Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, January 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் பாக். விமான தளங்கள் மீது தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒப்புதல்
    உலகம்

    பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் பாக். விமான தளங்கள் மீது தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒப்புதல்

    adminBy adminMay 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் பாக். விமான தளங்கள் மீது தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒப்புதல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இந்திய ராணுவம் பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது என்று அந்த நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

    துருக்கி, ஈரான், அஜர்பைஜான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று அஜர்பைஜானின் லாசின் நகரில் முகாமிட்டிருந்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    கடந்த 10-ம் தேதி அதிகாலையில் தொழுகையை முடித்த பிறகு இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டு இருந்தது. அதாவது அதிகாலை 4.30 மணிக்கு பிறகு தாக்குதலை தொடங்க திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அதற்கு முன்பாக இந்திய ராணுவம் பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் விமானப் படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவ தாக்குதல் குறித்து எங்களது ராணுவ தளபதி ஆசீம் முனிர் அதிகாலையில் என்னிடம் தகவல் தெரிவித்தார்.

    நாங்கள் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக இந்திய ராணுவம் தாக்குதலை தொடங்கிவிட்டது. இவ்வாறு ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: பாகிஸ்தான் விமான படை தளங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று அந்த நாட்டு ராணுவம், விமானப் படை கூறி வருகிறது. இந்த சூழலில் பாகிஸ்தான் விமான படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அந்த நாட்டு பிரதமர் முதல்முறையாக ஒப்புக் கொண்டுள்ளார்.

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே ராவல்பிண்டி அமைந்திருக்கிறது. அங்கு ராணுவ தலைமையகம் செயல்படுகிறது. அதே வளாகத்தில் நூர் கான் விமான படை தளம் அமைந்துள்ளது. இந்த விமான படை தளம் உட்பட பாகிஸ்தானின் 11 விமான படை தளங்களை பிரம்மோஸ் ஏவுகணைகள் மிகத் துல்லியமாக தாக்கி அழித்தன. பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு கவசங்களும் முழுமையாக அழிக்கப்பட்டது. நூர்கான் விமான படை தளத்தில் அணு ஆயுத தலைமை கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. அதன் மிக அருகே பிரம்மோஸ் ஏவுகணை தாக்கியது. இந்திய ராணுவத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் பணிந்தது. அந்த நாட்டின் வேண்டுகோளை ஏற்று சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது. இவ்வாறு இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    பிராம்டன் வாகன திருட்டு நெட்வொர்க்: மூன்று இந்திய வம்சாவளிவாசிகள் கைது; திருடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டன – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 13, 2026
    உலகம்

    மார்க் ருஃபாலோ முதல் ஜீன் ஸ்மார்ட் வரை: கோல்டன் குளோப்ஸில் ரெனி நிக்கோல் குட்ஸை கவுரவிக்கும் வகையில் ஹாலிவுட் பிரபலங்கள் ‘பி குட்’ பின்களை அணிந்தனர் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 13, 2026
    உலகம்

    100,000 அமெரிக்க விசாக்கள் ரத்து: வெளியுறவுத்துறை சாதனை குடியேற்ற ஒடுக்குமுறையை தொடங்குகிறது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 12, 2026
    உலகம்

    குடி, அமெரிக்கா: அமெரிக்கர்கள் முழுப் பால் குடிக்க வேண்டும் என்று டிரம்ப் ஏன் விரும்புகிறார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 12, 2026
    உலகம்

    ‘அவள் என் மகனை மாற்றக்கூடும்’: எலோன் மஸ்க் ஆஷ்லே செயின்ட் கிளாரிடம் காவலை கோருகிறார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 12, 2026
    உலகம்

    MAGA கிறிஸ்டி நோயமை ‘ஆன்’ செய்யுமா? ICE படப்பிடிப்பை ‘மிகவும் சிக்கலான’ கையாள்வதில் டிரம்ப் கூட்டாளிகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • எந்த நதி வெள்ளி நதி என்று அழைக்கப்படுகிறது, அது எங்கே? – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உலகின் ஒரே மிதக்கும் தேசிய பூங்கா இந்தியாவில் உள்ளது: அதன் இருப்பிடத்தை அறிந்து கொள்ளுங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்தியாவின் முதல் ஹவுரா-காமக்யா வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் ஜனவரி 17 அன்று தொடங்க உள்ளது: பயணிகள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்தியாவின் முதல் ஹவுரா-காமக்யா வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் டிசம்பர் 17 அன்று தொடங்க உள்ளது: பயணிகள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்த குளிர்காலத்தில் சூரியகாந்தி விதைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது முடிவான பளபளப்பான சருமத்தைப் பெறுவதற்கு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.