிகவும் கோபமாகவும் ஆக்குகிறது. இந்த கோபத்தை நாங்கள் சமாளிக்க முயல்கிறோம். ஆனால் சைபர்ஸ்பேஸில் தொடர்ந்து பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதிலிருந்து நாம் தப்பிக்க முடியாது. திடீரென்று அவர்கள் ஏதாவது சொல்கிறார்கள், ஏதாவது செய்கிறார்கள், கோபம் திரும்பி வருகிறது.

    குறைந்தபட்சம் ஒரு அமைதியான வாழ்க்கையை உறுதி செய்வதில், இது எங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கிறது.” என்று தெரிவித்தார்.

    ஷேக் ஹசீனா விஷயத்தில், இந்தியாவின் பங்கு தெளிவற்றதாக இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த முகமது யூனுஸ், “ஹசீனாவுக்கு எதிரான அனைத்து கோபமும் இப்போது இந்தியாவுக்கு எதிரானதாக மாற்றப்பட்டுள்ளது, ஏனெனில் அவர் அங்கு சென்றார். பிரதமர் மோடியுடன் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தபோது, ​​நான் சொன்னேன்: ‘நீங்கள் அவரை வரவேற்க விரும்புகிறீர்கள், அந்தக் கொள்கையை கைவிட நான் உங்களை கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் அவர் வங்கதேச மக்களிடம் (ஆன்லைனில்) பேசாமல் இருப்பதை உறுதிசெய்ய எங்களுக்கு உதவுங்கள். எந்த தேதியில், எந்த நேரத்தில் பேசுவார் என்பது அறிவிக்கப்படுகிறது. இது முழு வங்கதேசத்தையும் கோபப்படுத்துகிறது’ என்று கூறினேன்.

    அதற்கு பிரதமர் மோடி, ‘ஹசீனாவின் சமூக ஊடக நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது’ என்று என்னிடம் கூறினார். இது ஒரு வெடிக்கும் பிரச்சினை. சமூக ஊடகங்கள் என்று கூறி நீங்கள் விலகிச் செல்ல முடியாது என்றும் அவர் கூறினார்.”என குறிப்பிட்டார்.

    வங்கதேசத்தில் தேர்தல் மூலம் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்படும்போது அதில் நீங்கள் இருப்பீர்களா என்ற கேள்விக்கு “வாய்ப்பே இல்லை” என பதில் அளித்தார்.

    4 நாள் பயணமாக கடந்த செவ்வாய் கிழமை லண்டன் வந்தார் முகமது யூனுஸ். அப்போது, இங்கிலாந்தில் உள்ள ஹசீனாவின் அவாமி லீக் கட்சி ஆதரவாளர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பயணத்தின் போது அவர் மன்னர் சார்லஸ் III மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மூத்த உறுப்பினர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ‘நாங்கள் தொலைந்துவிட்டோம்’: இந்திய மூல தொழிலதிபர் பரம்ஜித் சிங், 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார், பனியால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்; குற்றம் கடந்த காலத்தில் பணம் செலுத்தாமல் சம்பள தொலைபேசியைப் பயன்படுத்துகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 17, 2025
    உலகம்

    சார்லி கிர்க் பற்றி உங்களுக்குத் தெரியாத 10 விஷயங்கள் | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 17, 2025
    உலகம்

    மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தில் எங்களுக்கு சம்மதமே; ஆனால் இந்தியா ஏற்பதில்லை: பாக். துணை பிரதமர்

    September 17, 2025
    உலகம்

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த படக் யூனிலீவரின் நிதித் தலைவர் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 17, 2025
    உலகம்

    ‘விவரிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் …’: சக ஊழியர்களைத் தாக்கியதற்காக இங்கிலாந்தில் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மூல இருதய அறுவை சிகிச்சை நிபுணர் அமல் போஸ், ‘இது ஊர்சுற்றுவது மட்டுமே’ என்று போலீசாரிடம் கூறினார் – டைம்ஸ் ஆப் இந்தியா

    September 17, 2025
    உலகம்

    காசாவில் இஸ்ரேல் செய்தது இனப்படுகொலை: ஐ.நா. விசாரணை ஆணையம் திட்டவட்டம்

    September 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கொடிக் கம்பங்கள் விதிமுறைகளை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: சென்னை உயர் நீதிமன்றம்
    • சியா விதைகள் சுகாதார அபாயங்கள்: ஹார்வர்ட் டாக்டர் சியா விதைகளை சாப்பிடுவதற்கான மறைக்கப்பட்ட ஆபத்தை வெளிப்படுத்துகிறார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “என் குழந்தைக்கு தந்தை என மாதம்பட்டி ரங்கராஜ் பொறுப்பேற்க வேண்டும்” – ஜாய் கிரிசில்டா
    • ஆகாஷ் பாஸ்கரன் மீதான நடவடிக்கைக்கு தடை: உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு
    • ஒளிரும் சருமத்திற்கான குங்குமப்பூ: பிரகாசம், வடுக்கள் மற்றும் நிறமிக்கு இயற்கை DIY வைத்தியம் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.