Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை: ட்ரம்ப் திட்டவட்டம்
    உலகம்

    கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை: ட்ரம்ப் திட்டவட்டம்

    adminBy adminSeptember 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை: ட்ரம்ப் திட்டவட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வாஷிங்டன்: கத்தார் மீது தாக்குதல் நடத்தும் முடிவு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவால் எடுக்கப்பட்டது என்றும், அதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

    கத்தார் தலைநகர் தோஹா மீது இஸ்ரேல் நேற்று வான் தாக்குதல் நடத்தியது. தோஹாவில் உள்ள ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னணியில் அமெரிக்கா இருந்ததாகவும் செய்தி வெளியானது. இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “கத்தார் மீது தாக்குதல் நடத்தும் முடிவு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவால் எடுக்கப்பட்டது. அது எனது உத்தரவுப்படி நடத்தப்பட்டதல்ல. கத்தார் மீதான ஒருதலைப்பட்சமான தாக்குதல், அமெரிக்காவின் நலனுக்கோ இஸ்ரேலின் நலனுக்கோ உதவாது” என தெரிவித்துள்ளார்.

    இஸ்ரேலின் இந்த தாக்குதல் அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதை இது வெளிக்காட்டுவதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு இந்தியா ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், “தோஹா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய செய்திகளைப் பார்த்தோம். இந்த சம்பவம் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு, பிராந்தியத்தின் பாதுகாப்பில் அதன் தாக்கம் குறித்தும் நாங்கள் மிகவும் கவலை கொண்டுள்ளோம். பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பு ஆபத்தில் சிக்காமல் இருக்க, நிதானத்தையும் ராஜதந்திரத்தையும் நாங்கள் கடுமையாக வலியுறுத்துகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டது.

    இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு சீனா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனிடையே, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க ஐநா பாதுகாப்பு அவையின் அவசர கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது.

    இதனிடையே, இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேலிய வானொலிக்கு பேட்டி அளித்த ஐநாவுக்கான இஸ்ரேல் தூதர், “இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய நாடுகள். அமெரிக்கா, எங்களுக்கு நம்ப முடியாத ஆதரவை வழங்குகிறது. அதைப் பாராட்டுகிறோம். அதேநேரத்தில், சில சமயங்களில் நாங்கள் முடிவுகளை எடுத்து பிறகு அதனை அமெரிக்காவுக்குத் தெரிவிக்கிறோம். நாங்கள் எப்போதும் அமெரிக்காவின் நலன்களுக்காக செயல்படுவதில்லை. இஸ்ரேல் நடத்தியது கத்தார் மீதான தாக்குதல் அல்ல. அது ஹமாஸ் மீதான தாக்குதல். இது தொடர்பாக இஸ்ரேல் எடுத்த முடிவு மிகவும் சரியானது” என தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    பிரான்ஸில் தொடங்கிய ‘அனைத்தையும் தடுப்போம்’ போராட்டம் – 200 பேர் கைது

    September 10, 2025
    உலகம்

    இந்தியாவிடம் திடீரென இறங்கி வரும் ட்ரம்ப் – பின்னணியில் அச்சமா, ராஜதந்திரமா?

    September 10, 2025
    உலகம்

    சர்வதேச விமான நிலையம் மூடல்; உச்ச நீதிமன்ற விசாரணை ரத்து: ராணுவ கட்டுப்பாட்டில் நேபாளம்

    September 10, 2025
    உலகம்

    இந்தியாவின் நியாயமற்ற வர்த்தகம் அமெரிக்காவுக்கு தேவையில்லை: பீட்டர் நவரோ

    September 10, 2025
    உலகம்

    30 ஆண்டு கால ஊழலை விசாரிக்கவும்; நேபாள அரசமைப்பை திருத்தவும் – ஜென் z போராட்டக்காரர்கள் நிபந்தனை!

    September 10, 2025
    உலகம்

    நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலகினார்: அதிபர், பிரதமர் மாளிகை, நாடாளுமன்றத்துக்கு தீ வைப்பு – முழு விவரம்

    September 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘தவெக தொண்டர்கள் மரம் ஏறி நிற்க கூடாது’ – விஜய்யின் திருச்சி பிரச்சாரத்துக்கு 23 நிபந்தனைகள்
    • இந்திய அரசின் உதவியுடன் பருத்தித்துறை துறைமுகத்தை மேம்படுத்த இலங்கை அரசு ஒப்புதல்
    • மாதுளை நன்மைகள்: இருதய ஆரோக்கியம்: 5 காரணங்கள் இதய நோயாளிகளுக்கு இந்த பழம் சிறந்தது, பிரபலமான மருத்துவ உணவு நிபுணரின் படி | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிரான்ஸில் தொடங்கிய ‘அனைத்தையும் தடுப்போம்’ போராட்டம் – 200 பேர் கைது
    • “இயலாமையால் பொறாமை…” – செங்கோட்டையன், தினகரன் மீது ஆர்.பி.உதயகுமார் தாக்கு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.