Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, June 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»பயங்கரவாத எதிர்ப்பில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட எத்தியோப்பியா துணைப் பிரதமர் உறுதி
    உலகம்

    பயங்கரவாத எதிர்ப்பில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட எத்தியோப்பியா துணைப் பிரதமர் உறுதி

    adminBy adminMay 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பயங்கரவாத எதிர்ப்பில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட எத்தியோப்பியா துணைப் பிரதமர் உறுதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    அடிஸ் அபாபா: பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இந்தியாவுடன் இணைந்து எத்தியோப்பியா பணியாற்றும் என்று அந்நாட்டின் துணைப் பிரதமர் ஆதம் ஃபரா, இந்திய தூதுக்குழுவிடம் உறுதிபட தெரிவித்துள்ளார்.

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை உலகுக்கு எடுத்துச்சொல்லும் நோக்கில் பல்வேறு நாடுகளுக்கு மத்திய அரசு தூதுக்குழுக்களை அனுப்பி உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே தலைமையிலான குழு, எத்தியோபியா தலைநகர் அடிஸ் அபாபாவில் அந்நாட்டின் துணை பிரதமர் ஆதம் ஃபராவைச் சந்தித்தது.

    இந்த சந்திப்பு தொடர்பாக எத்தியோப்பியாவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு, எத்தியோப்பியாவின் துணைப் பிரதமர் ஆதம் ஃபராவைச் சந்தித்தது. பயங்கரவாத எதிர்ப்பில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற எத்தியோப்பியாவின் வலுவான உறுதிப்பாட்டை அவர் தெரிவித்தார்.

    இன்று, அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு ஆப்பிரிக்க ஒன்றியத்துடன் பயனுள்ள கலந்துரையாடல்களை நடத்தியது. பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் எதிர்ப்பதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டது. இந்த தொடர்பு, உலகம் முழுவதும் பயங்கரவாதத்தைத் தடுப்பதிலும் எதிர்த்துப் போராடுவதிலும் இந்தியாவுக்கு ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கும் இடையே அதிக கவனம் செலுத்த வழி வகுக்கிறது,” என்று தெரிவித்துள்ளது.

    இந்திய தூதுக்குழு, எத்தியோப்பியாவின் முன்னாள் பிரதமர் ஹைலேமரியம் டெசலெக்னைச் சந்தித்தது. துணைப் பிரதமராகவும் வெளியுறவு அமைச்சராகவும் இருந்த ஹைலேமரியம், மே 2011-இல் இரண்டாவது இந்தியா-ஆப்பிரிக்கா மன்ற உச்சி மாநாட்டை நடத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.

    இந்தப் பயணத்தின் போது, ​​இந்திய தூதுக்குழு, எத்தியோப்பியாவின் ஊடகங்கள், சிவில் சமூகம், கல்வியாளர்கள் மற்றும் இந்திய சமூகம் போன்ற பரந்த அளவிலான பங்குதாரர்களுடன் கலந்துரையாட இருக்கிறது.

    சுப்ரியா சுலேவைத் தவிர, இந்தக் குழுவில் பாஜக தலைவர்களான ராஜீவ் பிரதாப் ரூடி, அனுராக் தாக்கூர், வி. முரளீதரன், காங்கிரஸ் தலைவர்கள் மணீஷ் திவாரி, ஆனந்த் சர்மா, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் லாவு ஸ்ரீ கிருஷ்ண தேவராயுலு, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் விக்ரம்ஜீத் சிங் சாஹ்னி மற்றும் முன்னாள் தூதர் சையத் அக்பருதீன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல் – 16 ராணுவ வீரர்கள் பலி

    June 28, 2025
    உலகம்

    காசாவில் ஒரு வாரத்தில் போர் நிறுத்தம்: ட்ரம்ப் நம்பிக்கை

    June 28, 2025
    உலகம்

    ”இஸ்ரேலுக்கு ‘அப்பா’விடம் ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை” – ஈரான் காட்டம்

    June 28, 2025
    உலகம்

    கொமேனியை அழிக்கும் திட்டம் இருந்தது: இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் கருத்து

    June 28, 2025
    உலகம்

    சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவுடன் விரைவில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வோம்: ட்ரம்ப் சூசகம்

    June 28, 2025
    உலகம்

    யுரேனியம் செறிவூட்டலை கைவிட்டால் ஈரானுக்கு பல சலுகை: அமைதி பேச்சுவார்த்தையில் அமெரிக்கா மும்முரம்

    June 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “அதிமுகவுக்குள் மோதலை உருவாக்கி கட்சியை காலி செய்ய பாஜக முயற்சி” – முத்தரசன்
    • உணர்வு -நல்ல ஹார்மோன் ஆக்ஸிடாஸின் – இந்தியாவின் நேரங்களை அதிகரிக்க எளிய மற்றும் இயற்கை வழிகள்
    • “அரசியல் சாசன முகவுரை மாற்ற முடியாதது, ஆனால்…” – ஜெகதீப் தன்கர் பேச்சு
    • தமிழில் வெற்றி பெறாத ‘குபேரா’ – இயக்குநர் ஆதங்கம்
    • தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்: ஐகோர்ட்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.