Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, October 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழப்பு: படுகாயம் அடைந்த 32 பேர் மருத்துவமனையில் அனுமதி
    உலகம்

    பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழப்பு: படுகாயம் அடைந்த 32 பேர் மருத்துவமனையில் அனுமதி

    adminBy adminOctober 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழப்பு: படுகாயம் அடைந்த 32 பேர் மருத்துவமனையில் அனுமதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    குவெட்டா: ​பாகிஸ்​தானில் கார் குண்டு வெடித்​துச் சிதறிய​தில் 13 பேர் உயி​ரிழந்​தனர். 32 பேர் படு​கா​யம் அடைந்​தனர். பாகிஸ்தானின் தென்​மேற்கு பகு​தி​யில் பலுசிஸ்​தான் மாகாணம் அமைந்​துள்​ளது. அந்த நாட்​டின் மொத்த பரப்​பள​வில் 44 சதவீதத்தை இந்த மாகாணம் கொண்​டுள்​ளது. கடந்த 1947-ம் ஆண்​டில் இந்​தி​யா, பாகிஸ்​தான் தனி நாடு​களாக உதய​மான​போது பலுசிஸ்​தானும் தனி நாடாக உரு​வெடுத்​தது. ஆனால் கடந்த 1948-ல் பாகிஸ்​தான் ராணுவம், பலுசிஸ்​தானை ஆக்​கிரமித்​தது.

    அப்​போது​முதல் பாகிஸ்​தான் அரசுக்​கும் கிளர்ச்சி குழுக்​களுக்​கும் இடையே உள்​நாட்​டுப் போர் நடை​பெற்று வரு​கிறது. அந்த மாகாண மக்​கள் மிக நீண்ட கால​மாக தனி நாடு கோரி போராடி வரு​கின்​றனர். பாகிஸ்​தான் ராணுவ அடக்​கு​முறை​யில் இது​வரை லட்​சக்​கணக்​கான மக்​கள் கொல்​லப்​பட்டு உள்​ளனர்.

    பலுசிஸ்​தானின் அண்டை மாகாண​மான கைபர் பக்​துன்​கவா பகுதி மக்​களும் பாகிஸ்​தான் அரசுக்கு எதி​ராக தொடர் போராட்டங்​களில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். அந்த மாகாணத்​தின் மாட்ரே தாரா கிராமத்​தின் மீது பாகிஸ்​தான் விமானப் படை அண்​மை​யில் குண்​டு​களை வீசி தாக்​குதல் நடத்​தி​யது. இதில் பொது​மக்​களில் 30 பேர் உயி​ரிழந்​தனர். இந்த தாக்​குதலுக்கு பாகிஸ்தான் ராணுவத்​துக்கு தகுந்த பதிலடி கொடுப்​போம் என்று தெஹ்ரிக் இ தலி​பான் பாகிஸ்​தான் (டிடிபி) எச்​சரிக்கை விடுத்திருந்தது.

    இந்த சூழலில் பலுசிஸ்​தான் மாகாண தலைநகர் குவெட்​டா​வில் துணை ராணுவப் படை​யின் தலைமை அலு​வல​கத்தை குறி​வைத்து டிடிபி தற்​கொலைப் படை தீவிர​வா​தி​கள் நேற்று தாக்​குதல் நடத்த முயற்சி செய்​தனர். வெடிகுண்​டு​கள் நிரப்​பிய காரில் டிடிபி அமைப்பை சேர்ந்த 4 தீவிர​வா​தி​கள், துணை ராணுவ படை (எப்​.சி.) தலைமை அலு​வல​கம் நோக்கி விரைந்து சென்​றனர். இந்த கார் எப்​.சி. அலு​வல​கம் அருகே உள்ள பிர​தான சாலை​யில் வந்​த​போது வெடித்​துச் சிதறியது.

