Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»போதைப் பொருள் கடத்தலில் இந்தியா, சீனா உள்ளிட்ட 23 நாடுகளுக்கு முக்கியப் பங்கு: ட்ரம்ப்
    உலகம்

    போதைப் பொருள் கடத்தலில் இந்தியா, சீனா உள்ளிட்ட 23 நாடுகளுக்கு முக்கியப் பங்கு: ட்ரம்ப்

    adminBy adminSeptember 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    போதைப் பொருள் கடத்தலில் இந்தியா, சீனா உள்ளிட்ட 23 நாடுகளுக்கு முக்கியப் பங்கு: ட்ரம்ப்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வாஷிங்டன்: போதைப் பொருள் கடத்தல், உற்பத்தியில் சீனா, ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 23 நாடுகளுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

    ட்ரம்ப் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், ஆப்கானிஸ்தான், தி பஹாமாஸ், பெலிஸ், பொலிவியா, மியான்மர், சீனா, கொலம்பியா, கோஸ்டா ரிகா, தி டொமினிசியன் ரிபப்ளிக், ஈகுவேடார், எல் சால்வடார், கவுதமாலா, ஹைதி, ஹொண்டூராஸ், இந்தியா, ஜமைக்கா, லாவோஸ், மெக்சிகோ, நிகாராகுவா, பாகிஸ்தான், பனாமா, பெரு, வெனிசுலா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகள் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ட்ரோன் மூலம் போதைப் பொருள் கடத்தல் என்பது அதிகமாக உள்ளது. போதைப் பொருளை உற்பத்தி செய்வது, கடத்துவது போன்ற செயல்கள் மிகுந்திருப்பதால் இந்த நாடுகள் அமெரிக்காவுக்கும் அதன் குடிமக்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. போதைப் பொருளால் அமெரிக்காவில் 18 முதல் 44 வயது வயதுக்கு உட்பட்டோர் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதால் இந்த நாடுகளுடன் அமெரிக்காவுக்கு நல்லுறவு இல்லை, இந்த நாடுகள் போதை ஒழிப்பில் சரிபட செயல்படவில்லை என்று அர்த்தம் இல்லை. இவற்றில் ஆப்கன், பொலிவியா, மியான்மர், கொலம்பியா மற்றும் வெனிசுலா நாடுகள் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு ட்ரம்ப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்விகாரத்தில் சீனாவைப் பற்றி ட்ரம்ப் கூறுகையில், “ஃபெண்டானில் போன்ற போதை மருந்துகள் உருவாக்கத்துக்கான மூலப் பொருட்களை பெருமளவில் வழங்குவதில் சீனா முதலிடத்தில் உள்ளது பல இடங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சீனா சின்தடிக் போதஒப் பொருட்களான நிடாசெனஸ் மற்றும் மெத்தம்பெட்டமைன் தயாரிப்பிலும் முதலிடத்தில் உள்ளது. சீன அரசு இதுபோன்ற ஆபத்தான வேதிப் பொருட்கள் போதைப் பொருள் தயாரிப்பு, கடத்தல் கும்பல் வசம் கிடைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.” என்றார்.

    ஆப்கானிஸ்தான் பற்றிப் பேசும்போது, “போதைப் பொருள் கட்டுப்பாடு குறித்து தலிபான் மிகப்பெரிய வாக்குறுதிகளைக் கொடுத்தது. ஆனாலும் அது எதுவுமே நடைமுறைப் படுத்தவில்லை.” என்று ட்ரம்ப் கூறினார்.

    இந்தியாவும், சீனாவும் போதைப் பொருள் தயாரிப்புக்கான மூலப் பொருட்கள், உபகரணங்களை விநியோகிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என அமெரிக்க புலனாய்வுத் துறை அறிக்கை தெரிவித்துள்ளது. போதைப் பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்ட வருவாயானது, எல்லைகள் கடந்து குற்றவாளிகளுக்கு நிதி ஆதாரம் அளிக்கிறது, தீவிரவாதச் செயல்களுக்கான நிதித் தேவையை பூர்த்தி செய்கிறது. தலிபான் உறுப்பினர்கள் சிலர் இன்னமும் போதைப் பொருள் விற்பனை மூலம் வரும் பணத்தால் செழிப்புடன் இருக்கின்றனர். ஆப்கானிஸ்தான் இவ்விவகாரத்தில் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறேன் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    பாக் – சவுதி பாதுகாப்பு ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்: வெளியுறவு அமைச்சகம்

    September 18, 2025
    உலகம்

    ‘எலோன் மஸ்க்கை சந்திக்க எந்த திட்டமும் இல்லை’: ஓபன் ஏஐஏ திரைப்படத்தில் நடிகர் தனது பாத்திரத்தில் நடித்தவர் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியை சந்திக்க மறுக்கிறார்; இங்கே ஆச்சரியமான காரணம் | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 18, 2025
    உலகம்

    ‘நாங்கள் தொலைந்துவிட்டோம்’: இந்திய மூல தொழிலதிபர் பரம்ஜித் சிங், 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார், பனியால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்; குற்றம் கடந்த காலத்தில் பணம் செலுத்தாமல் சம்பள தொலைபேசியைப் பயன்படுத்துகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 17, 2025
    உலகம்

    சார்லி கிர்க் பற்றி உங்களுக்குத் தெரியாத 10 விஷயங்கள் | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 17, 2025
    உலகம்

    மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தில் எங்களுக்கு சம்மதமே; ஆனால் இந்தியா ஏற்பதில்லை: பாக். துணை பிரதமர்

    September 17, 2025
    உலகம்

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த படக் யூனிலீவரின் நிதித் தலைவர் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • புழல் சிறை பண்ணையில் 4 நாட்களில் 2 ஆயிரம் கோழிகள் மர்மமான முறையில் உயிரிழப்பு
    • தர்பூசணி நன்மைகள்: புரோஸ்டேட் புற்றுநோய், இதய ஆரோக்கியம் மற்றும் பலவற்றிற்கான தர்பூசணி உங்கள் இயற்கையான அதிகார மையமாக இருக்கலாம்: மனதுடன் நுகரும்போது மறைக்கப்பட்ட சுகாதார நன்மைகளைத் திறக்கவும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பாக் – சவுதி பாதுகாப்பு ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்: வெளியுறவு அமைச்சகம்
    • மகாளய அமாவாசை: ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகள்
    • லிம்போமா அறிகுறிகள்: வைரஸ் தொற்றுநோயைப் பிரதிபலித்தல், லிம்போமாவின் 5 ஆரம்ப அறிகுறிகள் ஒருவர் புறக்கணிக்கக்கூடாது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.