Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, January 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»வங்கதேசத்தில் ஹசீனா ஆதரவாளர்கள் – போலீஸார் இடையே மோதல்: 4 பேர் உயிரிழப்பு
    உலகம்

    வங்கதேசத்தில் ஹசீனா ஆதரவாளர்கள் – போலீஸார் இடையே மோதல்: 4 பேர் உயிரிழப்பு

    adminBy adminJuly 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வங்கதேசத்தில் ஹசீனா ஆதரவாளர்கள் – போலீஸார் இடையே மோதல்: 4 பேர் உயிரிழப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

    வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக அவர் தனது பதவியை இழந்து, அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைப்பு சார்பில், நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாணவர்கள் பலர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

    வங்கதேசத்தின் அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய இந்த நிகழ்வு ஓராண்டை நிறைவு செய்ய உள்ளதை முன்னிட்டு, மாணவர்களின் அரசியல் கட்சியான தேசிய குடிமக்கள் கட்சி சார்பில் இந்த மாதத்தில்( ஜூலை ) நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இன்று கோபால்கஞ்ச் நகரில் பேரணி நடத்தப்பட்டது.

    ஷேக் ஹசீனாவின் மூதாதையர்கள் வாழ்ந்த நகரமான இது, அவாமி லீக் கட்சியின் கோட்டையாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை பலத்த பாதுகாப்புடன் பேரணி தொடங்கியது. அப்போது, அவாமி லீக் கட்சியினர், வன்முறையில் ஈடுபட்டனர். பல்வேறு வாகனங்களுக்குத் தீ வைத்த அவர்கள், போலீஸார் மீது தாக்குதல்களை நடத்தினர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    வன்முறையை அடுத்து, மாணவர் தலைவர்கள் காவல் நிலையங்களுக்குள் தஞ்சம் புகுந்தனர். பலர், போலீஸ் பாதுகாப்புடன் அண்டை மாவட்டங்களுக்கு விரைந்தனர்.

    கோபால் கஞ்ச் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து தற்போது அங்கு கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    இதனிடையே, வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாணவர் தலைவர் நஷீத் இஸ்லாம் வலியுறுத்தியுள்ளார். மேலும், அண்டை மாவட்டமான பரித்பூரில் அடுத்த பேரணி நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

    முகம்மது யூனுஸ் பதவியேற்றதில் இருந்து வங்கதேசத்தில் தொடர் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மை இந்துக்களுக்கு எதிராக நடந்த வன்முறைச் சம்பவங்களால், அந்நாடு சர்வதேச அளவில் கடும் விமர்சனங்களைச் சந்தித்தது. சட்டம் ஒழுங்கு நிலைமை மோசடைந்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த யூனுஸ் அரசு தவறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாட்டில் நல்லிணக்கம் குறைந்து வருவதாகவும், மக்களிடையே பிளவு அதிகரித்து வருவதாகவும் கூறும் யூனுஸ் எதிர்ப்பாளர்கள், நிலைமை மேம்படவில்லை என்றால் ஜனநாயகம் ஆபத்துக்குள்ளாகும் என எச்சரித்துள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    காண்க: மினியாபோலிஸ் எதிர்ப்பு மோதலில் ICE முகவர்கள் ஜன்னலை உடைத்து, ‘ஊனமுற்ற’ பெண்ணை காரில் இருந்து இழுத்துச் சென்றது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 15, 2026
    உலகம்

    ‘விசாவை தடை செய்யும் நம்பர் ஒன் நாடு…’: 75 நாடுகளுக்கான விசாக்களை அமெரிக்கா முடக்கியதை அடுத்து சீனா முதல் கட்டுப்பாடுகளுக்கு நிக்கி ஹேலி அழைப்பு | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 15, 2026
    உலகம்

    யார் இந்த ஜக்பிரீத் சிங்? கனடாவில் விசாரணையில் உள்ள இந்திய வம்சாவளி ஆண் மனைவி ‘ரத்தத்தில்’ எட்டு முறை கத்தியால் குத்தப்பட்டதைக் கண்டுபிடித்தார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 14, 2026
    உலகம்

    தில்பர்ட் எப்படி இந்திய ஐஐடியை அமெரிக்க கலாச்சாரத்தில் அறிமுகப்படுத்தினார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 14, 2026
    உலகம்

    கனடா முதிய தம்பதி கொலை: 3 இந்தியர்கள் மீது குற்றச்சாட்டு; கல்லூரிப் பதிவு இல்லாத மாணவர் விசா வைத்திருப்பவர் குற்றம் சாட்டப்பட்டார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 14, 2026
    உலகம்

    ட்ரம்ப் துஷ்பிரயோகம் செய்தார் மற்றும் ‘பெடோஃபைல் ப்ரொடெக்டர்’ என்று கத்திய ஃபோர்டு தொழிலாளிக்கு நடுவிரலைக் காட்டுகிறார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இளவரசி லியோனோர்: 150 ஆண்டுகளில் ஸ்பெயினின் முதல் ராணியாக ஆவதற்கு தயாராக உள்ள 20 வயது ஜெனரல் இசட் அரச குடும்பத்தைச் சந்திக்கவும்! | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • காண்க: மினியாபோலிஸ் எதிர்ப்பு மோதலில் ICE முகவர்கள் ஜன்னலை உடைத்து, ‘ஊனமுற்ற’ பெண்ணை காரில் இருந்து இழுத்துச் சென்றது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘விசாவை தடை செய்யும் நம்பர் ஒன் நாடு…’: 75 நாடுகளுக்கான விசாக்களை அமெரிக்கா முடக்கியதை அடுத்து சீனா முதல் கட்டுப்பாடுகளுக்கு நிக்கி ஹேலி அழைப்பு | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 2,000 ஆண்டுகள் பழமையான ரோமன் ஒயின் விஞ்ஞானிகளால் மீண்டும் உருவாக்கப்பட்டு அதன் சுவை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உங்கள் பிளாட்டின் பால்கனியில் சூரியகாந்தி வளர்க்க முடியுமா? இதோ அவற்றை பூக்க வைப்பது எப்படி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.