Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»தொடர் போராட்டம் எதிரொலி – நேபாள பிரதமர் ஷர்மா ஒலி ராஜினாமா
    உலகம்

    தொடர் போராட்டம் எதிரொலி – நேபாள பிரதமர் ஷர்மா ஒலி ராஜினாமா

    adminBy adminSeptember 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தொடர் போராட்டம் எதிரொலி – நேபாள பிரதமர் ஷர்மா ஒலி ராஜினாமா
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் தொடர் போராட்டம் காரணமாக அந்நாட்டின் பிரதமர் ஷர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்​ததை எதிர்த்தும், ஆட்சியாளர்களின் ஊழலைக் கண்டித்தும் நேற்று தலைநகர் காத்மாண்டுவில் பெரும் போராட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் உயி​ரிழந்​தனர். 200-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர்.

    இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, ஷர்மா ஒலி அரசுக்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெறுவது குறித்து நேபாள காங்கிரஸ் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது. நேபாள காங்கிரஸ் தலைவரான வேளாண் அமைச்சர் ராம் நாத் அதிகாரி, பிரதமர் கே.பி. ஒலி தலைமையிலான அரசாங்கத்தின் அடக்குமுறையைக் கண்டித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். நேற்று அரசாங்கம் போராட்டங்களைக் கையாண்டதற்கு தார்மீகப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் ராஜினாமா செய்தார்.

    காத்மாண்டுவுக்கு அப்பாலும் போராட்டங்கள் விரிவடைந்ததால், பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவை மீறி போராட்டக்காரர்கள் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர். லால்பாண்டி நகராட்சி அலுவலகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள், பல இடங்களில் போலீஸ் வாகனங்கள் மீது கல்வீசி தாக்கினர்.

    இந்நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ள பிரதமர் ஷர்மா ஒலி, பிரச்சினைக்குத் தீர்வு காணவும், அரசியல் ரீதியாக தீர்வுகள் முன்னெடுக்கப்படுவதற்கு உதவவும் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறியுள்ளார்.

    போராட்டங்கள் ஏற்படுத்திய விளைவு: கடந்த ஆண்டு செப்​டம்​பரில் நேபாள உச்ச நீதி​மன்​றம் வழங்​கிய தீர்ப்பை தொடர்ந்​து, சமூகவலைதள நிறு​வனங்​கள் பதிவு செய்​ய​வும், குறைதீர்ப்பு அதி​காரியை நியமிக்​க​வும் ஏழு நாட்​கள் அவகாசம் வழங்க நேபாள அமைச்​சரவை கடந்த மாதம் முடிவு செய்​தது. இந்த நிலை​யில், பதிவு செய்​து​கொள்​ளாத பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட26 சமூக வலை​தளங்​களை கடந்த வெள்​ளிக்​கிழமை முடக்கி நேபாள அரசு நடவடிக்கை மேற்​கொண்​டது. ஆன்​லைன் மோசடி மற்​றும் பண மோசடி ஆகிய​வற்றை சுட்​டிக்​காட்டி இதேபோன்​று, கடந்த ஜூலை​யில் டெலிகி​ராம் மெசேஜ் செயலியை நேபாள அரசு தடை செய்​தது.

    இந்த நிலையில், சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்தும், ஆட்சியாளர்களின் ஊழலைக் கண்டித்தும் இளைஞர்கள் அதிக அளவில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சமூக ஊடகங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நேபாள அரசு வாபஸ் பெற்றது. எனினும், ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்தன. இதன் காரணமாக, நேபாள காங்கிரஸ் தனது ஆதரவை விலக்கிக் கொள்ள பரீசீலித்த நிலையில் பிரதமர் ஷர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    நேபாள பிரதமரின் ராஜினாமா ஏற்பு – போராடும் இளைஞர்களின் கோரிக்கை என்ன?

    September 9, 2025
    உலகம்

    நேபாளத்தில் 2வது நாளாக நீடிக்கும் போராட்டம் – இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுரை

    September 9, 2025
    உலகம்

    ஜென் Z போராட்டம் எதிரொலி: நேபாளத்தில் சமூக ஊடகங்களின் மீதான தடை வாபஸ்!

    September 9, 2025
    உலகம்

    ரஷ்யாவில் மனிதர்​களிடம் நடத்​தப்​பட்ட புற்றுநோய் தடுப்பூசி சோதனை வெற்றி

    September 9, 2025
    உலகம்

    ஜெருசலேமில் தீவிரவாத தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு

    September 9, 2025
    உலகம்

    தேசத்தின் கவுரவம் காப்பதை மோடியிடம் கற்க வேண்டும்: நெதன்யாகுவுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர் அறிவுரை

    September 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “சனிக்கிழமைகளில் மட்டுமே மக்களை பார்ப்பேன் என்பது…” – விஜய் மீது அண்ணாமலை விமர்சனம்
    • இந்த வைட்டமின் குறைபாடு உங்கள் இரவுநேர குறட்டை | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!
    • “பிராட்வேக்கு மாற்றாக விரைவில் தற்காலிக பேருந்து நிலையங்கள்” – அமைச்சர் சேகர்பாபு தகவல்
    • கீல்வாதம் உணவு ரகசியம்: மூட்டுகளை குணப்படுத்தும் உணவுகள் மற்றும் அவற்றை காயப்படுத்தும் உணவுகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.