Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»பனிப்போர் மனநிலையை எதிர்க்க வேண்டும்: எஸ்சிஓ உச்சிமாநாட்டில் சீன அதிபர் பேச்சு
    உலகம்

    பனிப்போர் மனநிலையை எதிர்க்க வேண்டும்: எஸ்சிஓ உச்சிமாநாட்டில் சீன அதிபர் பேச்சு

    adminBy adminSeptember 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பனிப்போர் மனநிலையை எதிர்க்க வேண்டும்: எஸ்சிஓ உச்சிமாநாட்டில் சீன அதிபர் பேச்சு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தியான்ஜின்: பனிப்போர் மனநிலை, பிராந்திய மோதல், மிரட்டல் நடைமுறை ஆகியவற்றை எதிர்க்க வேண்டும் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.

    எஸ்சிஓ உச்சிமாநாட்டில் உரை நிகழ்த்திய சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்காவை மறைமுகமாக விமர்சித்தார். அவர் தனது உரையில், “இரண்டாம் உலகப் போர் குறித்த சரியான வரலாற்றுக் கண்ணோட்டத்தை நாம் ஊக்குவிக்க வேண்டும். பனிப்போர் மனநிலை, பிராந்திய மோதல், மிரட்டல் நடைமுறை ஆகியவற்றை எதிர்க்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

    பரஸ்பர வரி விதிப்பு முறை என்ற பெயரில், இந்தியா, பிரேசில் உட்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கு எதிராக கடுமையான இறக்குமதி வரிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக 25% கூடுதல் வரியை விதித்த ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி மேலும் 25% வரியை விதித்தார். ட்ரம்ப்பின் இத்தகைய நடவடிக்கைகள், இந்தியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டும் நோக்கத்தை வெளிப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த பின்னணியில், ஜி ஜின்பிங்கின் உரை அதை சுட்டிக்காட்டுவதாக உள்ளது.

    மேலும், ஜி ஜின்பிங் தனது உரையில், “ஐக்கிய நாடுகள் சபையை மையமாகக் கொண்ட சர்வதேச அமைப்புகளைப் பாதுகாக்க வேண்டும். உலக வர்த்தக மையத்தின் மிக முக்கிய நோக்கத்துக்கு இணங்க, பலதரப்பு வர்த்தக அமைப்பை ஆதரிக்க வேண்டும்.

    உறுப்பு நாடுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து வெற்றி பெற வேண்டும். வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு பொதுவான நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும், வேறுபாடுகளை மதிக்கவும், தகவல் தொடர்புகளை பராமரிக்கவும், ஒருமித்த கருத்தை உருவாக்கவும், ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும்.

    எஸ்சிஓ உடன் உள்ள 26 நாடுகளின் மொத்த பொருளாதார உற்பத்தி கிட்டத்தட்ட 30 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு உள்ளது. இந்த ஆண்டுக்குள் 2 பில்லியன் யுவான் (சுமார் 281 மில்லியன் அமெரிக்க டாலர்) மானியங்கள் உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்படும். மேலும், அடுத்த 3 ஆண்டுகளில் 10 பில்லியன் யுவான் உறுப்பு நாடுகளுக்கு கடனாக வழங்கப்படும்.” என தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    உக்ரைன் உடனான மோதலை விரைவில் முடிவுக்கு வர புதினிடம் மோடி வலியுறுத்தல்

    September 1, 2025
    உலகம்

    ஆப்கானிஸ்தான் பூகம்பம்: பலி 800 ஆக அதிகரிப்பு; 4500+ காயம்

    September 1, 2025
    உலகம்

    புளோரிடாவின் “அலிகேட்டர் அல்காட்ராஸ்” காலியாக உள்ளது: சட்டவிரோத குடியேறியவர்களுக்கான டிரம்பின் கனவு சிறை ஏன் மூடப்படுகிறது | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 1, 2025
    உலகம்

    எஸ்சிஓ உச்சிமாநாடு பிரகடனத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குக் கண்டனம்

    September 1, 2025
    உலகம்

    ‘தேசத்துரோகம் மற்றும் சட்டவிரோதமானது’: புகலிடம் கோருவோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் குறித்த எலோன் மஸ்க் பிளாஸ்ட்ஸ் இங்கிலாந்து நிலைப்பாடு | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 1, 2025
    உலகம்

    ஷாங்காய் மாநாட்டுக்குப் பின் புதினுடன் ஒரே காரில் சென்ற பிரதமர் மோடி

    September 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தமிழகத்தில் 17 பல்கலை.கள் தேசிய கல்வி கொள்கையை பின்பற்றுவதாக தமிழக பாஜக தகவல்
    • இந்தியாவில் பாஸ்போர்ட்ஸ் விளக்கினார்: சாதாரண, இராஜதந்திர, அதிகாரப்பூர்வ, ஈ.சி.ஆர் vs அல்லாத ஈ.சி.ஆர்
    • “பிரதமர் மோடியின் சீனப் பயணம் ஏற்றுக்கொள்ள முடியாதது…” – ஜோதிமணி எம்.பி விமர்சனம்
    • பூண்டு ஆரோக்கிய நன்மைகள்: கல்லீரல் செயல்பாடு முதல் கொழுப்பு வரை: பூண்டு உட்கொள்ள 5 காரணங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: மும்பை வீதிகளில் போராடக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.