Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»புத்தாண்டை முன்னிட்டு மியான்மரில் அரசியல் கைதிகள் 22 பேர் உட்பட 4,900 பேர் விடுதலை
    உலகம்

    புத்தாண்டை முன்னிட்டு மியான்மரில் அரசியல் கைதிகள் 22 பேர் உட்பட 4,900 பேர் விடுதலை

    adminBy adminApril 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    புத்தாண்டை முன்னிட்டு மியான்மரில் அரசியல் கைதிகள் 22 பேர் உட்பட 4,900 பேர் விடுதலை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    நேபிடா: பர்மிய புத்தாண்டை முன்னிட்டு சிறையில் உள்ள அரசியல் கைதிகள் 22 பேர் உட்பட 4,900 பேருக்கு மியான்மர் ராணுவ அரசின் தலைவர் மின் ஆங் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார்.

    மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டிலிருந்து ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூ கி சிறையில் அடைக்கப்பட்டார். மியான்மர் தற்போது உள்நாட்டு போரை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இங்கு கடந்த மாதம் 28-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 3,725 பேர் உயிரிழந்தனர். பாரம்பரிய கட்டிடங்கள் எல்லாம் இடிந்தன. நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் விரைவில் மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என ராணுவத் தலைவர் உறுதியளித்துள்ளர்.

    இந்நிலையில் மியான்மரில் பர்மிய புத்தாண்டு திங்யான் கடந்த 13-ம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. மியான்மரில் புத்தாண்டு விடுமுறையில் சிறைக் கைதிகள் விடுவிக்கப்படுவது வழக்கம். இதை முன்னிட்டு, அரசியல் கைதிகள் 22 பேர் உட்பட 4,900 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கி சிறையில் இருந்து விடுவிக்க ராணுவ ஆட்சியாளர் மின் ஆங் உத்தரவிட்டார். வெளிநாட்டு கைதிகள் 13 பேரும் விடுவிக்கப்பட்டு, அவர்களது நாட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் சட்டத்தை மீறினால், அவர்கள் புது தண்டனையுடன், பழைய வழக்கில் மீதுமுள்ள தண்டனையை சேர்த்து அனுபவிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

    கொடிய குற்றங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தவிர மற்றவர்களுக்கு தண்டனை குறைக்கப்பட்டது. யாங்கூன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களை சிறை வாசலில் குடும்பத்தினர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

    சிறையில் ஆங் சான் சூகி: ஆங் சான் சூ கி உட்பட அரசியல் கைதிகள் 22,197 பேர் இன்னும் மியான்மர் சிறைகளில் உள்ளனர். மியான்மரில் புத்தாண்டு விடுமுறையிலும், ராணுவத்துக்கும், ஜனநாயக ஆதரவு படையினருக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. ஆனால், உயிரிழப்பு எண்ணிக்கை தெரியவில்லை.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    எச்1பி விசாவுக்கு ஒருமுறை மட்டுமே கட்டணம்: ட்ரம்பின் புதிய ஆணை குறித்து அமெரிக்க அரசு விளக்கம்

    September 22, 2025
    உலகம்

    ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புதிய எச்சரிக்கை

    September 21, 2025
    உலகம்

    எச்1பி விசா கட்டண உயர்வு: யாருக்கு பொருந்தும்? யாருக்கு விலக்கு?

    September 21, 2025
    உலகம்

    கரோனா பரவல் குறித்து முதலில் தகவல் தெரிவித்த சீன பெண் பத்திரிகையாளருக்கு தண்டனை நீட்டிப்பு

    September 21, 2025
    உலகம்

    இதுவரை 7 போர்களை நிறுத்தியுள்ளேன்; எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும்: ட்ரம்ப்

    September 21, 2025
    உலகம்

    போர்டில் பீதி: K 100K H -1B விசா கட்டணம் இந்திய பயணிகளிடையே விமான குழப்பத்தைத் தூண்டுகிறது – வாட்ச் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சிறந்த நிர்வாகத்துக்கு குடிமைப் பணியாளர்கள்தான் முதுகெலும்பு: முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம்
    • 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மாணவர்கள் பெயர் பட்டியலில் விவரங்களை சரிபார்க்க வேண்டும்: தேர்​வுத் ​துறை உத்​தர​வு
    • ஏழைகளின் ‘டாக்டர்’ கனவை நனவாக்கி வரும் 7.5% உள் இடஒதுக்கீடு: அரசு பள்ளி மாணவர் 632 பேர் மருத்துவம் படிக்க வாய்ப்பு
    • 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா | IND vs PAK சூப்பர் 4
    • எச்1பி விசாவுக்கு ஒருமுறை மட்டுமே கட்டணம்: ட்ரம்பின் புதிய ஆணை குறித்து அமெரிக்க அரசு விளக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.