    இதில் 13 பேர் உயி​ரிழந்​தனர். 32-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​தனர். காரில் இருந்த 4 தீவிர​வா​தி​கள் உடல் சிதறி உயி​ரிழந்​தனர். அவர்​களது உடல்​களை அடை​யாளம் காண முடிய​வில்​லை. இதுகுறித்து பாகிஸ்​தான் அதிபர் ஆசிப் அலி ஜர்​தாரி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “டிடிபி தீவிர​வாத அமைப்பு குவெட்​டா​வில் தற்​கொலைப் படை தாக்​குதலை நடத்தி உள்​ளது. இந்த அமைப்பு இந்​தி​யா​வின் உத்​தர​வின்​படி செயல்​படு​கிறது” என்று குற்​றம் சாட்டி உள்​ளார்.

    பாகிஸ்​தான் பாது​காப்​புப் படை வட்​டாரங்​கள் கூறும்​போது, “கு​வெட்​டா​வில் உள்ள துணை ராணுவ படை தலை​மையகத்​தின் மீது தாக்​குதல் நடத்த டிடிபி தீவிர​வா​தி​கள் திட்​ட​மிட்டு உள்​ளனர். ஆனால் அதற்கு முன்​பாகவே அவர்​களின் கார் வெடித்​துச் சிதறி​விட்​டது. டிடிபி தீவிர​வாத அமைப்பு மட்​டுமன்றி பலுசிஸ்​தான் விடு​தலைப் படை​யும் பாகிஸ்​தான்​ ராணுவம்​ மீதான தாக்​குதல்​களை தீவிரப்​படுத்​தி வருகிறது” என்​று தெரிவித்​தன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ஒட்டோமான் ஆட்சியில் இருந்து எங்களை விடுவித்தது இந்திய வீரர்கள்தான்: இஸ்ரேலின் ஹைபா நகர மேயர் தகவல்

    October 1, 2025
    உலகம்

    பாகிஸ்தானின் குவெட்டா நகரில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி; 32 பேர் காயம்

    September 30, 2025
    உலகம்

    மாணவர் விசாக்களின் காலத்தைக் கட்டுப்படுத்தும் முன்மொழியப்பட்ட விதியை ஸ்கிராப் செய்ய உயர் கல்வி அமைப்புகள் டி.எச்.எஸ்ஸை வலியுறுத்துகின்றன; யு.எஸ். உலகளாவிய திறமை பைப்லைனுக்கு சேதம் ஏற்படுவதை எச்சரிக்கவும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 30, 2025
    உலகம்

    உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் திறப்பு: 2 மணி நேரப் பயணம் 2 நிமிடத்தில் நிறைவடைகிறது

    September 30, 2025
    உலகம்

    ‘நான் இந்தியாவுக்குச் செல்வேன்’: நைகல் ஃபரேஜ் பிரதமராகிவிட்டால் ஒளிபரப்பாளர் நரிண்டர் கவுர்; அவர் ஏற்கனவே சொத்தை பார்க்கிறார் என்று கூறுகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 30, 2025
    உலகம்

    அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100% வரி: ட்ரம்ப்

    September 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை – சிஐடி நகரை இணைக்க ரூ.165 கோடியில் இரும்பு பாலம் திறப்பு
    • நடப்பு அரையாண்டில் ரூ.995 கோடி சொத்து வரி வசூல்
    • இரத்த அழுத்தத்தைக் குறைக்கக்கூடிய 4 சக்திவாய்ந்த ஊட்டச்சத்துக்கள் மற்றும் அவற்றின் இயற்கை உணவு மூலங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மும்பை தாக்குதலுக்கு பிறகு அமெரிக்காவின் அழுத்தத்தால் பாக். மீது போர் தொடுக்கவில்லை: ப.சிதம்பரம் ஒப்புதல்
    • ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமீன் கோரி மனு: உயர் நீதிமன்றத்தில் அக்.3-ல் விசாரணை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.