Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 31
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»‘பஹல்காம் தாக்குதல் குறித்த பிரதமர் மோடியின் கருத்து அதிர்ச்சியளிக்கிறது’ – பாகிஸ்தான்
    உலகம்

    ‘பஹல்காம் தாக்குதல் குறித்த பிரதமர் மோடியின் கருத்து அதிர்ச்சியளிக்கிறது’ – பாகிஸ்தான்

    adminBy adminJune 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘பஹல்காம் தாக்குதல் குறித்த பிரதமர் மோடியின் கருத்து அதிர்ச்சியளிக்கிறது’ – பாகிஸ்தான்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இஸ்லாமாபாத்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஜம்மு காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்கள் அதிர்ச்சி அளிக்கின்றன என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு முதல்முறையாக நேற்று (வெள்ளிக்கிழமை) ஜம்மு காஷ்மீர் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, செனாப் ஆற்றின் குறுக்கே 1,315 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலத்தையும், செனாப் நதியின் கிளை நதியான ஆஞ்சி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நாட்டின் முதல் கேபிள் ரயில் பாலத்தையும் திறந்துவைத்தார். மேலும், கத்ரா பகுதியில் ரூ.46,000 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றினார்.

    அப்போது, “துரதிர்ஷ்டவசமாக, நமது அண்டை நாடு மனிதகுலத்துக்கு எதிரானது, ஏழைகளின் வாழ்வாதாரத்துக்கும் கூட எதிரானது. ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்தது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. பஹல்காமில் மனிதநேயம் மற்றும் காஷ்மீர் பெருமிதம் ஆகிய இரண்டின் மீதும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்தியாவில் கலவரங்களை ஏற்படுத்துவதும், காஷ்மீர் மக்களின் வருவாயைத் தடுப்பதும் இதன் நோக்கமாகும். அதனால்தான் காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை பாகிஸ்தான் தாக்கியது. காஷ்மீர் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை ஈட்டித் தரும் சுற்றுலாவை பாகிஸ்தான் குறிவைத்தது.

    சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு, மே 6-ஆம் தேதி இரவு, பாகிஸ்தான் தனது அழிவு நாளைக் கண்டது. இப்போது, ​​ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரைக் கேட்கும்போதெல்லாம், பாகிஸ்தான் தனது அவமானகரமான தோல்வியை நினைவுகூரும். பாகிஸ்தானுக்குள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள பயங்கரவாதிகளை இந்தியா தாக்கும் என்று பாகிஸ்தான் ராணுவமும் பயங்கரவாதிகளும் ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்கள்” என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் இந்த கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக இந்தியப் பிரதமர் மீண்டும் ஒருமுறை குற்றம் சாட்டி இருப்பது எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. எவ்வித நம்பகமான ஆதாரங்களையும் முன்வைக்காமல் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு இது.

    சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பிரதேசமாகவே ஜம்மு-காஷ்மீர் உள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் காஷ்மீர் மக்களின் விருப்பத்தின்படி இந்த சர்ச்சை தீர்க்கப்பட வேண்டும். இந்த சட்ட மற்றும் வரலாற்று யதார்த்தத்தை எந்த விதமான சொல்லாடல்களாலும் மாற்ற முடியாது.

    ஜம்மு காஷ்மீரில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது, அடிப்படை சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, சர்வதேச சட்டத்தை மீறி பிராந்தியத்தின் மக்கள்தொகையை மாற்றுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்த பின்னணியில் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி குறித்த கூற்றுக்கள் வெற்றுத்தனமானவை.

    ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்திற்கான நியாயமான போராட்டத்திற்கு பாகிஸ்தான் கொள்கை ரீதியில் ஆதரவை தொடர்ந்து வழங்கி வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் தனது சுயநிர்ணய உரிமையை பயன்படுத்த இந்தியா அனுமதிப்பதை, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமை அமைப்புகள் உட்பட சர்வதேச சமூகம், உறுதிப்படுத்த வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீதம் வரி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பால் உச்சகட்ட குழப்பம்

    July 31, 2025
    உலகம்

    ஆக.1 முதல் இந்தியப் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி: ட்ரம்ப் அறிவிப்பு

    July 30, 2025
    உலகம்

    ரஷ்யாவைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஹவாய் தீவிலும் சுனாமி: சீனாவுக்கும் எச்சரிக்கை

    July 30, 2025
    உலகம்

    இந்தியாவுக்கு 25% வரை வரி விதிக்க வாய்ப்பு: ட்ரம்ப் சூசகம்

    July 30, 2025
    உலகம்

    ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 4 மீட்டர் உயரத்துக்கு எழுந்த சுனாமி பேரலை

    July 30, 2025
    உலகம்

    டிரம்ப் சட்டத்தை மருத்துவ உதவியை குறைப்பதை அமெரிக்க நீதிபதி தடுக்கிறார்; திட்டமிடப்பட்ட பெற்றோர்ஹுட் கொண்ட பக்கங்கள், திட்டமிடப்படாத கர்ப்ப ஸ்பைக்கை மேற்கோள் காட்டி – இந்தியாவின் நேரங்கள்

    July 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 12.65 லட்சம் மனுக்கள்: மகளிர் உரிமை தொகைக்கு 6 லட்சம் பேர் விண்ணப்பம்
    • இயற்கையின் இறைச்சி உண்பவர்கள்: மாமிச தாவரங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: திருவேற்காடு நகராட்சி ஆணையர் ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு
    • ஒளிரும் தோலுக்கான ஜாவிட்ரி: உங்கள் அதிக விலை கொண்ட சீரம் விட முகப்பருவை எதிர்த்துப் போராடும் சமையலறை மசாலா | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மோட்டோ ஜி86 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.