Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, February 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»போர் காரணமாக உக்ரைனில் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு: ஐ.நா தகவல்
    உலகம்

    போர் காரணமாக உக்ரைனில் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு: ஐ.நா தகவல்

    adminBy adminJuly 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    போர் காரணமாக உக்ரைனில் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு: ஐ.நா தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    உக்ரைனில் மூன்றரை ஆண்டுகளாக நடந்து வரும் போர் காரணமாக உள்நாட்டில் போதைப் பொருள் கடத்தல், ஆயுதங்கள் கடத்தல், மனிதர்களை கடத்துதல், பொருளாதார குற்றங்கள் உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

    ரஷ்யா தொடுத்த போர் தொடங்கி மூன்றரை ஆண்டுகள் ஆகி உள்ள நிலையில், உக்ரைனில் நிகழும் குற்றங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக ஐ.நா போதைப்பொருள் மற்றும் குற்றப்பதிவு அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் மற்றும் உற்பத்தி, ஆன்லைன் மோசடிகள், ஆயுதக் கடத்தல், பொருளாதாரக் குற்றங்கள், ஆட்கடத்தல், சட்டவிரோத வெளியேற்றம் ஆகிய 6 அம்சங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு ஐ.நா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையின் விவரம்: உக்ரைன் மக்களுக்கு போர் சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. அதோடு, திட்டமிட்ட முறையில் நடக்கும் குற்றங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது. போருக்குப் பிந்தைய மறுகட்டமைப்புக்கான பயணத்தில் இது ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.

    2022 முதல் உக்ரைனில் இருந்து கொகைன், ஹெராயின் போதைப் பொருட்கள் கடத்துவது வெகுவாகக் குறைந்துள்ளது. அதேநேரத்தில், கேத்தினோன்ஸ், மெதடோன் போன்ற சிந்தடிக் போதைப் பொருட்களின் கடத்தல் மற்றும் உற்பத்தி அதிகரித்துள்ளது. மெதடோனைப் பொறுத்தவரை உற்பத்தியில் பெரும்பகுதி உள்நாட்டிலேயே கடத்தப்படுகிறது. ஏனெனில், உள்நாட்டில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

    போர் காரணமாக உள்நாட்டில் ஆயுதங்கள் கிடைப்பது எளிதாகியுள்ளது. போர்க் களத்தில் உள்ள உபரி ஆயுதங்கள் பொதுமக்களைச் சென்றடைவதால் வன்முறை அதிகரிப்பதற்கு அது வழிவகுக்கிறது. உக்ரைனில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவது தொடர்பாக ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றபோதிலும், அது குறித்து கண்காணிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    போர் காரணமாக உக்ரைனில் இருந்து 1.4 கோடி மக்கள் இடம் பெயர்ந்துள்ளார்கள். அவ்வாறு இடம்பெயர்பவர்களுக்கு மனிதாபிமான ரீதியில் உதவுவதாகக் கூறி சில குழுக்கள், அவர்களைக் கடத்தி கட்டாய உழைப்பை சுரண்டுகின்றன. நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கடத்துவது குறைந்துள்ளது. எனினும், உள்நாட்டிலேயே மனிதர்கள் கடத்தப்படுவதும் அவர்களை கட்டாய பணிகளில் சேர்ப்பதும் அதிகரித்துள்ளது என்று ஐ.நா தெரிவித்துள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    பயத்திலிருந்து முதல் வீட்டிற்கு: இந்திய வம்சாவளி மருத்துவர் அமெரிக்காவில் தாயின் குடியேறிய வெற்றிப் பயணத்தைப் பகிர்ந்து கொள்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 11, 2026
    உலகம்

    பொய்யான வால்மார்ட் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் வழக்குத் தாக்கல் செய்தார்: ‘என் வாழ்க்கையின் மிகப்பெரிய தலைவலி’ – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 11, 2026
    உலகம்

    ‘கோ பேக் டு இந்தியா’, ‘டை நாஜி’: மெல்போர்ன் அப்பா காரை சுத்தம் செய்யும் போது இனவெறிக் குறிப்புகளைக் கண்டார்; இத்தகைய தாக்குதல்களுக்கு எந்த காரணமும் இல்லை – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 10, 2026
    உலகம்

    ‘நீங்கள் மருத்துவத்தில் தோல்வியடைந்தீர்கள், மனிதநேயம்’: எப்ஸ்டீனின் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்த மகளிர் மருத்துவ நிபுணர்களை இந்திய வம்சாவளி மருத்துவர் வெடிக்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 9, 2026
    உலகம்

    பரபரப்பான டொராண்டோ மாலுக்கு வெளியே இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் கொல்லப்பட்டார், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைப் பற்றி காவல்துறைக்கு துப்பு இல்லை – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 9, 2026
    உலகம்

    சிங்கப்பூரில் புறாக்களுக்கு உணவளித்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு ரூ.2 லட்சம் அபராதம்; அவள் வேலையில்லாதவள், சமூக சேவை செய்வேன் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 6 வாஸ்து பரிந்துரைக்கப்பட்ட ஓவியங்கள் செல்வத்தையும் செழிப்பையும் ஈர்க்க உங்கள் வீட்டில் இருக்க வேண்டும்
    • “ஜெனரல் இசட் சோம்பேறி இல்லை. அர்த்தமற்ற வாழ்க்கை அவர்களுக்கு ஒவ்வாமை”: ‘மம்மா சார்’ கர்னல் ராஜீவ் பர்வான் இன்றைய இளைஞர்களைப் பற்றி உண்மையாக கூறுகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • குஜராத்தின் சூரத்தில் உள்ள 5 ரியல் எஸ்டேட் ஹாட்ஸ்பாட்கள் சொத்து தேவையை அதிகரிக்கின்றன
    • பயத்திலிருந்து முதல் வீட்டிற்கு: இந்திய வம்சாவளி மருத்துவர் அமெரிக்காவில் தாயின் குடியேறிய வெற்றிப் பயணத்தைப் பகிர்ந்து கொள்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 5 தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒவ்வொரு குடியிருப்பு கட்டிடத்திலும் இருக்க வேண்டும்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.