Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»‘ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலில் நியாயம் ஏதும் இல்லை’ – ரஷ்ய அதிபர் புதின்
    உலகம்

    ‘ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலில் நியாயம் ஏதும் இல்லை’ – ரஷ்ய அதிபர் புதின்

    adminBy adminJune 23, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலில் நியாயம் ஏதும் இல்லை’ – ரஷ்ய அதிபர் புதின்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மாஸ்கோ: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் நியாயம் ஏதும் இல்லை என்றும், ஈரான் மக்களுக்கு ரஷ்யா உதவ முயற்சிக்கிறது என்றும் தன்னை சந்தித்த ஈரான் வெளியுறவு அமைச்சரிடம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார்.

    ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மாஸ்கோவில் நடந்த இந்த பேச்சுவார்த்தையின்போது, இஸ்ரேல் உடனான போரின் நிலவரம் குறித்து அப்பாஸ் அரக்சியிடம் ரஷ்ய அதிபர் புதின் கேட்டறிந்தார்.

    அப்போது, “ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் நியாயம் ஏதும் இல்லை. ஈரான் மக்களுக்கு ரஷ்யா உதவ முயற்சிக்கிறது” என்று புதின் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மத்திய கிழக்குப் பகுதியில் இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதலில். அந்தப் பிராந்தியத்தை சேராத அந்நிய சக்திகளின் ஈடுபாடு உலகையே பெரிய ஆபத்தை நோக்கி நகர்த்துவதாகவும் புதின் குறிப்பிட்டுள்ளார்.

    ஈரானின் தேவைக்கு ஏற்ப பல்வேறு வழிகளில் அந்நாட்டுக்கு உதவ ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறும்போது, “ஈரானுக்கு என்ன தேவை என்பதை கேட்டறிந்து உதவத் தயாராக உள்ளோம். எங்களது மத்தியஸ்த முயற்சிகளை உறுதியாக அளித்து வருகிறோம். இஸ்ரேல் – ஈரான் மோதலில் எங்களது ஆதரவு யாருக்கு என்பதை நாங்கள் தெளிவுப்படுத்தி உள்ளோம். இது முக்கியமானதும் கூட. நாங்கள் ஈரானை ஆதரிக்கிறோம். அமெரிக்கா மற்றும் ரஷ்ய நாட்டு அதிபர்களின் சமீபத்திய பேச்சுவார்த்தைகளில் கூட ஈரான் குறித்து அதிகம் பேசி உள்ளனர்” என்று பெஸ்கோவ் கூறியுள்ளார்.

    புதினுக்கு கமேனி கடிதம்: ஈரான் மீது அமெரிக்கா நேரடியாக தாக்குதல் நடத்திய நிலையில், ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி, தங்கள் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சியை ரஷ்யாவுக்கு அனுப்பினார். மாஸ்கோவில் நடந்த சந்திப்பின்போது, கமேனி அளித்த கடிதம் ஒன்றை அதிபர் புதினிடம் அப்பாஸ் அரக்சி கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    தங்களுக்கு ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் உதவிகள் தேவை என ஈரான் தரப்பு கோரி இருக்கலாம் எனத் தெரிகிறது. எனினும், அது எந்த மாதிரியான உதவி என்பது தெரிவிக்கப்படவில்லை. கடந்த 2022-ம் ஆண்டு முதல் உக்ரைன் உடன் ரஷ்யா போரிட்டு வருகிறது. இந்தச் சூழலில் தங்களது நெடுநாள் நட்பு நாடான ஈரானுக்கு எந்த வகையிலான உதவியை ரஷ்யா வழங்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ரஷ்யா உடன் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இணக்கமான போக்கை கடைப்பிடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்க தாக்குதலுக்குப் பின்… – ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்களை அமெரிக்கா குறிவைத்து தாக்கி அழித்ததற்கு பதிலடியாக, ஈரான் மிகவும் சக்தி வாய்ந்த கொராம்ஷர்-4 உள்ளிட்ட 40 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்தியது. இதனிடையே, ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, “இஸ்ரேல் ஒரு பெரிய தவறை செய்துவிட்டது. இது, மிகப் பெரிய குற்றம். அதற்காக இஸ்ரேல் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். அது இப்போது தண்டிக்கப்பட்டு வருகிறது” என்று காட்டமாக குறிப்பிட்டிருந்தார்.

    அதேவேளையில், இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, ரிசோன் லெசியொன், பீர்சேபா, சாபத், ஆஸ்கெலான், ஆஸ்டோட், பெய்சன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் தொடர்ச்சியாக ஏவுகணைகளை வீசி வருகிறது. இதற்கு பதிலடி தரும் வகையில், இஸ்ரேல் விமான படை நடத்திய தாக்குதலில் ஈரானின் 6 விமான படை தளங்கள் மற்றும் ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டன. 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தீயில் எரிந்து நாசமாகின.

    அதேபோல், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ‘எவின்’ சிறைச்சாலையை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் குண்டு மழை பொழிந்தன. இதில், அந்தச் சிறைச்சாலை கடும் சேதம் அடைந்துள்ளதாகவும், 15,000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அந்த சிறையில் இருந்து கைதிகள் பலர் தப்பிச் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஈரான் – இஸ்ரேல் இடையே 11-வது நாளாக மோதல் நீடிக்கும் நிலையில், ஈரான் – இஸ்ரேல் இடையே 11-வது நாளாக மோதல் நீடிக்கும் நிலையில், ஈரான் தாக்குதல்களில் இஸ்ரேலில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். 900-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அதேவேளையில், இஸ்ரேல் தாக்குதல்களில் ஈரானில் இதுவரை 950 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 3,450 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல் – 16 ராணுவ வீரர்கள் பலி

    June 28, 2025
    உலகம்

    காசாவில் ஒரு வாரத்தில் போர் நிறுத்தம்: ட்ரம்ப் நம்பிக்கை

    June 28, 2025
    உலகம்

    ”இஸ்ரேலுக்கு ‘அப்பா’விடம் ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை” – ஈரான் காட்டம்

    June 28, 2025
    உலகம்

    கொமேனியை அழிக்கும் திட்டம் இருந்தது: இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் கருத்து

    June 28, 2025
    உலகம்

    சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவுடன் விரைவில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வோம்: ட்ரம்ப் சூசகம்

    June 28, 2025
    உலகம்

    யுரேனியம் செறிவூட்டலை கைவிட்டால் ஈரானுக்கு பல சலுகை: அமைதி பேச்சுவார்த்தையில் அமெரிக்கா மும்முரம்

    June 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பிராடாவின் சர்ச்சைக்குரிய கோலபுரி சாப்பல்: கலாச்சார ஒதுக்கீடு அல்லது உத்வேகம்? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நா.முத்துக்குமாரின் கவிதையை திரைப்படமாக்கும் வெற்றிமாறன்!
    • காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், சூளைமேடு அஞ்சுகம் பள்ளிகளில் ரூ.14 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
    • ஒரு உறவின் ஆரம்பத்தில் அர்ப்பணிப்பு சிக்கல்களை வெளிப்படுத்தும் 7 நுட்பமான சிவப்புக் கொடிகள்
    • இந்திய அளவில் ரூ.16 கோடி மட்டுமே வசூல் செய்த ‘கண்ணப்பா’

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.