இந்த போதைப் பொருட்கள் நுழைந்திருந்தால், 25,000 அமெரிக்கர்கள் இறந்திருப்பர். கடத்தலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரும் வழக்கு விசாரணைக்காக அவர்களின் சொந்த நாடான ஈக்குவடார் மற்றும் கொலம்பியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் ஏற்றி வந்த நீர்மூழ்கி கப்பல் எந்த நாட்டில் இருந்து புறப்பட்டது என்பதை அமெரிக்கா தெரிவிக்கவில்லை.
இந்த நீர்மூழ்கி கப்பல் ரகசிய கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்டு கொலம்பியாவிலிருந்து மத்திய அமெரிக்கா அல்லது மெக்சிகோவுக்கு போதைப் பொருள் கடத்தலுக்கு நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

