Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»நேபாள இடைக்கால பிரதமராக சுசீலா கார்கிக்கு ‘ஜென் ஸீ’ போராட்டக்காரர்கள் முழு ஆதரவு
    உலகம்

    நேபாள இடைக்கால பிரதமராக சுசீலா கார்கிக்கு ‘ஜென் ஸீ’ போராட்டக்காரர்கள் முழு ஆதரவு

    adminBy adminSeptember 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நேபாள இடைக்கால பிரதமராக சுசீலா கார்கிக்கு ‘ஜென் ஸீ’ போராட்டக்காரர்கள் முழு ஆதரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    காத்மாண்டு: நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி-க்கு போராட்டக்காரர்கள் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர் விரைவில் இடைக்கால பிரதமராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்​கள் நடத்​திய தீவிர போராட்​டங்​களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி​ (73) தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது. இதனால் அந்​நாட்​டில் அரசி​யல் குழப்​பம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், நாட்டின் இடைக்கால பிரதமராக யாரை தேர்வு செய்வது என்பது தொடர்பாக தொடர் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேபாள ராணுவத் தளபதி அஷோக் சிக்டெல், இது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.

    இதில், நேபாளத்தின் இடைக்கால பிரதமராக நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி-க்கு போராட்டக்காரர்கள் ஒருமனதமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். நாட்டின் இடைக்கால பிரதமராக பதவியேற்க அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். எனினும், நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமா என்பது குறித்து கருத்து வேறுபாடுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே, இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதில் தாமதம் ஏற்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

    இதனிடையே, இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக நேபாள அதிபர் பவுடெல், ராணுவத் தளபதி அஷோக் சிக்டெல், சுசீலா கார்கி ஆகியோர் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.

    உயிரிழப்பு அதிகரிப்பு: ஆட்சியாளர்களுக்கு எதிராக நேபாளத்தில் கடந்த ஒரு வாரமாக நடந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. கடந்த திங்கள் கிழமை போராட்டம் தொடங்கிய அன்று 19 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்த எண்ணிக்கை தொடர்ந்து கூடி வருகிறது.

    இந்திய பெண்மணி உயிரிழப்பு: காசியாபாத் நகரில் இருந்து நேபாளத்தின் பசுபதிநாத் கோயிலுக்கு ஆன்மிக சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட இந்தியர்களான ராம்வீர் சிங் கோலாவும் அவரது மனைவி ராஜேஷ் கோலாவும் அங்குள்ள 5 நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கி உள்ளனர். இம்மாதம் 9-ம் தேதி போராட்டக்காரர்கள் அந்த நட்சத்திர விடுதிக்கு தீ வைத்ததில் அதில் இருந்து தப்பிக்க ராம்வீர் சிங் கோலா, திரைச்சீலையைப் பயன்படுத்தி தனது மனைவியை கீழே இறக்க முயன்றுள்ளார். அப்போது, கை நழுவி அவர் கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜேஷ் கோலா உயிரிழந்துள்ளார். இன்று காலை அவரது உடல் காசியாபாத்தில் உள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டு வரப்பட்டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ‘சார்லி சுதந்திரமான பேச்சுக்கு அமெரிக்காவின் மிகப் பெரிய தியாகியாக மாறிவிட்டார்’: சார்லி கிர்க்கின் எக்ஸ் கைப்பிடி அவரது மரணத்தை துக்கப்படுத்துகிறது | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 12, 2025
    உலகம்

    அமெரிக்காவில் இந்திய வம்சாவளி நபர் தலை துண்டிக்கப்பட்டு கொலை: குடும்பத்தினர் கண்முன்னே நிகழ்ந்த கொடூரம்!

    September 12, 2025
    உலகம்

    பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை: காரணம் என்ன?

    September 12, 2025
    உலகம்

    இந்திய மூல மனிதர் நம்மில் தலை துண்டிக்கப்பட்டார்: ஒரு சலவை இயந்திரம் எப்படி கொடூரமான கொலை செய்ய வழிவகுத்தது; கொலையாளி துண்டிக்கப்பட்ட தலையை உதைப்பதைக் கண்டார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 12, 2025
    உலகம்

    நேபாள கலவரத்தை பயன்படுத்தி நிழல் உலக தாதா உதய் சேத்தி தப்பியோட்டம்: மேலும் 15,000 கைதிகள் மாயம்!

    September 12, 2025
    உலகம்

    பைஜு பட் சந்திக்கவும்: இந்திய-அமெரிக்க குடியேறியவர் இப்போது இளைய அமெரிக்க பில்லியனர்களிடையே நிகர மதிப்புள்ள… | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இயற்கையாகவே தலைகீழ் கொழுப்பு கல்லீரல்: இந்த அன்றாட உணவு கல்லீரல் கொழுப்பை மாதங்களுக்குள் 50% குறைக்கும்; புதிய ஆய்வு வெளிப்படுத்துகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிரதமர் மோடி நாளை மணிப்பூர் பயணம்: ரூ.7,300 கோடியிலான திட்டங்களுக்கு அடிக்கல்
    • “100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்களை சுரண்டுகிறது தமிழக அரசு” – அன்புமணி
    • தேங்காய் நீர் எதிராக விளையாட்டு பானங்கள்: இது விளையாட்டு வீரர்களுக்கான இறுதி நீரேற்றம் ரகசியம் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘சார்லி சுதந்திரமான பேச்சுக்கு அமெரிக்காவின் மிகப் பெரிய தியாகியாக மாறிவிட்டார்’: சார்லி கிர்க்கின் எக்ஸ் கைப்பிடி அவரது மரணத்தை துக்கப்படுத்துகிறது | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.