Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»சட்டவிரோத குடியேற்றம்: லாஸ் ஏஞ்சல்ஸில் 44 பேர் கைது; மக்கள் போராட்டத்தால் பரபரப்பு
    உலகம்

    சட்டவிரோத குடியேற்றம்: லாஸ் ஏஞ்சல்ஸில் 44 பேர் கைது; மக்கள் போராட்டத்தால் பரபரப்பு

    adminBy adminJune 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சட்டவிரோத குடியேற்றம்: லாஸ் ஏஞ்சல்ஸில் 44 பேர் கைது; மக்கள் போராட்டத்தால் பரபரப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்​கா​வில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், சட்ட​விரோத​மாக​வும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடுகடத்தி வருகிறார் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப். இந்நிலையில், அவரது உத்தரவுக்கு ஏற்ப முறையான ஆவணங்கள் இல்லாமல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அத்துமீறி தங்கியிருந்த 44 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

    இந்த கைது நடவடிக்கையை அடுத்து நகரில் பல்வேறு இடங்களில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் அதிகளவிலான மக்கள் பங்கேற்றனர். அதை கலைக்க போலீஸ் தரப்பில் முயற்சி நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    நடந்தது என்ன? அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைந்துள்ளது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம். இது அமெரிக்காவில் அதிக மக்கள் வசிக்கும் நகரங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில், இந்த நகரில் சில இடங்களில் சோதனை மேற்கொண்டு சட்டவிரோத குடியேறிகளை கைது செய்துள்ளனர். அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு துறையின் விசாரணையில் 3 இடங்களில் மட்டுமே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் சுமார் 7 இடங்களில் இந்த சோதனை நடந்ததாக புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவு அளிக்கும் குழுக்கள் தெரிவித்துள்ளன.

    இந்த கைது நடவடிக்கையை அடுத்து நகரில் பல்வேறு இடங்களில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் அதிகளவிலான மக்கள் பங்கேற்றனர். அதை கலைக்க போலீஸ் தரப்பில் முயற்சி நடந்தது. ‘கைது செய்தவர்களை விடுவிக்கவும். அவர்கள் இங்கேயே தங்கியிருக்க அனுமதிக்கவும்’ என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். புலம்பெயர்ந்தவர்கள் அதிகம் பணிபுரியும் வணிக நிறுவனங்களை டார்கெட் செய்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போராட்டம் தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேயர் கண்டனம்: லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ், இந்த சோதனைக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். “புலம்பெயர்ந்தோருக்கு அடைக்கலம் தரும் நகரத்தின் மேயராக இதை நான் சொல்கிறேன். நகரத்தின் வளர்ச்சி சார்ந்து பல்வேறு வழிகளில் பங்களிக்கும் புலம்பெயர்ந்தோர் மீதான இந்த நடவடிக்கையை கண்டு கோபமடைந்துள்ளேன். இது நமது சமூகத்தில் பயங்கரவாதத்தை விதைக்க வழிவகுக்கும். மேலும், நகரத்தின் பாதுகாப்பு கொள்கைகளை சீர்குலைக்கும் வகையில் உள்ளது” என அவர் கூறினார்.

    இருப்பினும் இந்த நடவடிக்கை நியாயமான ஒன்றுதான் என்றும். இதன் மூலம் சமூகத்துக்கு அச்சுறுத்தல் அளித்து வருபவர்கள் மட்டுமே கைது செய்யப்படுவதாக குடியேற்ற அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

    அமெரிக்​கா​வில் முறையான ஆவணங்கள் இல்லாமலும் சட்ட​விரோத​மாக​வும் குடியேறிய​வர்களை கண்டறிந்து நாடு கடத்தி வருகிறார் அதிபர் ட்ரம்ப். இது அவரது அரசு நிர்வாகத்தின் கொள்கை ரீதியான முடிவு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ‘நீங்கள் வண்ணங்களை மாற்ற முடியாது’: இனவெறி தாக்குதலில் இந்திய மாணவர் தாக்கப்பட்டார்; ஒருவர் கைது செய்யப்பட்டார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    July 23, 2025
    உலகம்

    சர்வதேச நாணய நிதியத்தை விட்டு வெளியேற கீதா கோபிநாத்: ஆகஸ்டில் ஹார்வர்டுக்குத் திரும்புதல்; விரைவில் பெயரிடப்பட வேண்டும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    July 23, 2025
    உலகம்

    காசாவில் மூன்று நாட்களில் 21 சிறுவர்கள் உணவின்றி உயிரிழப்பு: ஐ.நா பகிர்வு

    July 23, 2025
    உலகம்

    பாகிஸ்தானில் குடும்பத்தினரின் விருப்பத்தை மீறி காதல் திருமணம் செய்த தம்பதி ஆணவக் கொலை

    July 23, 2025
    உலகம்

    சிங்கப்பூரில் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மூலதன முன்னாள் கோப்: மியான்மர் பணிப்பெண்ணின் அபாயகரமான துஷ்பிரயோகத்திற்கு 10 ஆண்டுகள்; பாதிக்கப்பட்டவர் பட்டினி கிடந்தார், வெறும் 24 கிலோ – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    July 22, 2025
    உலகம்

    ‘அவர்கள் வாழ்க்கையைப் பொருட்படுத்தாத விலங்குகளைப் போன்றவர்கள்’: 8 இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆண்கள் கடத்தல், சித்திரவதை, மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றிற்காக அமெரிக்காவில் வைத்திருக்கிறார்கள்; இந்தியாவில் கொலைகளுடன் எஃப்.பி.ஐ கும்பலை இணைக்கிறது | சண்டிகர் செய்தி – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘தனிநபர் வருமானம் அதிமுக ஆட்சியை காட்டிலும் இருமடங்கு வளர்ச்சி’ – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
    • ஒரு செல்லப்பிள்ளை வெள்ளெலி பெறுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்
    • 3-வது நாளாக தொடரும் அமளி – நாடாளுமன்ற இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைப்பு
    • ராமேசுவரம் கோயிலில் ரூ.1.14 கோடி உண்டியல் காணிக்கை வருவாய்
    • பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.