
கர்த்தூம்: வடகிழக்கு ஆப்பிரிக்க பகுதியில் அமைந்துள்ள சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரில் அந்நாட்டு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அல்-ஃபாஷர் நகரை கைப்பற்றி உள்ளது பலம் பொருந்திய துணை ராணுவப் படையான ஆர்எஸ்எஃப்.
இந்த நகரை கைப்பற்றும் தங்கள் முயற்சியில் தங்களுக்கு துஷ்பிரயோகம் செய்த போராளிகள் பலரை கைது செய்துள்ளதாக ஆர்எஸ்எஃப் தெரிவித்துள்ளது. அல்-ஃபாஷர் நகரில் சுமார் 1.77 லட்சம் மக்களின் நிலை என்னவென்று அறிந்து கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது. 65,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த நகரில் இருந்து தப்பி உள்ளனர்.

