Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் மூவர் அமைச்சர்களாக பதவியேற்பு!
    உலகம்

    நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் மூவர் அமைச்சர்களாக பதவியேற்பு!

    adminBy adminSeptember 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் மூவர் அமைச்சர்களாக பதவியேற்பு!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    காத்மாண்டு: நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் 3 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்றனர்.

    நேபாள பிரதமர் சுசீலா கார்க்கி, எரிசக்தி, நீர்வளம் மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக குல்மான் கிசிங்கையும், உள்துறை மற்றும் சட்ட அமைச்சராக ஓம் பிரகாஷ் ஆர்யலையும், நிதி அமைச்சராக ரமேஷோர் கானலையும் நியமித்து தனது அமைச்சரவையை விரிவுபடுத்தியுள்ளார். இந்த மூன்று அமைச்சர்களும் இன்று பதவியேற்றனர்.

    புதிய அமைச்சராக பொறுப்பேற்ற குல்மான் கிசிங் முன்பு நேபாள மின்சார ஆணையத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார், மேலும் மின்சார ஆணையத்திற்கு பெரும் வருவாய் ஈட்டி தந்ததுடன், நீண்டகால மின்வெட்டுகளையும் முடிவுக்குக் கொண்டுவந்த பெருமைக்குரியவர்.

    முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஓம் பிரகாஷ் ஆர்யல், காத்மாண்டு மேயர் பாலன் ஷாவின் சட்ட ஆலோசகராக பணியாற்றினார். நிதித்துறைக்கு பொறுப்பேற்றுள்ள ரமேஷோர் கானல், ஒரு அனுபவமிக்க நிதி அதிகாரி ஆவார், இவர் நிதி செயலாளராகவும் பணியாற்றியவர்.

    பின்னணி என்ன? – நேபாளத்தில் அரசியல்வாதிகளின் பிள்ளைகள், தொழிலதிபர்கள், பணக்காரர்களின் வாரிசுகள் பணத்தை தண்ணீர்போல செலவழிப்பது, ஆடம்பர வாழ்க்கை வாழ்வது, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு சந்தோஷமாக இருப்பது பொதுமக்களை எரிச்சலடைய செய்தது. இந்த செயல்பாடுகளை சமூக வலைதளங்களில் இளைஞர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

    இதையடுத்து, நேபாளம் முழுவதும் சமூக வலைதளங்களுக்கு அரசு கடந்த 4-ம் தேதி தடை விதித்தது. இதனால் மேலும் கோபம் அடைந்த இளைஞர்கள் தலைநகர் காத்மாண்டுவில் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது. அதில் 75 பேர் உயிரிழந்தனர். 1,300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இதைதொடர்ந்து, நேபாளம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டது. பிரதமர் சர்மா ஒலி, மூத்த அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இதன்பிறகு, போராட்டக் குழுவினருடன் ராணுவ தளபதி அசோக் சிக்டெல் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி, நேபாள உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி, நாட்டின் இடைக்கால பிரதமராக பதவியேற்றார்.

    இந்த சூழ்நிலையில், 2026 மார்ச் 5-ம் தேதி நேபாளத்தில் தேர்தல் நடைபெறும் என்று அதிபர் ராம் சந்திரா பவுதெல் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும், இடைக்கால பிரதமர் சுசீலா தலைமையிலான நிர்வாகத்தின் பரிந்துரையை ஏற்று, நாடாளுமன்றத்தையும் அதிபர் ராம் சந்திரா கலைத்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    வத்திக்கான் சிட்டி திகைப்புகள்: எலோன் மஸ்கின் சகோதரர் கிம்பலின் 3,000 ட்ரோன்கள் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா மீது தலைசிறந்த சின்னங்களுடன் வானத்தை ஒளிரச் செய்கின்றன | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 15, 2025
    உலகம்

    பாப் வைலான் யார்? பிரிட்டிஷ் பங்க்-ராப் இரட்டையர் கேலிக்கூத்துகள் சார்லி கிர்க்கின் படுகொலை, அவரை ஒரு துண்டு *** | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 15, 2025
    உலகம்

    ‘அவளை உதைத்து முத்திரை குத்துவதற்கு முன்பு பலவீனமான பெண்மணியைத் துரத்தினார்’: இந்திய-ஆஜின் மனிதன் இங்கிலாந்தில் தாயைக் கொல்கிறான்; ஆயுள் சிறையில் அடைக்கப்பட்டார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 15, 2025
    உலகம்

    பிரச்சினையை பேசிதான் தீர்க்க முடியும்: அமெரிக்காவின் 100% வரி எச்சரிக்கை பற்றி சீனா கருத்து

    September 15, 2025
    உலகம்

    ‘கொடூரமான’: விவேக் ராமசாமி டல்லாஸில் சந்திர நாகமல்லாயை தலை துண்டிக்கப்படுவதைப் பற்றி பேசுகிறார், அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடவில்லை – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 15, 2025
    உலகம்

    வெளிநாட்டினர் குடியேற்றத்தை எதிர்த்து லண்டனில் மாபெரும் பேரணி; 1.5 லட்சம் பேர் பங்கேற்பு

    September 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘வடசென்னை 2’ விரைவில் துவக்கம்: வேல்ஸ் நிறுவனம்
    • அதிமுகவின் சட்ட விதிகளுக்கு இன்று ஊறு ஏற்பட்டுள்ளது – ஓபிஎஸ் குற்றச்சாட்டு
    • ஜென்னா ஒர்டேகா முதல் கேட் பிளான்செட்: 5 சிறந்த அழகு எம்மி விருதுகளிலிருந்து 2025
    • இணையத்தில் எழுந்த ‘கருப்பு’ கிண்டல்கள்: காரணம் என்ன?
    • அண்ணாவின் 117வது பிறந்த நாள்: இபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் மரியாதை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.