Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»‘பாக். ராணுவத் தலைவர் தீவிர மதக் கண்ணோட்டத்தால் இயக்கப்படுகிறார்’ – ஜெய்சங்கர்
    உலகம்

    ‘பாக். ராணுவத் தலைவர் தீவிர மதக் கண்ணோட்டத்தால் இயக்கப்படுகிறார்’ – ஜெய்சங்கர்

    adminBy adminMay 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘பாக். ராணுவத் தலைவர் தீவிர மதக் கண்ணோட்டத்தால் இயக்கப்படுகிறார்’ – ஜெய்சங்கர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பாகிஸ்தானின் ராணுவத் தலைவரான ஜெனரல் அசிம் முனீர், தீவிர மதக் கண்ணோட்டத்துடன் இயங்குவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்

    நெதர்லாந்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஜெய்சங்கர், “பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் சுற்றுலாப் பயணிகள். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள், இந்துக்கள் என உறுதிப்படுத்திய பிறகே அந்த சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

    26 பேரின் மத நம்பிக்கையை உறுதிப்படுத்திய பிறகு, அவர்களது குடும்பங்களுக்கு முன்பாக கொலை செய்யப்பட்டனர். இது மாநிலத்தின் சுற்றுலாவுக்கு தீங்கு விளைவிப்பதற்காகவும், வேண்டுமென்றே மத முரண்பாட்டை உருவாக்குவதற்காகவும் செய்யப்பட்டது. பாகிஸ்தானின் தலைமை, குறிப்பாக அதன் ராணுவத் தலைவரான ஜெனரல் அசிம் முனீர், தீவிர மதக் கண்ணோட்டத்தால் இயக்கப்படுகிறார்.” என்று அவர் கூறினார்.

    இந்திய வெளியுறவு அமைச்சர் தற்போது நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    முன்னதாக, பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதியும், தற்போதைய ஃபீல்ட் மார்ஷலுமான அசிம் முனீர் ஏப்ரல் 16 அன்று இஸ்லாமாபாத்தில் நடந்த வெளிநாட்டு பாகிஸ்தானியர்களின் மாநாட்டில் உரையாற்றினார். அப்போது, “காஷ்மீர் எங்கள் கழுத்து நரம்பு, நாங்கள் அதை மறக்க மாட்டோம். நாம் இந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்பதை மறந்துவிடாதபடி, பாகிஸ்தான் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு கதைகளை சொல்லவேண்டும்

    நமது முன்னோர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு சாத்தியமான அம்சத்திலும் நாம் இந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்று நினைத்தார்கள் என்பதை மறந்துவிடாதபடி, உங்கள் குழந்தைகளுக்கு பாகிஸ்தானின் கதையைச் சொல்ல வேண்டும். நமது மதங்கள் வேறு, நமது பழக்கவழக்கங்கள் வேறு, நமது மரபுகள் வேறு, நமது எண்ணங்கள் வேறு, நமது லட்சியங்கள் வேறு. அதுதான் இங்கு அமைக்கப்பட்ட இரு தேசக் கோட்பாட்டின் அடித்தளம். நாம் இரு தேசங்கள், நாம் ஒரு தேசம் அல்ல” என்று பேசியிருந்தார்.

    அசிம் முனீரின் உரைக்கு சில நாட்களுக்குப் பிறகு, ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது.

    இந்நிலையில்தான், பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்ட விதத்தையும், பாகிஸ்தான் ராணுவத் தலைவரின் மதக் கண்ணோட்டத்தையும் தொடர்புபடுத்தி ஜெய்சங்கர் பேசியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    கலாச்சாரம், ஆயுர்வேதம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இந்தியா – கானா இடையே 4 ஒப்பந்தம் கையெழுத்து

    July 4, 2025
    உலகம்

    “இந்தியாவில் ஜனநாயகம் என்பது வெறும் அமைப்பு அல்ல” – கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை

    July 3, 2025
    உலகம்

    பிரதமர் மோடிக்கு ‘தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா’ விருது வழங்கல்!

    July 3, 2025
    உலகம்

    ‘நிறுத்து, அவரை விடுங்கள்’: பியோ மிட் -ஏர் சச்சரவைத் தூண்டுகிறது, கறுப்புக் கண்ணுடன் முடிகிறது – வீடியோ – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    July 3, 2025
    உலகம்

    5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் தொடங்கினார் பிரதமர் மோடி: பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டிலும் பங்கேற்கிறார்

    July 3, 2025
    உலகம்

    வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை: சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் உத்தரவு

    July 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக உறுப்பினர் சேர்க்கைக்காக சென்னையில் வீடுவீடாக மக்களை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்
    • மயோனைசேவா? இது உங்கள் ஆரோக்கியத்திற்கு என்ன செய்யக்கூடும் என்பது இங்கே | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கோவையில் 7-ம் தேதி சுற்றுப்பயணம் தொடங்கும் இபிஎஸ்: பாஜக தலைவர்கள் பங்கேற்க அதிமுக அழைப்பு
    • உடலின் ஆரோக்கியத்தைப் பற்றி எங்கள் நகங்கள் கொடுக்கும் 10 மறைக்கப்பட்ட எச்சரிக்கைகள் – இந்தியாவின் நேரங்கள்
    • அஜித்குமாரை சித்ரவதை செய்ய உத்தரவிட்ட அதிகாரி யார்? – பாஜக, பாமக கேள்வி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.