Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»சவுதி இளவரசருடன் பிரதமர் மோடி சந்திப்பு: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
    உலகம்

    சவுதி இளவரசருடன் பிரதமர் மோடி சந்திப்பு: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

    adminBy adminApril 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சவுதி இளவரசருடன் பிரதமர் மோடி சந்திப்பு: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஜெட்டா: பிரதமர் மோடியின் விமானம் நேற்று சவுதி வான் எல்லைக்குள் நுழைந்ததும், அந்நாட்டு போர் விமானங்கள் பாதுகாப்பு அளித்து அழைத்துச் சென்றன. பிரதமர் மோடியின் வருகைக்கு அளிக்கப்பட்ட இந்த அரியவகை சிறப்பு மரியாதை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    பிரதமர் மோடி சவுதி, அரேபியா வரும்படி அந்நாட்டு இளவரசர் மற்றும் பிரதமர் முகமது பின் சல்மான் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று சவுதி அரேபியா சென்றார்.

    வெளிநாட்டு தலைவர்களின் வருகையின்போது, விமானநிலையத்தில் அந்நாட்டு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுவது வழக்கம். பிரதமர் மோடியின் சிறப்பு விமானம் சவுதி வான் எல்லைக்குள் நுழைந்ததும், அந்த விமானத்துக்கு சவுதி போர் விமானங்கள் பாதுகாப்பு அளித்து ஜெட்டா நகருக்கு அழைத்துச் சென்றன. சவுதி அரேபியாவின் நெருங்கிய நட்பு நாடாக இந்தியா உள்ளதால், பிரதமர் மோடிக்கு இந்த அரியவகை சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

    இதற்கு முன் கடந்த 2016 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் பிரதமர் மோடி சவுதி அரேபியா சென்றுள்ளார். இந்தியா – சவுதி அரேபியா இடையே நடைபெறும் இருதரப்பு கூட்டத்துக்கு, பிரதமர் மோடியும், சவுதி இளவரசரும் தலைமை தாங்குகின்றனர்.

    இதில் பொருளாதார உறவு, பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் இருதரப்பினர் இடையே விண்வெளி, எரிசக்தி, சுகாதாரம், அறிவியல், கலாச்சாரம் மற்றும் உயர் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

    சவுதி பயணத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: சவுதி அரேபியா இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடுகளில் ஒன்று. இந்தியா – சவுதி அரேபியா இடையிலான உறவு அளவற்ற ஆற்றலுடையது. இது மேலும் வலுவடைய வேண்டும் என விரும்பும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தொலைநோக்கு பார்வையுடையவர். விஷன் 2030 என்ற தலைப்பின் கீழ் அவர் கொண்டுவந்த சீர்திருத்தங்கள் உலகளாவிய பாராட்டை பெற்றது.

    நான் சவுதி இளவரசரை சந்திக்கும்போதெல்லாம், அவர் என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறார். அவரது அறிவு, முற்போக்கு சிந்தனை, மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் ஆர்வம் ஆகியவை மிகவும் குறிப்பிடத்தக்கது. சவுதி அரேபியாவுடனான இந்திய உறவை நான் பெருமையாக கருதுகிறேன். எங்கள் உறவு புதிதல்ல. இரு நாடுகள் இடையேயான கலாச்சார பரிமாற்றம் நூற்றுாண்டுகள் பழமையானது. அனைத்து துறைகளிலும், இரு நாடுகள் இடையே நீண்ட நெடிய தொடர்பு உள்ளது.

    டெல்லியில் கடந்த 2023-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தியா-மத்திய கிழக்கு – ஐரோப்பா வர்த்தக வழித்தடம் (ஐஎம்இஇசி) வரும்காலங்களில் அனைத்து துறைகளிலும் இணைப்பை ஏற்படுத்தும். இது ஒட்டுமொத்த பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாக இருக்கும். இந்த வழித்தடம் ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை ஒருங்கிணைக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    இந்தியாவையும், ரஷ்யாவையும் இருண்ட சீனாவிடம் நாம் இழந்துவிட்டோம்: டொனால்டு ட்ரம்ப்

    September 5, 2025
    உலகம்

    டொனால்ட் டிரம்பின் உயர்-ஐ.க்யூ குழு: டிரம்பின் வெள்ளை மாளிகை இரவு உணவில் எத்தனை இந்திய வம்சாவளி தொழில்நுட்ப நிறுவனங்கள் இருந்தன-பெயர்கள் மற்றும் சுயவிவரங்கள் | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 5, 2025
    உலகம்

    ஆக்ஸ்போர்ட்டில் உள்ள ஜி.யு.போப் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

    September 5, 2025
    உலகம்

    ஜிம் மேக்ஸ்வீன் யார்? கனடாவின் யார்க் காவல்துறைத் தலைவர் கூறுகையில், ‘வீட்டு படையெடுப்பின் போது மறைத்து இணங்குவதே சிறந்த பாதுகாப்பு’ | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 5, 2025
    உலகம்

    இந்தியா உடனான நல்லுறவை மீட்டெடுக்க வேண்டும்: ட்ரம்ப்புக்கு ஜேக் சல்லிவன், கர்ட் எம் கேம்ப்பெல் வலியுறுத்தல்

    September 5, 2025
    உலகம்

    ஆப்கானிஸ்தானில் மீண்டும் 2 சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள்!

    September 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆரோக்கியத்திற்கு வரும்போது 40 வயதிற்குள் செய்வதை நிறுத்த வேண்டிய 5 விஷயங்கள்
    • பொதுச் செயலாளராக தேர்வு: இபிஎஸ்-க்கு எதிரான வழக்கை நிராகரித்து நீதிமன்றம் உத்தரவு
    • திருச்சியில் செப்டம்பர் 13-ம் தேதி தேர்தல் பிரச்சாரம் தொடங்குகிறார் விஜய்?
    • தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
    • மருத்துவக் கல்வி ஆராய்ச்சி இயக்ககத்தின் புதிய இயக்குநராக சுகந்தி ராஜகுமாரி நியமனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.