Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»ஜோ பைடனுக்கு தீவிரமான புற்றுநோய் – விரைவில் குணமடைய ட்ரம்ப் விழைவு
    உலகம்

    ஜோ பைடனுக்கு தீவிரமான புற்றுநோய் – விரைவில் குணமடைய ட்ரம்ப் விழைவு

    adminBy adminMay 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஜோ பைடனுக்கு தீவிரமான புற்றுநோய் – விரைவில் குணமடைய ட்ரம்ப் விழைவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை (மே 18, 2025) தெரிவித்துள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமை (மே 16, 2025) அவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், புற்றுநோய் செல்கள் எலும்புக்கு பரவியுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் ஜோ பைடனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    புரோஸ்டேட் புற்றுநோய்களுக்கு க்ளீசன் மதிப்பெண் எனப்படும் ஒரு மதிப்பெண் வழங்கப்படுகிறது. இது சாதாரண செல்களுடன் ஒப்பிடும்போது புற்றுநோய் செல்கள் எவ்வாறு தோற்றமளிக்கின்றன என்பதை 1 முதல் 10 வரை அளவிடும். இதில், ஜோ பைடனின் மதிப்பெண் 9 என்றும், இது அவரது புற்றுநோய் தீவிரமாக இருப்பதைக் குறிக்கிறது என்றும் அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

    புரோஸ்டேட் புற்றுநோய் பெரும்பாலும் எலும்புகளுக்கு பரவுகிறது என்றும், இதற்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினம் என்றும் கூறப்படுகிறது.

    “இது நோயின் தீவிரமான வடிவத்தைக் குறிக்கும் அதே வேளையில், புற்றுநோய் ஹார்மோன் உணர்திறன் கொண்டதாகத் தோன்றுகிறது. இது பயனுள்ள சிகிச்சைமுறைக்கு அனுமதிக்கிறது. ஜோ பைடனும் அவரது குடும்பத்தினரும் அவரது மருத்துவர்களுடன் சிகிச்சை விருப்பங்களை மதிப்பாய்வு செய்து வருகின்றனர்.” என்று பைடனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    ஜோ பைடன் விரைவில் குணமடைய பல அரசியல் தலைவர்கள் தங்கள் ஆறுதல்களைத் தெரிவித்துள்ளனர். அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள செய்தியில், “ஜோ பைடனின் மருத்துவ அறிக்கை தொடர்பாக சமீபத்தில் தகவல் அறிந்து நானும் மெலனியாவும் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். ஜில் பைடன் மற்றும் குடும்பத்தினருக்கு நாங்கள் எங்கள் ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஜோ விரைவில் குணமடைய விரும்புகிறோம்.” என தெரிவித்துள்ளார்.

    முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் வெளியிட்டுள்ள செய்தியில், “பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதை அறிந்து நானும் எனது கணவரும் மிகவும் வருத்தமடைந்தோம். இந்த நேரத்தில் அவருக்காகவும், அவரது முழு குடும்பத்திற்காகவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். ஜோ ஒரு போராளி. அவர் இந்த சவாலை நம்பிக்கையுடன் எதிர்கொள்வார் என்பது எனக்குத் தெரியும். அவர் முழுமையாகவும் விரைவாகவும் குணமடைவார் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – ட்ரம்ப் ஒப்புதல்

    July 2, 2025
    உலகம்

    மானியத்தை ரத்து செய்தால் எலான் மஸ்க் தென்னாப்பிரிக்கா திரும்பிச் செல்ல நேரிடும்: ட்ரம்ப் எச்சரிக்கை

    July 2, 2025
    உலகம்

    காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்துக்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல்: ட்ரம்ப்

    July 2, 2025
    உலகம்

    ‘பணம் இல்லாத 7 நாட்கள்’: மர்மமான காணாமல் போன ஒரு வாரத்திற்குப் பிறகு இந்திய -ஆரிஜின் சிட்னி டீனேஜர் அனிஷா சதிக் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    July 2, 2025
    உலகம்

    மீண்டும் தீ வரிசையில் உள்ள சர்வதேச மாணவர்கள்: விசா பதவிக்காலத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுப்படுத்த டிரம்ப் நிர்வாகி முன்மொழிகிறார் – இந்தியாவின் நேரங்கள்

    July 1, 2025
    உலகம்

    ‘கடையை சாத்திக் கொண்டு தென் ஆப்பிரிக்கா செல்ல நேரிடும்’ – மஸ்க்கை மிரட்டும் ட்ரம்ப்?

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “அஜித்குமார் கொலையில் தொடர்புடைய ஐஏஎஸ் அதிகாரி யார்?” – அரசுக்கு அன்புமணி கேள்வி
    • கொழுப்பு கல்லீரல் நோயை மாற்றியமைக்கக்கூடிய 9 உணவுகள்
    • விண்வெளியில் இழந்த பெசோஸின் ஆதரவுடன் மீத்தேன் -கண்காணிப்பு செயற்கைக்கோள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை, திடீர் வெள்ளப்பெருக்கு: 10 பேர் பலி; 34 பேரை காணவில்லை
    • முல்லை பெரியாறு அணைக்கு ‘ரூல் கர்வ்’ முறையை நீக்க தமிழக விவசாயிகள் கோரிக்கை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.