Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, December 31
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»போர் காரணமாக உக்ரைனில் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு: ஐ.நா தகவல்
    உலகம்

    போர் காரணமாக உக்ரைனில் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு: ஐ.நா தகவல்

    adminBy adminJuly 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    போர் காரணமாக உக்ரைனில் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு: ஐ.நா தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    உக்ரைனில் மூன்றரை ஆண்டுகளாக நடந்து வரும் போர் காரணமாக உள்நாட்டில் போதைப் பொருள் கடத்தல், ஆயுதங்கள் கடத்தல், மனிதர்களை கடத்துதல், பொருளாதார குற்றங்கள் உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

    ரஷ்யா தொடுத்த போர் தொடங்கி மூன்றரை ஆண்டுகள் ஆகி உள்ள நிலையில், உக்ரைனில் நிகழும் குற்றங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக ஐ.நா போதைப்பொருள் மற்றும் குற்றப்பதிவு அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் மற்றும் உற்பத்தி, ஆன்லைன் மோசடிகள், ஆயுதக் கடத்தல், பொருளாதாரக் குற்றங்கள், ஆட்கடத்தல், சட்டவிரோத வெளியேற்றம் ஆகிய 6 அம்சங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு ஐ.நா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையின் விவரம்: உக்ரைன் மக்களுக்கு போர் சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. அதோடு, திட்டமிட்ட முறையில் நடக்கும் குற்றங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது. போருக்குப் பிந்தைய மறுகட்டமைப்புக்கான பயணத்தில் இது ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.

    2022 முதல் உக்ரைனில் இருந்து கொகைன், ஹெராயின் போதைப் பொருட்கள் கடத்துவது வெகுவாகக் குறைந்துள்ளது. அதேநேரத்தில், கேத்தினோன்ஸ், மெதடோன் போன்ற சிந்தடிக் போதைப் பொருட்களின் கடத்தல் மற்றும் உற்பத்தி அதிகரித்துள்ளது. மெதடோனைப் பொறுத்தவரை உற்பத்தியில் பெரும்பகுதி உள்நாட்டிலேயே கடத்தப்படுகிறது. ஏனெனில், உள்நாட்டில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

    போர் காரணமாக உள்நாட்டில் ஆயுதங்கள் கிடைப்பது எளிதாகியுள்ளது. போர்க் களத்தில் உள்ள உபரி ஆயுதங்கள் பொதுமக்களைச் சென்றடைவதால் வன்முறை அதிகரிப்பதற்கு அது வழிவகுக்கிறது. உக்ரைனில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவது தொடர்பாக ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றபோதிலும், அது குறித்து கண்காணிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    போர் காரணமாக உக்ரைனில் இருந்து 1.4 கோடி மக்கள் இடம் பெயர்ந்துள்ளார்கள். அவ்வாறு இடம்பெயர்பவர்களுக்கு மனிதாபிமான ரீதியில் உதவுவதாகக் கூறி சில குழுக்கள், அவர்களைக் கடத்தி கட்டாய உழைப்பை சுரண்டுகின்றன. நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கடத்துவது குறைந்துள்ளது. எனினும், உள்நாட்டிலேயே மனிதர்கள் கடத்தப்படுவதும் அவர்களை கட்டாய பணிகளில் சேர்ப்பதும் அதிகரித்துள்ளது என்று ஐ.நா தெரிவித்துள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ‘H-1B பணியாளர்களை ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ என்று அழைப்பது அரசியல் நாடகம்’: பணியாளர் தரவுகள் குறித்து புளோரிடா கவர்னரை கடுமையாக விமர்சித்த வைரல் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 31, 2025
    உலகம்

    அமேசானுக்கு முன், டோனி மோரிசன் இருந்தார்: மெக்கென்சி ஸ்காட்டின் $19 பில்லியன் பரோபகாரத்திற்குப் பின்னால் உள்ள வழிகாட்டி | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 31, 2025
    உலகம்

    மெஹக் குக் இந்தியரா? ஓஹியோ வழக்கறிஞரைப் பற்றி Googleளில் அதிகம் கேட்கப்பட்ட கேள்விகள் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 30, 2025
    உலகம்

    ஒலிம்பிக்கில் இருந்து பாதாள உலகம் வரை: எஃப்.பி.ஐ-யின் மோஸ்ட் வான்டட் ஃப்யூஜிடிவ் ரியான் திருமணத்தின் 40 மில்லியன் டாலர் மோட்டார் சைக்கிள் சேகரிப்பு பறிமுதல் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 30, 2025
    உலகம்

    ‘முதலில் உங்கள் தாத்தாவை மாற்றுங்கள்’: கத்தோலிக்க மாஸ்ஸில் கலந்துகொள்ள நெதன்யாகுவை வலியுறுத்தியதற்காக நளின் ஹேலி விமர்சித்தார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 30, 2025
    உலகம்

    இடைநிறுத்தப்பட்ட உரிமத்துடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓட்டுநர் கனடாவில் திருடப்பட்ட டிரக்கை போலீஸ் க்ரூசர் மீது மோதியுள்ளார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஒளியியல் மாயை: கழுகு போன்ற கூர்மையான கண்கள் உள்ளவர்கள் மட்டுமே 17 வினாடிகளில் ஒற்றைப்படை எண்களைக் கண்டறிய முடியும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • IISc இன் புதிய மூலக்கூறு தொழில்நுட்பம் மூளை செயல்பாடுகளை பிரதிபலிக்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 5 புதிய எதிர்பாராத ஜோடிகள் மற்றும் 2025 இன் முக்கிய பிரபலங்களின் திருமணங்கள்
    • இந்த 4 குளிர்பானங்கள் உங்கள் குளிர்கால இருமல் மற்றும் சளியை மோசமாக்கும்: மறைந்திருக்கும் அபாயங்களை வெளிப்படுத்தும் ஊட்டச்சத்து நிபுணர் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 2025 இல் மக்கள் சத்தியம் செய்த சுகாதாரப் பழக்கங்கள்: 2026 இல் எதைக் கடைப்பிடிக்க வேண்டும்? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.