Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, January 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»பிரதமர் மோடியுடன் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் சந்திப்பு
    உலகம்

    பிரதமர் மோடியுடன் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் சந்திப்பு

    adminBy adminApril 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பிரதமர் மோடியுடன் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் சந்திப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பாங்காக்: தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெறும் 6-வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டின் இடையே, பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸும் சந்தித்துப் பேசினர்.

    வங்கக்கடல் பகுதியில் உள்ள நாடுகளின் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பான பிம்ஸ்டெக்-ன் 6-வது உச்சிமாநாடு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இன்று நடைபெறுகிறது. இதில், இந்தியா, வங்கதேசம், பூட்டான், மியான்மர், நேபாள், இலங்கை, தாய்லாந்து ஆகிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஏப். 3) பாங்காக் சென்றார். இன்று, மியான்மரின் மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லைங்கை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மியான்மரின் மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லைங்கிடம், சமீபத்திய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்தேன். இந்த நெருக்கடியான நேரத்தில் மியான்மரில் உள்ள நமது சகோதர சகோதரிகளுக்கு இந்தியா முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இந்தியாவுக்கும் மியான்மருக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள், குறிப்பாக இணைப்பு, திறன் மேம்பாடு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பல துறைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்.” என்று தெரிவித்தார்.

    இதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி, வங்கதேச தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸை சந்தித்துப் பேசினார். வங்கதேசத்தில் நடந்த ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அந்நாட்டில் சிறுபான்மை இந்துக்கள் தாக்கப்பட்டதற்கு இந்தியா தனது கவலைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தது. அதேபோல், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்திருப்பதற்கு வங்கதேச அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே கசப்புணர்வு அதிகரித்த நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

    வங்கதேச தலைமை ஆலோசகராக பதவியேற்ற உடன் முகம்மது யூனுஸ் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வர திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் புதுடெல்லியின் அழைப்பு இல்லாததால் அவர் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை சீனாவுக்கு மேற்கொண்டதாகவும் சமீபத்தில் அதன் வெளியுறவுச் செயலாளர் ஜாஷிமுதீன் கூறி இருந்தார்.

    சீனாவில் அந்நாட்டின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய முகம்மது யூனுஸ், “இந்தியாவின் வட கிழக்கில் உள்ள 7 மாநிலங்கள் நிலத்தால் கட்டுண்டு கிடக்கின்றன. அந்த மாநிலங்களுக்கு கடல் மார்க்க பாதுகாப்புக்கு ஆதாரம் வங்கதேசம்தான். வங்கதேசத்துக்கு இருக்கும் இந்த புவியியல் நிலையைப் பயன்படுத்தி வங்கதேசத்தில் சீனா பொருளாதார ரீதியாக காலூன்ற வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டார்.

    முகம்மது யூனுஸின் இந்த பேச்சுக்கு இந்திய தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த பின்னணியில் நரேந்திர மோடி – முகமது யூனுஸ் சந்திப்பு முக்கியத்தவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    MAGA கிறிஸ்டி நோயமை ‘ஆன்’ செய்யுமா? ICE படப்பிடிப்பை ‘மிகவும் சிக்கலான’ கையாள்வதில் டிரம்ப் கூட்டாளிகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 12, 2026
    உலகம்

    ஜெஃப் பெசோஸ் முதல் பில் கேட்ஸ் வரை: பில்லியனர்கள் கிரீன்லாந்தில் பந்தயம் கட்டுகிறார்கள், டிரம்ப் அதை ‘கடினமான வழியில்’ எடுப்பதாக சுட்டிக்காட்டுகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 12, 2026
    உலகம்

    பெரிய இந்திய இக்கட்டான நிலை: புலம்பெயர் சூதாட்டமானது வெளிநாட்டில் வாழ்வதற்கான பாதுகாப்பைக் கொண்டதா? விளக்கப்பட்டது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 12, 2026
    உலகம்

    பில் கேட்ஸ் $7.9 பில்லியனை மெலிண்டா கேட்ஸின் இலாப நோக்கற்ற நிறுவனத்திற்கு அனுப்பிய மிகப்பெரிய தொண்டு பரிமாற்றங்களில் ஒன்று | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 11, 2026
    உலகம்

    மினியாபோலிஸ் துப்பாக்கிச் சூடுக்குப் பிறகு இந்திய வம்சாவளி தானேதர் ICE ஐ ஒழிப்பதற்கான மசோதாவை அறிமுகப்படுத்துகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 11, 2026
    உலகம்

    தினப்பராமரிப்பு மோசடிக்காக டிரம்ப் நிர்வாகியை ‘வரி டாலர்களை ஒப்படைக்க’ கட்டாயப்படுத்தியதாக இந்திய வம்சாவளி நீதிபதி குற்றம் சாட்டினார்; எலோன் மஸ்க் அதை ‘சிக்கல்’ என்று அழைக்கிறார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கிரேட் பசிபிக் குப்பைத் தொட்டி சில நீர்வாழ் உயிரினங்களின் தாயகமாக மாறி வருகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கோல்டன் குளோப்ஸ் 2026: வுன்மி மொசாகு, தனது கர்ப்பத்துடன் இரவைத் திருடிய பாவிகள் நட்சத்திரம் யார்?
    • ‘மூன்றாம் கட்டத்தில் காணப்பட்ட விலகல்’: இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-சி62 விண்கலம் தோல்வி | இந்தியா செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 58 யார்? ஜூலியா ராபர்ட்ஸின் வயதைக் குறைக்கும் கோல்டன் குளோப்ஸ் ஒளி இணையத்தில் அலறுகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உலகின் மிக ஆடம்பரமான பரிசுப் பை: கோல்டன் குளோப்ஸ் வெற்றியாளர்கள் ₹8.3 கோடி மதிப்புள்ள வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.