Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»‘சீர்திருத்தங்களை ஆதரித்தவர்!’ – போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்
    உலகம்

    ‘சீர்திருத்தங்களை ஆதரித்தவர்!’ – போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்

    adminBy adminApril 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘சீர்திருத்தங்களை ஆதரித்தவர்!’ – போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வாடிகன்: கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவர் போப் பிரான்சிஸின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “போப் பிரான்சிஸின் மறைவுக்கு உலகம் இன்று இரங்கல் தெரிவிக்கிறது. கத்தோலிக்க திருச்சபையைத் தாண்டி, அவர் தனது பணிவு மற்றும் ஏழைகள் மீதான தூய அன்பின் மூலம் கோடிக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்தினார்.

    இந்த ஆழ்ந்த இழப்பை உணரும் அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. போப் பிரான்சிஸின் மரபு நம்மை நீதியான, அமைதியான மற்றும் இரக்கமுள்ள உலகத்தை நோக்கி தொடர்ந்து வழிநடத்தும். அவரது ஆன்மா ஆறுதல் காணட்டும்.” என தெரிவித்துள்ளார்.

    போப் பிரான்சிஸ் காலமானதைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “போப் பிரான்சிஸ், சாந்தியடையட்டும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனுடன் போப், அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உடன் தனித்தனி சந்தர்ப்பங்களில் சந்தித்த புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    இந்தியா வந்துள்ள ஜே.டி. வான்ஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “போப் பிரான்சிஸ் காலமான செய்தியை இப்போதுதான் அறிந்தேன். உலகம் முழுவதும் அவரை நேசித்த கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களுக்கு என் இதயம் இரங்குகிறது.

    நேற்று அவரைப் பார்த்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன், இருப்பினும் அவர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆனால் கோவிட் தொற்றின் ஆரம்ப நாட்களில் அவர் ஆற்றிய மறையுரைக்காக நான் எப்போதும் அவரை நினைவில் கொள்வேன். அது மிகவும் அழகாக இருந்தது. கடவுள் அவரது ஆன்மாவை அமைதிப்படுத்தட்டும்.” என தெரிவித்துள்ளார்.

    இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஆழ்ந்த நம்பிக்கையும் எல்லையற்ற இரக்கமும் கொண்ட அவர், ஏழைகளை மேம்படுத்துவதற்கும், பிரச்சினை நிறைந்த உலகில் அமைதிக்காக அழைப்பு விடுப்பதற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

    மத்திய கிழக்கில் அமைதிக்காகவும், (காசாவில்) பிணைக் கைதிகள் பாதுகாப்பாகத் திரும்புவதற்காகவும் அவர் செய்த பிரார்த்தனைகள் விரைவில் நிறைவேறும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

    நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கூப் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நாம் வாழும் காலத்தில் உலகின் மிக முக்கிய பிரச்சினைகளை அங்கீகரித்து அவற்றிற்கு கவனம் செலுத்திய ஒரு தலைவருக்கு உலகளாவிய கத்தோலிக்க சமூகம் அஞ்சலி செலுத்துகிறது. நிதானமான வாழ்க்கை முறை, சேவை மற்றும் இரக்கச் செயல்கள் மூலம் போப் பிரான்சிஸ், கத்தோலிக்கர்கள் மற்றும் கத்தோலிக்கரல்லாதவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தார். நாங்கள் அவரை மிகுந்த மரியாதையுடன் நினைவுகூருகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

    இந்திய ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “போப் பிரான்சிஸ் ஓர் ஆழ்ந்த நம்பிக்கையாளராகவும், மாறுபட்ட பாரம்பரியவாதியாகவும் இருந்தார்! அவர் சீர்திருத்தத்தை ஆதரிப்பவராகவும், மதங்களுக்கு இடையேயான உரையாடலை ஆதரிப்பவராகவும் இருந்தார்.

    சுற்றுச்சூழல் மீதான அவரது அக்கறையும், மனித கடத்தலுக்கு எதிரான அவரது முயற்சிகளும் குறிப்பிடத்தக்கவை. சிறந்த புரிதலுக்கான அவரது அழைப்பு அவரது ஆதரவாளர்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்.

    புது டெல்லி மற்றும் வாஷிங்டன், டி.சி.யில் நடைபெற்ற உலக கலாச்சார விழாவில் வாழும் கலைக்கான அன்பான செய்தியுடன் அவர் தனது தூதரை அனுப்பியிருந்தார்.” என குறிப்பிட்டுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    அவர் ஒருபோதும் நிகழ்த்தாத அறுவை சிகிச்சைகள்: மருத்துவ மோசடி குற்றச்சாட்டுகளைத் தீர்ப்பதற்கு இந்தியன் -ஆரிஜின் ஹூஸ்டன் மருத்துவர் million 2 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்த ஒப்புக்கொள்கிறார் – இந்தியாவின் டைம்ஸ் ஆஃப் இந்தியா

    August 14, 2025
    உலகம்

    இந்தியா தினம் ஒத்திவைக்கப்படுவதால் இந்திய மாணவர் டப்ளினில் தாக்கப்படுவார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    August 14, 2025
    உலகம்

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எப்-16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா? – பாகிஸ்தானிடம் கேட்க அமெரிக்கா பதில்

    August 14, 2025
    உலகம்

    பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா – பாகிஸ்தான் இணைந்து தீவிரமாக செயல்பட முடிவு

    August 13, 2025
    உலகம்

    ‘ஒரு பேரழிவு நிகழக் காத்திருக்கிறது’ – காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்துக்கு பிரான்ஸ் எதிர்ப்பு

    August 13, 2025
    உலகம்

    இந்தியா, பாகிஸ்தான் உடனான எங்கள் உறவு நன்றாக உள்ளது: அமெரிக்கா கருத்து

    August 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ரேணுகாசுவாமி கொலை வழக்கு: ஜாமீன் ரத்தானதால் கன்னட நடிகர் தர்ஷன் மீண்டும் கைது
    • திருச்செந்தூர் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம் கோலாகலம்: ஆக.23-ல் தேரோட்டம்
    • ‘ஓரணியில் தமிழ்நாடு’ ஓடிபி தடையை விலக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
    • புற்றுநோய் கட்டிகளை எவ்வாறு அடையாளம் காண்பது: முக்கிய அறிகுறிகள், பொதுவான இடங்கள் மற்றும் ஒரு மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தமிழகத்தின் 32 பேர் உட்பட 1,090 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.