சர்வாதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதை அமெரிக்கா விரும்புகிறது. பொதுவாக சர்வாதிகாரிகள் மக்களின் கருத்துகள், ஊடகங்களின் செய்திகள் குறித்து துளியும் கவலைப்படுவது கிடையாது. அந்த வகையில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரபுடன் அமெரிக்கா நெருங்கி பணியாற்றியது.
பொருளாதார வளர்ச்சி, தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கான ரூபாயை வாரி இறைத்தோம். இந்த பெரும் தொகை மூலம் முஷாரபை விலைக்கு வாங்கினோம். அவர் ஆட்சியில் இருந்தபோது ஒரு வாரத்தில் பலமுறை சிஐஏ அதிகாரிகள் சந்தித்துப் பேசுவது வழக்கம். அமெரிக்கா என்ன சொன்னாலும் அதை முஷாரப் அப்படியே செயல்படுத்துவார்.

