Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»மழை, வெள்ள பாதிப்​பு​களால் கடந்த 3 வாரங்​களில் பாகிஸ்தானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 ஆக உயர்வு
    உலகம்

    மழை, வெள்ள பாதிப்​பு​களால் கடந்த 3 வாரங்​களில் பாகிஸ்தானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 ஆக உயர்வு

    adminBy adminJuly 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மழை, வெள்ள பாதிப்​பு​களால் கடந்த 3 வாரங்​களில் பாகிஸ்தானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 ஆக உயர்வு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இஸ்லாமாபாத்: ​பாகிஸ்​தானில் மழை, வெள்ள பாதிப்​பு​களால் கடந்த 3 வாரங்​களில் 150-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர்.

    பாகிஸ்​தானில் பஞ்​சாப், கைபர் பக்​துன்​வா, ஜில்​ஜிட்​-​பால்​டிஸ்​தான் உள்​ளிட்ட பகு​தி​களில் கடந்த சில வாரங்​களாக கனமழை பெய்து வரு​கிறது. தலைநகர் இஸ்​லா​மா​பாத், ராணுவ தலை​மையக​மான ராவல்​பிண்டி உட்பட பல்​வேறு நகரங்​கள், கிராமங்​கள் வெள்​ளத்​தில் மூழ்கி உள்​ளன.ஜீலம், சிந்​து, சட்​லஜ், ஜில்​ஜிட், ஸ்வாட் உள்​ளிட்ட நதி​களில் வெள்​ளம் பெருக்​கெடுத்து ஓடு​கிறது. கனமழை காரண​மாக பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாகாணம் முழு​வதும் அவசர நிலை அமல் செய்​யப்​பட்டு இருக்​கிறது.

    இதுகுறித்து பாகிஸ்​தான் பேரிடர் மீட்பு துறை​யின் செய்​தித் தொடர்​பாளர் பரூக் அகமது கூறும்​போது, “கனமழை காரண​மாக பாகிஸ்​தான் முழு​வதும் பேரழிவு ஏற்​பட்​டிருக்​கிறது. பல்​வேறு கிராமங்​கள், நகரங்​கள் வெள்​ளத்​தில் மூழ்கி உள்​ளன. மழை, வெள்ள பாதிப்​பு​களால் கடந்த புதன்​கிழமை மட்​டும் 30 பேர் உயி​ரிழந்​தனர். கடந்த 3 வாரங்​களில் 150-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். சுமார் 300-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்து உள்​ளனர். ஆயிரக்​கணக்​கான ஏக்​கரில் பயி​ரிடப்​பட்டு இருந்த பயிர்​கள் நாச​மாகி உள்​ளன” என்று தெரி​வித்​தார்.

    சர்​வ​தேச சுற்​றுச்​சூழல் ஆர்​வலர்​கள் கூறிய​தாவது:பரு​வநிலை மாறு​பாட்​டால் பாகிஸ்​தான் மிக​வும் மோச​மாக பாதிக்​கப்​பட்டு உள்​ளது. கடந்த 2022-ம் ஆண்​டில் ஏற்​பட்ட பெரு​மழை​யின்​போது பாகிஸ்​தானில் 2,000-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​தனர். 40 பில்​லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்​பட்​டது. தற்​போதும் அது​போன்ற சூழல் உரு​வாகி வரு​கிறது. பாகிஸ்​தான் முழு​வதும் 13,000 மலைச்​சிகரங்​கள் உள்​ளன. பரு​வநிலை மாறு​பாட்​டால் அவற்றின் பனி உருகி பெரு​வெள்​ளத்தை ஏற்​படுத்தி வரு​கின்​றன.

    பாகிஸ்​தானின் பொருளா​தா​ரம் மிக மோச​மாக பாதிக்​கப்​பட்டு இருக்​கிறது. அந்த நாட்டு மக்​கள் தொகை​யில் 50 சதவீதத்​துக்​கும் மேற்​பட்​டோர் குடிசை வீடு​களில் வசிக்​கின்​றனர். இதன் ​காரண​மாக இயற்கை பேரிடரின்​போது பெரும் பாதிப்​பு​கள் ஏற்​படு​கின்​றன. பரு​வநிலை மாறு​பாட்டை சமாளிக்க பாகிஸ்​தான் அரசு போதிய நடவடிக்​கைகளை எடுத்​தால் மட்​டுமே வெள்ள பாதிப்​பு​களில் இருந்து மக்​களை காப்​பாற்ற முடி​யும். இவ்​வாறு சர்​வ​தேச சுற்​றுச்​சூழல்​ ஆர்​வலர்​கள்​ தெரிவித்​துள்​ளனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் மூவர் அமைச்சர்களாக பதவியேற்பு!

    September 15, 2025
    உலகம்

    வத்திக்கான் சிட்டி திகைப்புகள்: எலோன் மஸ்கின் சகோதரர் கிம்பலின் 3,000 ட்ரோன்கள் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா மீது தலைசிறந்த சின்னங்களுடன் வானத்தை ஒளிரச் செய்கின்றன | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 15, 2025
    உலகம்

    பாப் வைலான் யார்? பிரிட்டிஷ் பங்க்-ராப் இரட்டையர் கேலிக்கூத்துகள் சார்லி கிர்க்கின் படுகொலை, அவரை ஒரு துண்டு *** | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 15, 2025
    உலகம்

    ‘அவளை உதைத்து முத்திரை குத்துவதற்கு முன்பு பலவீனமான பெண்மணியைத் துரத்தினார்’: இந்திய-ஆஜின் மனிதன் இங்கிலாந்தில் தாயைக் கொல்கிறான்; ஆயுள் சிறையில் அடைக்கப்பட்டார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 15, 2025
    உலகம்

    பிரச்சினையை பேசிதான் தீர்க்க முடியும்: அமெரிக்காவின் 100% வரி எச்சரிக்கை பற்றி சீனா கருத்து

    September 15, 2025
    உலகம்

    ‘கொடூரமான’: விவேக் ராமசாமி டல்லாஸில் சந்திர நாகமல்லாயை தலை துண்டிக்கப்படுவதைப் பற்றி பேசுகிறார், அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடவில்லை – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மாரடைப்பு காரணங்கள்: அடைபட்ட தமனிகள் அல்ல: மாயோ கிளினிக் ஆய்வு இளைய பெண்களில் மாரடைப்புக்கான மறைக்கப்பட்ட காரணங்களை வெளிப்படுத்துகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அண்ணா பிறந்தநாள் விழா: குன்னூரில் திமுக, அதிமுக இடையே மோதல்!
    • நாள்பட்ட தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிறதா? இது மூளைக்கு ஒரு நேர வெடிகுண்டு – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • புதுச்சேரியில் கூட்டணியை வலுப்படுத்த பாஜக ஆலோசனை
    • இதய ஆரோக்கியம்: உங்கள் இதய ஆரோக்கியத்தைப் பற்றி உங்கள் நாக்கு என்ன சொல்கிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.