Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»தாக்குதலுக்கு பதிலடி: இஸ்ரேலை நோக்கி நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசிய ஈரான்
    உலகம்

    தாக்குதலுக்கு பதிலடி: இஸ்ரேலை நோக்கி நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசிய ஈரான்

    adminBy adminJune 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தாக்குதலுக்கு பதிலடி: இஸ்ரேலை நோக்கி நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசிய ஈரான்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கடந்த 24 மணி நேரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் இரண்டு முறை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் ஏவியுள்ளது ஈரான் ராணுவம்.

    ‘ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்’ என்று இந்த தாக்குதலுக்கு பெயரிடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானின் முக்கிய ராணுவ மற்றும் அணுசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சமீபத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு நேரடி பதிலடியாக இந்த மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    முன்னதாக இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதிகள் மற்றும் அதிகாரிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்.

    இது தொடர்பாக ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் இஸ்லாமியக் குடியரசின் பகுதிகளில் காட்டுமிராண்டித்தனமான, குழந்தைகளைக் கொல்லும் சியோனிச பயங்கரவாத ஆட்சியாளர்களால் நேற்று காலை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக ஈரான் நாட்டின் தற்காப்பு பிரிவான இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, ஒரு வலிமையான மற்றும் துல்லியமான பதிலடியைத் தொடங்கியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்னொரு புறம், ஈரானிலிருந்து வரும் ஏவுகணைகள் கண்டறியப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் சைரன்கள் ஒலிக்கப்பட்டதாகவும், இஸ்ரேல் முழுவதும் பல்வேறு இடங்களில் வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    முன்னதாக வெள்ளிக்கிழமை ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது வான்வழி தாக்குதலை தொடுத்தது இஸ்ரேல். இதில் தெஹ்ரான் நகரில் உள்ள குடியிருப்புகள் உட்பட பல்வேறு கட்டிடங்கள் சிதிலமடைந்தன. இந்த தாக்குதலை அடுத்து ஈரான் வான்வெளி மூடப்பட்டது. இதை ஈரான் நாட்டின் அரசு ஊடக நிறுவனமான ஐஆர்என்ஏ உறுதி செய்தது. மேலும் அந்நாட்டின் ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது.

    Statement from the Islamic Revolutionary Guard Corps (IRGC):

    In response to the aggression and criminal assault carried out this morning by the savage, terrorist, and child-killing Zionist regime on areas within the Islamic Republic of Iran—resulting in the martyrdom of several… pic.twitter.com/CCFnOvvLSK


    — Iran Military (@IRIran_Military) June 13, 2025



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    காசாவில் இஸ்ரேல் செய்தது இனப்படுகொலை: ஐ.நா. விசாரணை ஆணையம் திட்டவட்டம்

    September 16, 2025
    உலகம்

    இந்தியன் அமெரிக்காவில் தலை துண்டிக்கப்பட்டது: காங்கிரஸ்காரர் ரோ கன்னா கூறுகையில், தாக்குதல் நடத்தியவர் தெருக்களில் ‘சுதந்திரமாக இருக்கக்கூடாது’ என்று கூறுகிறார்; அவரது குற்றவியல் கடந்த காலத்தை மேற்கோள் காட்டுகிறார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 16, 2025
    உலகம்

    ‘நீங்கள் சட்டவிரோதமாக வந்தால் …’: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மனிதர் தலை துண்டிக்கப்பட்ட பிறகு அமெரிக்க டி.எச்.எஸ். பிடன் நிர்வாகி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 16, 2025
    உலகம்

    சார்லி கிர்க் ஷூட்டிங்: கரேன் அட்டியா யார்? சார்லி கிர்க்கின் படுகொலை குறித்த கருத்துகளுக்குப் பிறகு வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் நீக்கப்பட்டார் | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 16, 2025
    உலகம்

    நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் மூவர் அமைச்சர்களாக பதவியேற்பு!

    September 15, 2025
    உலகம்

    வத்திக்கான் சிட்டி திகைப்புகள்: எலோன் மஸ்கின் சகோதரர் கிம்பலின் 3,000 ட்ரோன்கள் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா மீது தலைசிறந்த சின்னங்களுடன் வானத்தை ஒளிரச் செய்கின்றன | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கூட்டாட்சிக்கு எதிராக இந்தியை திணிக்கும் முயற்சி: அமித் ஷாவுக்கு தவெக கண்டனம்
    • டம்பிள் ட்ரையர், ரேடியேட்டர்கள் அல்லது டிஹைமிடிஃபையர் இல்லாமல் வீட்டிற்குள் வேகமாக துணிகளை எப்படி உலர்த்துவது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “நான் அப்படி சொல்லவே இல்லை!’ – ரிக்கி பான்ட்டிங்கை பதறவைத்த போலிச் செய்தி!
    • “பாமக எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்” – உதயநிதி விருப்பம்
    • பெண்களில் நாள்பட்ட அழற்சி இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது: அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள், அது இதயத்தை எவ்வாறு பாதிக்கிறது – இந்தியாவின் காலங்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.