Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடிப்புச் சம்பவம்: 4 பேர் உயிரிழப்பு, 500+ காயம் – நடந்தது என்ன?
    உலகம்

    ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடிப்புச் சம்பவம்: 4 பேர் உயிரிழப்பு, 500+ காயம் – நடந்தது என்ன?

    adminBy adminApril 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடிப்புச் சம்பவம்: 4 பேர் உயிரிழப்பு, 500+ காயம் – நடந்தது என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தெஹ்ரான்: தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள ஷாஹித் ராஜேய் துறைமுகத்தில் நிகழ்ந்த பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே அணுசக்தி தொடர்பான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை ஓமனில் தொடங்கிய அதே நேரத்தில், தெற்கு ஈரானில் சனிக்கிழமை இந்த வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. இந்த பயங்கர வெடிப்புச் சம்பவம், எதனால் நிகழ்ந்தது என்ற உறுதியான காரணம் இதுவரை தெரியவில்லை. என்றாலும், துறைமுகத்தில் உள்ள கன்டெய்னர்களில் வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ஜெருசலேம் போஸ்ட் தகவலின்படி, இஸ்லாமிக் புரட்சிகர காவல் படையின் (ஐஆர்ஜிசி) கப்பல் தளம் அருகே இந்த வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. எனினும், இந்தச் சம்பவத்தில் தொடர்பு எதுவும் இல்லை என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை மறுத்துள்ளது. சமூக ஊடங்களில் பரவி வரும் வீடியோக்களில், பயங்கர வெடிப்புக்கு பின்பு கரும்புகையானது மேகம் போல மேலெழுவதைக் காண முடிகிறது. மற்றொரு வீடியோவில் சேதமடைந்த வாகனங்கள், கட்டிடங்களைப் பார்க்க முடிகிறது. இதனிடையே சிலர் காயமடைந்தவர்களுக்கு உதவுவதும், சேதங்களை ஆய்வு செய்வதும் பதிவாகி உள்ளது.

    உள்ளூர் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் கூறுகையில், ‘ஷாஹித் ராஜேய் துறைமுகத்தில் பல கன்டெய்னர்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இந்த வெடி விபத்துச் சம்பவம் நடந்துள்ளது. காயம் அடைந்தவர்களை வெளியேற்றி சிகிச்சைக்கு அனுப்பும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. உள்ளூர் அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தில் இருந்து அனைவரையும் வெளியேற்றி வரும் நிலையில், மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

    இந்த பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் இதுவரை 281 பேர் காயமடைந்துள்ளதாக ஈரானின் அதிகாரபூர்வ ஊடகச் செய்தியில் முதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், இந்தச் சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஷாகித் ராஜேய் துறைமுகம் என்பது எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல்களை கையாளும் வசதிகள் கொண்ட, மிகப் பெரிய கன்டெய்னர் போக்குவரத்துக்கான முக்கிய கேந்திரமாகும் என்பது கவனிக்கத்தக்கது.

    அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ,ஸ்டீவ் விட்காஃப், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஆகியோர் இடையே ஓமனில் அணுசக்தி பேச்சுவார்த்தை நடந்து வரும்நிலையில், இந்த வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பொருளாதார தடைக்களுக்கான நிவாரணங்களுக்காக ஈரானின் அணுசக்தி திட்டங்களைக் குறைப்பதே இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கம்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    அணு ஆயுதத்தை ஏவ கட்டளையிடும் தலைவர்கள் அனைவரும் இறந்தாலும் பழிக்கு பழிவாங்க ரஷ்யா தயார் நிலையில் வைத்துள்ள ‘டெட் ஹேண்ட்’

    August 12, 2025
    உலகம்

    ‘சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் அதை அழிப்போம்’ – பாக். ராணுவ தளபதி பேச்சு

    August 11, 2025
    உலகம்

    துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 16 கட்டிடங்கள் தரைமட்டம்; மீட்புப் பணிகள் தீவிரம்

    August 11, 2025
    உலகம்

    உக்ரைன் அமைதிக்காக அறிக்கை வெளியிட்ட ஐரோப்பிய தேச தலைவர்கள்: ஜெலன்ஸ்கி நன்றி

    August 10, 2025
    உலகம்

    இந்திய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க தடை: பாகிஸ்தானுக்கு 2 மாதங்களில் ரூ.1,240 கோடி இழப்பு

    August 10, 2025
    உலகம்

    இந்தியா மீது 50 சதவீத வரிவிதிப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஜனநாயகக் கட்சி எம்.பி. எதிர்ப்பு

    August 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • முருகன் வரலாறா அல்லது மு.க.ஸ்டாலின் வரலாறா? – அன்புமணி சாடல்
    • ஹார்வர்ட்-பயிற்சி பெற்ற காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் சிறந்த குடல் ஆரோக்கியம், மென்மையான செரிமானம் மற்றும் நீடித்த ஆற்றலுக்கான 10 எளிதான காலை பழக்கங்களைப் பகிர்ந்து கொள்கிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சிராக் பாஸ்வான் முதல் பிரசாந்த் கிஷோர் வரை… பிஹாரில் கோலோச்சும் சிறிய கட்சிகள்!
    • எய்ட்ஸ் தொற்றுள்ளவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை: புதுவை முதல்வர் அறிவிப்பு
    • ஜென்சன் ஹுவாங்கின் உடற்தகுதி: “தற்காப்புக் கலைகள் உங்களை தாழ்மையுடன் ஆக்குகின்றன. இது கற்பிக்கிறது…” | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.