Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் ஜெய்சங்கர் சந்திப்பு
    உலகம்

    சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் ஜெய்சங்கர் சந்திப்பு

    adminBy adminJuly 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் ஜெய்சங்கர் சந்திப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பெய்ஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார்.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) தற்போதைய தலைவராக சீனா உள்ள நிலையில், அந்த அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் இன்று (ஜூலை 15) நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக நேற்று சீனா சென்ற ஜெய்சங்கர், அந்நாட்டின் துணை அதிபர் ஹான் ஜெங்கை சந்தித்துப் பேசினார்.

    அப்போது, இந்தியா – சீனா இடையேயான உறவு தொடர்ந்து இயல்பு நிலையில் இருக்க அவர் அழைப்பு விடுத்தார். மேலும், ராணுவ மோதலுக்குப் பிறகு அதாவது 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடங்கி இருப்பது இந்தியாவில் பரவலாகப் பாராட்டப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    எஸ்சிஓ அமைப்பின் வெற்றிகரமான சீன தலைமையை இந்தியா ஆதரிக்கிறது என்று தெரிவித்த ஜெய்சங்கர், இதில் பங்கேற்க இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார். கடந்த ஆண்டு அக்டோபரில் ரஷ்யாவின் கசன் நகரில் பிரதமர் மோடியும் அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துக்கொண்ட பிறகு இருதரப்ப உறவு சீராக மேம்பட்டு வருவதாகக் கூறிய ஜெய்சங்கர், தனது இந்த பயணம் அதை பராமரிக்கும் என நம்புவதாகக் கூறினார்.

    சர்வதேச நிலைமை மிகவும் சிக்கலானதாக உள்ள நிலையில், அண்டை நாடுகளாகவும் பெரிய பொருளாதாரங்களாகவும் உள்ள இந்தியாவும் சீனாவும் வெளிப்படைத் தன்மையுடன் கருத்துக்களைப் பரிமாரிக்கொள்வது மிகவும் முக்கியம் என ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

    சீன அதிபருடன் சந்திப்பு: இந்நிலையில், இன்று காலை சீன அதிபர் ஜி ஜின்பிங்கை ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். தனது இந்த சந்திப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இன்று காலை பெய்ஜிங்கில் அதிபர் ஜி ஜின்பிங்கை எனது சக எஸ்சிஓ வெளியுறவு அமைச்சர்களுடன் சந்தித்தேன்.

    குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். நமது இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து அதிபர் ஜி ஜியிடம் விளக்கினேன். அந்த வகையில் நமது தலைவர்களின் வழிகாட்டுதலை மதிக்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

    எஸ்சிஓ வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில், எஸ்சிஓ அமைப்பின் உறுப்பு நாடுகளான சீனா, ரஷ்யா, இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய 10 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

    பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரின் சீன பயணத்தைத் தொடர்ந்து தற்போது ஜெய்சங்கர் சீனா சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    விண்வெளி ஆய்வு நிறைவு – வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார் ஷுபன்ஷு சுக்லா!

    July 15, 2025
    உலகம்

    பூமிக்கு புறப்பட்டார் இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா: இன்று பிற்பகல் பசிபிக் கடலில் விண்கலம் இறங்கும்

    July 15, 2025
    உலகம்

    “உக்ரைன் மீதான போரை 50 நாட்களுக்குள் நிறுத்தவில்லை என்றால்…” – ரஷ்யாவுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

    July 14, 2025
    உலகம்

    விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு புறப்பட்டது ஷுபன்ஷு சுக்லா குழு!

    July 14, 2025
    உலகம்

    வருண் மோகன் கல்வித் தகுதிகள்: கூகிளின் 4 2.4 பில்லியன் AI முதலீட்டை ஒரு இந்திய -ஆஜின் எம்ஐடி பொறியாளர் எவ்வாறு பெற்றார் – இந்தியாவின் டைம்ஸ் ஆஃப் இந்தியா

    July 14, 2025
    உலகம்

    ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இரண்டு இந்திய மூல பெண்கள் இறக்கின்றனர்: சடங்கு தீ பெண்ணின் உயிரைக் கோருகிறது; கேரள தாய், குறுநடை போடும் குழந்தை துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இறந்து கிடந்தது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    July 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சொட்டு இல்லை, தாமதம் இல்லை: புதிய புற்றுநோய் உட்செலுத்துதல் சிகிச்சையின் நேரத்தை இங்கிலாந்தில் சில நிமிடங்களாக குறைக்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது லக்னோ நீதிமன்றம்
    • தமிழக அரசு வஞ்சிக்கலாமா? – ‘சிபில்’ விவகாரத்தில் விவசாயிகள் போராட்டம்
    • ஆப்டிகல் மாயை: இந்த வைரஸ் ஆப்டிகல் மாயையில் 2% மட்டுமே மறைக்கப்பட்ட ‘பி’ ஐ உண்மையில் கண்டுபிடிக்க முடியும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டப்படும்” – அரியலூரில் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.