Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணைகள் தாக்கியதில் 47 பேர் காயம்!
    உலகம்

    இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணைகள் தாக்கியதில் 47 பேர் காயம்!

    adminBy adminJune 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணைகள் தாக்கியதில் 47 பேர் காயம்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    டெல் அவிவ்: ஈரான் – இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்துவரும் நிலையில், இன்று (ஜூன் 19) இஸ்ரேலின் சொரோகா மருத்துவமனை மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 47 பேர் காயமடைந்துள்ளனர். மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஈரான் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

    மருத்துவமனையில் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகள், 47 பேர் காயமடைந்ததாக தெரிவித்துள்ளனர். மருத்துவமனை தாக்குதலுக்கு உள்ளான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தத் தாக்குதல் இஸ்ரேல் அரசையும், மக்களையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

    சொரோகா மருத்துவமனை தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் அதன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “பீர்ஷெபாவில் உள்ள சொரோகா மருத்துவமனையில் ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். எங்கள் மக்களைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் தொடர்ந்து செய்வோம்” என்று தெரிவித்துள்ளது. இஸ்ரேல் காவல் துறை, பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், “சொரோகா மருத்துவமனை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அங்கே செல்வதைத் தவிர்க்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளது.

    நெதன்யாகு எச்சரிக்கை: இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு “ஈரானிய சர்வாதிகாரிகள் இன்று காலை நாட்டின் மையப் பகுதியில் உள்ள சொரோகா மருத்துவமனையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்காக ஈரானிய சர்வாதிகாரிகள் கடும் விலையை கொடுப்பார்கள்” என்று எச்சரித்துள்ளார். சொரோகா மருத்துவமனையை தவிர டெல் அவிவில் உள்ள இரண்டு கட்டிடங்களில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் சேதமடைந்துள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் பங்குச் சந்தை கட்டிடமும், சில குடியிருப்பு கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன.

    முன்னதாக, ஈரானின் அராக் அணு உலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலை உறுதி செய்த ஈரான், ஆனால், தாக்குதலுக்கு முன்னரே அணு உலையில் இருந்து அனைவருமே வெளியேற்றப்பட்டுவிட்டனர் என தெரிவித்துள்ளது. இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்து வருவது மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை கூட்டியுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    வங்கதேசத்தில் பள்ளி வளாகத்தில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியதில் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 19 பேர் உயிரிழப்பு

    July 22, 2025
    உலகம்

    வங்கதேசத்தில் பள்ளி மீது பயிற்சி விமானம் மோதியதில் 16 மாணவர்கள் உட்பட 19 பேர் பலி

    July 21, 2025
    உலகம்

    கோல்ட் பிளே ‘கிஸ் கேம்’ தருணத்திலிருந்து வானியலாளரின் கிறிஸ்டின் கபோட் ஒரு உயரடுக்கு ‘பாஸ்டன் பிராமணர்’ குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார் – பாஸ்டன் பிராமணர்கள் யார், அவரது குடும்பம் எவ்வளவு செல்வந்தர்? | உலக செய்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    July 21, 2025
    உலகம்

    20 ஆண்டு கோமாவில் இருந்த சவுதி இளவரசர் அல்வாலீத் பின் காலித் காலமானார்

    July 21, 2025
    உலகம்

    20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சவுதி இளவரசர் காலமானார்

    July 20, 2025
    உலகம்

    ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை – அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் மக்கள் அதிர்ச்சி

    July 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உண்மை சம்பவ பின்னணியில் ‘போகி’
    • தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் சுய உதவி குழுவினர் 2.50 கோடி பேருக்கு ரூ.1.21 லட்சம் கோடி வங்கி கடனுதவி
    • டயட்டீஷியன்களின் கூற்றுப்படி, உயர் கொழுப்பைக் குறைக்க சியா விதைகள் ஏன் சிறந்த உணவாக இருக்கின்றன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நீதிபதியை பதவி நீக்க தீர்மானம்: 209 எம்.பி.க்கள் கையெழுத்து
    • மான்செஸ்டரில் இந்திய அணி எப்படி? – ENG vs IND 4வது டெஸ்ட்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.