Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெறும்: பொதுமக்கள் இன்று அஞ்சலி செலுத்தலாம்
    உலகம்

    போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெறும்: பொதுமக்கள் இன்று அஞ்சலி செலுத்தலாம்

    adminBy adminApril 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெறும்: பொதுமக்கள் இன்று அஞ்சலி செலுத்தலாம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வாடிகன் சிட்டி: மறைந்த போப் பிரான்சிஸ் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெறும் வாடிகன் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ் நேற்று முன்தினம் தனது 88-வது வயதில் காலமானார். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலமின்றி இருந்த அவர், அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    எனினும் தேவாலயப் பணிகளை அவர் தொடர்ந்து செய்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு அவர் ஆசி வழங்கினார்.

    இந்நிலையில் மறுநாளான திங்கட்கிழமை காலையில் உள்ளூர் நேரப்படி காலை 7.35 மணிக்கு காலமானார். பெருமூளை பக்கவாதம், கோமா, இதயம் செயலிழப்பு என அடுத்தடுத்த பாதிப்புகளால் அவரது உயிர் பிரிந்ததாக வாடிகன் தெரிவித்தது.

    இறப்புக்கான காரணம் குறித்த மருத்துவ அறிக்கையில் இரண்டாம் வகை நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சுவாசக் கோளாறு, நிமோனியா உள்ளிட்ட நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளும் விவரிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் திறந்த சவப்பெட்டியில் போப் பிரான்சிஸ் உடல் வைக்கப்பட்டிருக்கும் முதல் புகைப்படம் மற்றும் வீடியோவை வாடிகன் நேற்று வெளியிட்டது. அதில், மறைந்த போப்பாண்டவரின் உடல் சிவப்பு நிற வழிபாட்டு அங்கி அணிவிக்கப்பட்டு தலையில் மிட்ரே என்ற தலைப்பாகை மற்றும் கைகளில் ஜெபமாலையுடன் வைக்கப்பட்டு இருப்பது தெரிகிறது.

    வாடிகனில் அவர் வசித்த காசா சாண்டா மார்ட்டா இல்லத்தின் தனிப்பட்ட தேவாலயத்தில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. போப் பிரான்சிஸ், அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் பிறந்தவர். லத்தீன் அமெக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் போப் என்ற பெருமைக்குரியவர். கடந்த 2013 மார்ச் மாதம் அவரது பதவிக் காலம் தொடங்கியது. 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அவரது பதவிக் காலம் கருணை, பணிவு, சீர்திருத்தம், ஏழைகள் மீதான உலகளாவிய கவனம் உள்ளிட்ட சிறப்புகளை கொண்டிருந்தது.

    போப் ஆண்டவர் மறையும்போது அவரது உடலை வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பேராலயத்தில் நல்லடக்கம் செய்வது பாரம்ரிய வழக்கமாகும். ஆனால் போப் பிரான்சிஸ் தனது உடலை ரோமில் உள்ள புனித மேரி மேஜர் பேராலயத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என இறுதி சாசனத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தனது கல்லறை எளிய முறையில் எவ்வித அலங்காரமும் இன்றி அமைக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இந்நிலையில் போப் பிரான்சிஸ் உடல் அவரது இல்லத்திலிருந்து பொதுமக்களின் அஞ்சலிக்காக செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்துக்கு இன்று எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு இறுதிச் சடங்கு தொடங்க உள்ளது.

    இதில் உலகம் முழுவதிலும் இருந்து கார்டினல்கள், பேராயர்கள், ஆயர்கள் மற்றும் பாதிரியார்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முதல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரை பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். இதையடுத்து போப் பிரான்சிஸ் உடல் ரோம் நகரில் உள்ள புனித மேரி பேராலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

    நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் வாடிகன் நகருக்கு வெளியில் அடக்கம் செய்யப்படும் முதல் போப் என்ற பெருமையை பிரான்சிஸ் பெறுவார். போப் பிரான்ஸ்சிஸ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர் பிறந்த அர்ஜென்டினாவில் ஒரு வாரத்துக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் நேற்று முதல் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. வெளிநாட்டு மதத் தலைவர் ஒருவரின் மறைவுக்கு இந்தியாவில் துக்கம் அனுசரிக்கப்படுவது அரிய நிகழ்வாகும்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல் – 16 ராணுவ வீரர்கள் பலி

    June 28, 2025
    உலகம்

    காசாவில் ஒரு வாரத்தில் போர் நிறுத்தம்: ட்ரம்ப் நம்பிக்கை

    June 28, 2025
    உலகம்

    ”இஸ்ரேலுக்கு ‘அப்பா’விடம் ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை” – ஈரான் காட்டம்

    June 28, 2025
    உலகம்

    கொமேனியை அழிக்கும் திட்டம் இருந்தது: இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் கருத்து

    June 28, 2025
    உலகம்

    சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவுடன் விரைவில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வோம்: ட்ரம்ப் சூசகம்

    June 28, 2025
    உலகம்

    யுரேனியம் செறிவூட்டலை கைவிட்டால் ஈரானுக்கு பல சலுகை: அமைதி பேச்சுவார்த்தையில் அமெரிக்கா மும்முரம்

    June 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
    • அமித் ஷா கருத்தால் அதிமுக – பாஜகவில் சலசலப்பு: கூட்டணியில் பங்கா, ஆட்சியில் பங்கா என தொடரும் குழப்பம்
    • பிராடாவின் சர்ச்சைக்குரிய கோலபுரி சாப்பல்: கலாச்சார ஒதுக்கீடு அல்லது உத்வேகம்? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நா.முத்துக்குமாரின் கவிதையை திரைப்படமாக்கும் வெற்றிமாறன்!
    • காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், சூளைமேடு அஞ்சுகம் பள்ளிகளில் ரூ.14 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.