Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, December 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»ஈரான் தாக்குதல் எதிரொலி: இஸ்ரேலில் பாதுகாப்பாக இருக்குமாறு இந்தியர்களுக்கு தூதரகம் அலர்ட்
    உலகம்

    ஈரான் தாக்குதல் எதிரொலி: இஸ்ரேலில் பாதுகாப்பாக இருக்குமாறு இந்தியர்களுக்கு தூதரகம் அலர்ட்

    adminBy adminJune 14, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஈரான் தாக்குதல் எதிரொலி: இஸ்ரேலில் பாதுகாப்பாக இருக்குமாறு இந்தியர்களுக்கு தூதரகம் அலர்ட்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    டெல் அவிவ்: ஈரானின் பதிலடி தாக்குததலின் எதிரொலியாக, இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்கள் பயணிகள் எச்சரிக்கையாக இருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    தங்கள் நாட்டின் அணுசக்தி தளங்களை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல் மீது இன்று (சனிக்கிழமை) அதிகாலை முதல் ஈரான் பதிலடியாக ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதைத் தொடர்ந்து, இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டினருக்கு இந்திய அரசு அவசர ஆலோசனைகளை வழங்கியது. அதே நேரத்தில் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் ஈரானிய வான்வெளியைத் தவிர்த்து மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.

    இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியர்களும் விழிப்புடன் இருக்கவும், இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் உள்நாட்டுப் படையினரின் அறிவுறுத்தல்களின்படி பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். தயவுசெய்து எச்சரிக்கையாக இருங்கள். நாட்டுக்குள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்திவிடுங்கள். பாதுகாப்பு முகாம்களுக்கு அருகில் இருங்கள். இந்திய குடிமக்களின் பாதுகாப்பு தொடர்பான சூழ்நிலையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்று பதிவிட்டுள்ளது.

    மேலும், “ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், தூதரகத்தின் 24X7 உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். தொலைபேசிக்கு +972 54-7520711, +972 54 3278392 எண்களையும், cons1.telaviv@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியையும் தொடர்பு கொள்ளுங்கள்” என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    ஈரானிய வான்வெளியைத் தவிர்ப்பதால், இந்தியாவுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையிலான விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி, “ஈரான் மற்றும் மத்திய கிழக்கின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை தொடர்ந்து வான்வெளி மூடப்பட்டது. எங்கள் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சில விமானங்கள் நீட்டிக்கப்பட்ட மாற்றுப் பாதைகளில் இயக்கப்படுகின்றன.

    எதிர்பாராத இந்த வான்வெளி மூடலால் எங்கள் பயணிகளுக்கு ஏற்படும் எந்தவொரு சிரமத்தையும் குறைக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். ஏர் இந்தியாவில், எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். உங்கள் விமான நிலையை சரிபார்க்கவும் அல்லது 011 69329333, 011 69329999 என்ற எண்ணில் எங்கள் வாடிக்கையாளர் மையத்தை அழைக்கவும் அல்லது என்ற எங்கள் வலைதளத்தைப் பார்வையிடுங்கள்” என்று தெரிவித்துள்ளது.

    இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மீதான வான்வெளி தொடர்ந்து கிடைக்கவில்லை. சில விமானப் பாதைகளில் மாற்றங்கள் தேவைப்படலாம். இதனால் பயண நேரம் நீட்டிக்கப்படலாம் அல்லது தாமதங்கள் ஏற்படலாம். விமான நிலையத்துக்குச் செல்வதற்கு முன் எங்கள் வலைத்தளம் அல்லது மொபைல் பயன்பாட்டில் உங்கள் விமான நிலையைச் சரிபார்க்க பரிந்துரைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

    நிலவரம் என்ன? – முன்னதாக, அணுகுண்டு தயாரிப்பில் தீவிரம் காட்டுவதாக கூறி, ஈரான் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் விமானப் படையின் 200 போர் விமானங்கள், ஈரானில் 100 இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தின. இதில் ஈரானின் அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் 6 அணு விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகள் 3 பேர் உட்பட 78 பேர் இறந்தனர்; 320 பேர் காயம் அடைந்தனர். இதன் தொடர்ச்சியாக, நேற்று மாலையும் இஸ்ரேல் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 200 இடங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன.

    இந்தத் தாக்குதல்களுக்கு பதிலடி தரும் வகையில், இஸ்ரேல் மீது ஈரான் இன்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அயர்ன் டோம் வான் பாதுகாப்பையும் மீறி, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் உள்ள ராணுவத் தலைமையகம் தாக்குதலுக்கு உள்ளானது. ஜெருசலேம் நகர் மீதும் குண்டுகள் விழுந்தன. இந்த தாக்குதலில் 3 பேர் இறந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் அனைத்து பகுதிகளும் தாக்குதலுக்கு உள்ளானதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது கவனிக்கத்தக்கது. மேலும், ஈரானின் ஏவுகணை தாக்குதல் தொடர்ந்தால், அதன் தலைநகர் தெஹ்ரான் பற்றி எரியும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    MAGA பிளவு: ஹெரிடேஜ் அறக்கட்டளை ஊழியர்கள் நிக் ஃபியூண்டஸ் உடனான டக்கர் கார்ல்சன் நேர்காணலை ஜனாதிபதி ஆதரித்த பிறகு வெளியேறினர் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 23, 2025
    உலகம்

    Real-life Stranger Things: Hawkins Lab site ஐ ஆராய சென்ற பெண் கட்டிடத்தில் இருந்து விழுந்து மரணம் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 23, 2025
    உலகம்

    சிங்கப்பூரில் சர்ச் பீதி: மிரட்டல் விடுத்ததாக இந்திய வம்சாவளி நபர் மீது வழக்கு; மனநல பரிசோதனைக்கு உட்படுத்த – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 22, 2025
    உலகம்

    டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர், காசா இடிபாடுகளை தொழில்நுட்ப மையமாக மாற்ற $112bn திட்டம் உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 22, 2025
    உலகம்

    ‘சரிசெய்ய எங்களிடம் ஒரு நாடு உள்ளது’: MAGA சண்டைகள் அதிகரித்து வருவதால், பழமைவாதிகளை கொள்கைக்கு திரும்புமாறு ஹர்மீத் தில்லான் வலியுறுத்துகிறார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 21, 2025
    உலகம்

    கேம்பிரிட்ஜ் அறிஞர் ஸ்வெட்லானா லோகோவாவின் வாழ்க்கையை ரஷியாகேட் எப்படி சீரழித்தது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 2025 இல் அதிகரித்த நோய்கள்: 2026 இல் நாங்கள் கற்றுக்கொண்டது மற்றும் எப்படி தயாராக இருக்க வேண்டும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உங்கள் மூளையை மாற்றியமைக்க 7 காலை பழக்கங்கள்
    • இந்த நவநாகரீக வாய்வழி பழக்கம் உங்கள் இதயத்திற்கு ஆபத்து! நாக்கைத் துடைப்பது எண்டோகார்டிடிஸ், அதன் அறிகுறிகள் மற்றும் வாய்வழி பராமரிப்பை எவ்வாறு ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொள்வது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எர்னஸ்ட் ஹெமிங்வேயின் அன்றைய மேற்கோள், “ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் ஒரே மாதிரியாக முடிவடைகிறது. அது அவன் எப்படி இருக்கிறது என்பதற்கான விவரங்கள் மட்டுமே…….” – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 2025ல் உலகில் அதிகம் விரும்பப்படும் 10 நாடுகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.