Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 19
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»பாகிஸ்தானை சேர்ந்த டிஆர்எப் உலகளாவிய தீவிரவாத அமைப்பு – அமெரிக்கா அறிவிப்பு; இந்தியா வரவேற்பு
    உலகம்

    பாகிஸ்தானை சேர்ந்த டிஆர்எப் உலகளாவிய தீவிரவாத அமைப்பு – அமெரிக்கா அறிவிப்பு; இந்தியா வரவேற்பு

    adminBy adminJuly 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாகிஸ்தானை சேர்ந்த டிஆர்எப் உலகளாவிய தீவிரவாத அமைப்பு – அமெரிக்கா அறிவிப்பு; இந்தியா வரவேற்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வாஷிங்டன்: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு சுற்றுலாத் தலத்தில் 4 தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான டிஆர்எப் பொறுப்பேற்றது. இந்நிலையில் இந்த டிஆர்எப் அமைப்பை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அமெரிக்க அரசு நேற்று அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம், தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எப்) அமைப்பை ஒரு வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாகவும்(எப்டிஓ), நியமிக்கப்பட்ட உலகளாவிய தீவிரவாத அமைப்பாகவும் (எஸ்டிஜிடி) அறிவிக்கிறது. தீவிரவாதத்தை ஒடுக்குவதிலும், பஹல்காம் தாக்குதலுக்கு நீதி கேட்டும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் விடுத்த அழைப்பைச் செயல்படுத்துவதிலும் அமெரிக்க நிர்வாகம் உறுதியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

    பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அண்மையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் பேசும்போது பஹல்காம் தாக்குதலை கடுமையாகக் கண்டித்திருந்தார்.

    இந்நிலையில்தான் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பின் மூலம், டிஆர்எப் அமைப்புடனான அனைத்து விதமான தொடர்புகளும் சட்டவிரோதமாக்கப்பட்டு, அதன் சொத்துக்கள் முடக்கப்படும்.

    இந்தியா பாராட்டு: தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எப்) அமைப்பை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளதற்கு இந்தியா பாராட்டு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய் சங்கர் தனது எக்ஸ் தளப்பதிவில் கூறும் போது, “டிஆர்எப் அமைப்பை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளதற்கு இந்தியா பாராட்டு தெரிவிக்கிறது.

    இந்தியாவில் பல்வேறு தீவிரவாதச் செயல்களை செய்து வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் வேரறுக்கப்பட வேண்டும் என்பதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது.

    டிஆர்எப் அமைப்பை வெளி நாட்டு தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ள முடிவுக்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை பாராட்டுகிறேன்” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    பரஸ்பர நலன், சர்வதேச விவகாரங்களில் ரஷ்யா, இந்தியா, சீனா மீண்டும் இணைந்து செயல்பட முடிவு

    July 19, 2025
    உலகம்

    அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடுக்கிவிடப்பட வேண்டும் என்பதில் உக்ரைனுடன் உடன்படுகிறேன் – புதின்

    July 18, 2025
    உலகம்

    3 பேரின் டிஎன்ஏ-க்களுடன் குழந்தைப் பிறப்பு: பரம்பரை நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் மைல்கல் முயற்சி!

    July 18, 2025
    உலகம்

    ‘கிஸ் கேம்’ சர்ச்சையில் சிக்கிய சிஇஓ – யார் இந்த ஆண்டி பைரான்? – முழு பின்னணி

    July 18, 2025
    உலகம்

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு மருத்துவ பரிசோதனை ஏன்? – வெள்ளை மாளிகை விளக்கம்

    July 18, 2025
    உலகம்

    மழை, வெள்ள பாதிப்​பு​களால் கடந்த 3 வாரங்​களில் பாகிஸ்தானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 ஆக உயர்வு

    July 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மக்களின் குடியிருப்பு உரிமையை பாதுகாக்க தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்
    • நீரிழிவு நோயிலிருந்து வெளியேற 5 உதவிக்குறிப்புகள்
    • பாஜகவை கழற்றிவிட்டு தவெக உடன் கூட்டணி அமைக்க அதிமுக முயற்சி: செல்வப்பெருந்தகை
    • ஒவ்வொரு நாளும் 10,000 படிகள் நடைபயிற்சி? இது உண்மையில் மிகைப்படுத்தலுக்கு மதிப்புள்ளதா | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.