Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»எஸ்சிஓ உச்சிமாநாடு பிரகடனத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குக் கண்டனம்
    உலகம்

    எஸ்சிஓ உச்சிமாநாடு பிரகடனத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குக் கண்டனம்

    adminBy adminSeptember 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    எஸ்சிஓ உச்சிமாநாடு பிரகடனத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குக் கண்டனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தியான்ஜின்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ ) பிரகடனத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை இந்தியா எடுத்தது.

    இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2 நாள் உச்சிமாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்று வருகிறது. மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று, மாநாட்டின் பிரகடனங்கள் வெளியிடப்பட்டன. அதில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த பிரகடனத்தில், “பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உறுப்பு நாடுகள் தங்கள் கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றன.

    இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தாக்குதலை நடத்தியவர்கள், ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், எல்லை தாண்டிய ஊடுருவல்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் தியான்ஜின் பிரகடனம் அழைப்பு விடுத்துள்ளது. இதபோல், பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    10 உறுப்பினர்களைக் கொண்ட எஸ்சிஓ அமைப்பில் பாகிஸ்தானும் உள்ளது. முன்னதாக, எஸ்சிஓ மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதம் தொடர்பான பிரச்சினையில் எந்த வகையான இரட்டை நிலைப்பாட்டையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறினார். சில நாடுகள் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிப்பதாக பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் அவர் குற்றம் சாட்டினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    உக்ரைன் உடனான மோதலை விரைவில் முடிவுக்கு வர புதினிடம் மோடி வலியுறுத்தல்

    September 1, 2025
    உலகம்

    ஆப்கானிஸ்தான் பூகம்பம்: பலி 800 ஆக அதிகரிப்பு; 4500+ காயம்

    September 1, 2025
    உலகம்

    புளோரிடாவின் “அலிகேட்டர் அல்காட்ராஸ்” காலியாக உள்ளது: சட்டவிரோத குடியேறியவர்களுக்கான டிரம்பின் கனவு சிறை ஏன் மூடப்படுகிறது | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 1, 2025
    உலகம்

    பனிப்போர் மனநிலையை எதிர்க்க வேண்டும்: எஸ்சிஓ உச்சிமாநாட்டில் சீன அதிபர் பேச்சு

    September 1, 2025
    உலகம்

    ‘தேசத்துரோகம் மற்றும் சட்டவிரோதமானது’: புகலிடம் கோருவோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் குறித்த எலோன் மஸ்க் பிளாஸ்ட்ஸ் இங்கிலாந்து நிலைப்பாடு | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 1, 2025
    உலகம்

    ஷாங்காய் மாநாட்டுக்குப் பின் புதினுடன் ஒரே காரில் சென்ற பிரதமர் மோடி

    September 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தமிழகத்தில் 17 பல்கலை.கள் தேசிய கல்வி கொள்கையை பின்பற்றுவதாக தமிழக பாஜக தகவல்
    • இந்தியாவில் பாஸ்போர்ட்ஸ் விளக்கினார்: சாதாரண, இராஜதந்திர, அதிகாரப்பூர்வ, ஈ.சி.ஆர் vs அல்லாத ஈ.சி.ஆர்
    • “பிரதமர் மோடியின் சீனப் பயணம் ஏற்றுக்கொள்ள முடியாதது…” – ஜோதிமணி எம்.பி விமர்சனம்
    • பூண்டு ஆரோக்கிய நன்மைகள்: கல்லீரல் செயல்பாடு முதல் கொழுப்பு வரை: பூண்டு உட்கொள்ள 5 காரணங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: மும்பை வீதிகளில் போராடக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.