Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, January 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»‘இப்படியொரு பயணத்துக்கான சூழல் உருவானதே ஓர் அவலம்’ – கிரெட்டா தன்பெர்க் வேதனை!
    உலகம்

    ‘இப்படியொரு பயணத்துக்கான சூழல் உருவானதே ஓர் அவலம்’ – கிரெட்டா தன்பெர்க் வேதனை!

    adminBy adminOctober 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘இப்படியொரு பயணத்துக்கான சூழல் உருவானதே ஓர் அவலம்’ – கிரெட்டா தன்பெர்க் வேதனை!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஏதென்ஸ்: “இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஒரு நாடு தடுக்கையில் அவர்களை எதிர்த்து கடல் வழியாக செல்ல வேண்டிய சூழல் உருவானதே ஒரு பெரும் அவல நிலை தான்.” என்று சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க் தெரிவித்துள்ளார்.

    பாலஸ்தீனத்தின் காசா பகுதி வாழ் மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவி பொருட்களுடன் பார்சிலோனாவில் இருந்து 50 படகுகளில் சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க் உள்பட சுமார் 500 செயற்பாட்டர்கள் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் பயணம் மேற்கொண்டனர். இந்தப் படகுகளை இஸ்ரேல் கடற்படையினர் இடைமறித்தனர். அதிலிருந்தவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

    இவர்கள் படிப்படியாக நாடுகடத்தப்பட்ட நிலையில், கிரெட்டா தன்பெர்க் உள்பட 160 பேர் ஞாயிற்றுக்கிழமை கிரீஸுக்கு நாடுகடத்தப்பட்டனர். அவர்கள் ஏதென்ஸ் விமான நிலையம் வந்தபோது ஏராளமான சமூக செயற்பாட்டாளர்கள் அவர்களை வரவேற்றனர்.

    அப்போது பேசிய கிரெட்டா, “கடல் வழியாகக் கூட நிவாரணம் காசா சென்று சேரக் கூடாது என்று மனிதமற்ற இஸ்ரேலின் முயற்சியை முறியடிக்கும் மிகப்பெரிய முயற்சிதான ஃப்ளோட்டிலா பயண,. ஆனால், இப்படியொரு மிஷனை நாங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவானதே ஒரு அவலம் தான். இஸ்ரேலின் இனஅழிப்பைத் தடுக்க உலக நாடுகள் செயல்பட வேண்டும். ஆனால், உலக அரசுகள் குறைந்தபட்ச அளவில் கூட செயல்படுவதாகத் தெரியவில்லை.” என்றார். முன்னதாக விமான நிலையத்துக்கு வந்தபோது கிரெட்டா பாலஸ்தீன கொடியைக் கையில் ஏந்தியடி, “பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்; ஃப்ளோட்டிலா வாழ்க” என்று முழங்கினார்.

    முன்னதாக, கிரெட்டா தன்பெர்க்கை காவலில் இருந்தப்போது இஸ்ரேலியப் படையினர் தலைமுடியைப் பிடித்து இழுத்து தாக்கியதாகவும், அவரை இஸ்ரேல் கொடியை முத்தமிட நிர்பந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் அதுபற்றி கிரெட்டா ஏதும் சொல்லவில்லை.

    ஆனால். ஃப்ளோட்டிலா பயணத்தில் இருந்த யாஸ்மின் அகார் என்ற செயற்பாட்டாளர் கூறுகையில். ”எங்களை மிருகங்கள் போல், பயங்கரவாதிகள் போல் நடத்தினார்கள். நாங்கள் தாக்கப்பட்டோம். தூங்கவிடவில்லை. முதல் 48 மணி நேரம் எங்களுக்கு உணவு, சுத்தமான குடிதண்ணீரும் கூட கிடைக்கவில்லை.” என்றார்.

    இந்தக் குற்றச்சாட்டுகளை எல்லாம் இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்து வருகிறது. ஃப்ளோட்டிலா பயணத்தில் வந்த சமூக செயற்பாட்டாளர்களில் கிரெட்டா உள்பட 170-க்கும் அதிகமானோரை கிரீஸ் மற்றும் ஸ்லோவேகியா வழியாக நாடு கடத்தியுள்ளதாகத் தெரிவித்தது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    MAGA கிறிஸ்டி நோயமை ‘ஆன்’ செய்யுமா? ICE படப்பிடிப்பை ‘மிகவும் சிக்கலான’ கையாள்வதில் டிரம்ப் கூட்டாளிகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 12, 2026
    உலகம்

    ஜெஃப் பெசோஸ் முதல் பில் கேட்ஸ் வரை: பில்லியனர்கள் கிரீன்லாந்தில் பந்தயம் கட்டுகிறார்கள், டிரம்ப் அதை ‘கடினமான வழியில்’ எடுப்பதாக சுட்டிக்காட்டுகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 12, 2026
    உலகம்

    பெரிய இந்திய இக்கட்டான நிலை: புலம்பெயர் சூதாட்டமானது வெளிநாட்டில் வாழ்வதற்கான பாதுகாப்பைக் கொண்டதா? விளக்கப்பட்டது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 12, 2026
    உலகம்

    பில் கேட்ஸ் $7.9 பில்லியனை மெலிண்டா கேட்ஸின் இலாப நோக்கற்ற நிறுவனத்திற்கு அனுப்பிய மிகப்பெரிய தொண்டு பரிமாற்றங்களில் ஒன்று | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 11, 2026
    உலகம்

    மினியாபோலிஸ் துப்பாக்கிச் சூடுக்குப் பிறகு இந்திய வம்சாவளி தானேதர் ICE ஐ ஒழிப்பதற்கான மசோதாவை அறிமுகப்படுத்துகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 11, 2026
    உலகம்

    தினப்பராமரிப்பு மோசடிக்காக டிரம்ப் நிர்வாகியை ‘வரி டாலர்களை ஒப்படைக்க’ கட்டாயப்படுத்தியதாக இந்திய வம்சாவளி நீதிபதி குற்றம் சாட்டினார்; எலோன் மஸ்க் அதை ‘சிக்கல்’ என்று அழைக்கிறார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இந்த அரிய இமயமலைப் பூ நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவதாகக் கூறப்படுகிறது – புனிதமான பிரம்ம கமலத்தை வீட்டில் வளர்க்கலாமா? – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சேலை-குறியிடப்பட்ட ஆடையா? டெய்னா டெய்லரின் கோல்டன் குளோப்ஸ் தோற்றம் தேசி ஃபேஷன் விவாதத்தைத் தூண்டுகிறது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ISRO’s PSLV-C62 mission: Anvesha உளவு செயற்கைக்கோள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய உண்மைகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சஞ்சீவ் கபூர் காதல் கதை: பிரபல சமையல்காரர் சஞ்சீவ் கபூர் தனது மனைவி அலியோனா கபூரை ரயில் பயணத்தில் சந்தித்தது எப்படி: அவர்களின் காதல் கதை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ’26’ இன் 1வது இஸ்ரோ ஏவுதல் நாளை மற்றொரு ‘விண்ணில்’ வைக்கும் | இந்தியா செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.