Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல்: பாகிஸ்தானுக்கு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்
    உலகம்

    பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல்: பாகிஸ்தானுக்கு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

    adminBy adminMay 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல்: பாகிஸ்தானுக்கு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    நியூயார்க்: பஹல்காமில் நடந்த தீவிரவாதிகளின் கொடூரமான தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்தது.

    ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22-ம் தேதி தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்தத் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா- பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் அதிகரித்து வருகிறது. இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று முன்தினம் கூடி அவசரமாக ஆலோசனையை நடத்தியது.

    அப்போது, பாதுகாப்பு சபை உறுப்பினர் நாடுகள் காஷ்மீர் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. அப்போது பாகிஸ்தான் நாட்டுக்கு கடும் கண்டனத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பதிவு செய்தது. கூட்டத்தில் பேசிய உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகள், பாகிஸ்தானை குறி வைக்கும் வகையில் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

    அப்போது ‘தாக்குதல் சம்பவத்தை இந்திய ராணுவமே நடத்தியது’ என்று கூறிய பாகிஸ்தானின் பொய்யை ஏற்க உறுப்பு நாடுகள் ஏற்க மறுத்தன. அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தானின் சமீபத்திய ஏவுகணை சோதனைகள், அணு ஆயுதப்போர் அச்சுறுத்தல் குறித்தும் உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர்.

    இது இரு நாடுகளுக்கும் இடையே பதற்றங்களை அதிகரிக்கும் என்று உறுப்பு நாடுகள் குற்றம் சாட்டின. இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நிரந்தர உறுப்பினர்களான சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த ஆலோசனையின் போது, பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் அவர்களின் மதத்தின் அடிப்படையில் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்தத் தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) தீவிரவாத அமைப்பு சம்பந்தப்பட்டுள்ளதா என்பது குறித்து பாகிஸ்தான் பிரதிநிதியிடம் கேள்வி எழுப்பினர்.

    ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர், நிருபர்களிடம் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலுக்கான பாகிஸ்தான் பிரதிநிதி அசிம் இப்திகார் கூறும்போது, “பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் மீது எழுந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் நாங்கள் நிராகரிக்கிறோம். சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது சர்வதேச சட்டத்தை மீறுவதாக உள்ளது” என்றார்.

    கூட்டத்தில் பேசிய ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் மே மாதத்துக்கான தலைவரும், கிரேக்க நாட்டின் பிரதிநிதியுமான தூதர் இவாஞ்சலோஸ் செகெரிஸ் கூறும்போது, “இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிடையே போர்ப்பதற்றம் எழுந்துள்ள நிலையில், இந்த விவாதம் முக்கியமானது. பதற்றங்களுக்கு தீர்வு காண உதவிகரமாக நாம் இருக்கவேண்டும். இரு நாடுகளிடையே எழுந்துள்ள பதற்றத்தை தணிக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நாடுகள் செயல்பட வேண்டும்” என்றார்.

    சசி தரூர் கருத்து: போர்ப் பதற்றம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், ஐ.நா. சபையின் முன்னாள் துணைப் பொதுச்செயலருமான சசி தரூர் கூறியதாவது: இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராகவோ பாகிஸ்தானுக்கு எதிராகவோ ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எந்த தீர்மானத்தையும் இயற்றாது என்று நினைக்கிறேன்.

    பாகிஸ்தானுக்கு எதிராக தீர்மானத்தை பாதுகாப்புக் கவுன்சில் நிறைவேற்றாது. ஏனெனில் பாகிஸ்தானுக்கு ஆதரவு நாடான சீனா அதை எதிர்க்கும். அதைப் போலவே இந்தியாவுக்கு எதிராக எந்தத் தீர்மானம் வராது. ஏனெனில் பல நாடுகள் அதற்கு எதிராகக் குரல் எழுப்பும்.

    இரு நாடுகளையும் நேரடியாகப் பாதிக்கும் எந்தவொரு குறிப்பிட்ட விஷயத்தையும், முறையான கூட்டங்கள் மூலமாகவோ அல்லது முறைசாரா ஆலோசனைகள் மூலமாகவோ, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

    இந்த விஷயத்தில் பாகிஸ்தான் நாடு தனக்கு நன்மை கிடைக்கும் என நினைக்கிறது. ஆனால், கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது தெரியவந்துள்ளது. இவ்வாறு சசி தரூர் தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    சிறுகோள்களில் உலோகங்கள்

    June 30, 2025
    உலகம்

    ‘கடவுளின் எதிரிகள் பழிவாங்கப்படுவார்கள்’ – ட்ரம்ப், நெதன்யாகுவை கடுமையாக சாடும் ஈரான் மதகுரு

    June 30, 2025
    உலகம்

    ஈரானால் சில மாதங்களிலேயே யுரேனியம் செறிவூட்டலை தொடங்கமுடியும்: சர்வதேச அணுசக்தி முகமை தலைவர்

    June 30, 2025
    உலகம்

    பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும்: ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தல்

    June 30, 2025
    உலகம்

    வசிரிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதலுக்கு வழக்கம் போல் இந்தியா மீது குற்றம் சுமத்துகிறது பாகிஸ்தான்

    June 30, 2025
    உலகம்

    477 ட்ரோன்கள், 60 ஏவுகணைகள் – உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய வான்வழித் தாக்குதல்!

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • லாக்கப் மரணங்கள்: காவல் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை
    • டாஸ்மாக் கடைகளை அரசு நடத்த வேண்டிய அவசியம் என்ன? – ஐகோர்ட் கேள்வி
    • தெலங்கானா ரசாயன ஆலை வெடிவிபத்து: உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு – நடந்தது என்ன?
    • பாரதி இல்லத்தை புதுப்பிக்க கோரி எட்டயபுரத்தில் பாஜக நூதன போராட்டம்: 65 பேர் கைது
    • தந்தை பேச்சை கேட்காத மனோஜித் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ளன: கொல்கத்தா போலீஸ் தகவல்  

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.