Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, October 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»இந்தோனேசியா: பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50-ஐ கடந்தது
    உலகம்

    இந்தோனேசியா: பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50-ஐ கடந்தது

    adminBy adminOctober 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்தோனேசியா: பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50-ஐ கடந்தது
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சிடோர்ஜோ: கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 29) இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளது.

    இந்தோனேஷியா நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தின் நகரமான சிடோர்ஜோவில் உள்ள அல் கோசினி இஸ்லாமிய உறைவிடப் பள்ளிக் கட்டிடம் கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 29) அன்று இடிந்து விழுந்தது. இந்த கட்டிட இடிபாடுகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சிக்கினர்.

    இதனை தொடர்ந்து ஒரு வார காலமாக மீட்புப் படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வரை (அக்டோபர்5) 80% இடிபாடுகளை அகற்றி, பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் மற்றும் உடல் பாகங்களை மீட்டதாக பேரிடர் மீட்பு நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    மீட்கப்பட்ட உடல்களின் அடிப்படையில் இதுவரை மொத்தம் 50 பேர் இறந்துவிட்டதாகவும், 4 பேரின் உடல் பாகங்கள் கிடைத்துள்ளதால் பலி எண்ணிக்கை 54 ஆக உயரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இடிபாடுகளில் சிக்கிய 13 பேரைத் தேடும் பணி இன்று (அக்டோபர் 6) முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பேரிடர் மீட்பு அமைப்பின் துணை அதிகாரி புடி இரவான் தெரிவித்தார். அல் கோசினி பள்ளியின் அடித்தளத்தால் தாங்க முடியாத அளவுக்கு, மேல் தளங்களில் கட்டுமானப் பணிகள் நடந்ததே இடிந்து விழுந்ததற்கான காரணம் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்தோனேசியா முழுவதும் சுமார் 42,000 இஸ்லாமிய பள்ளி கட்டிடங்கள் உள்ளன என்று அந்நாட்டின் மத விவகார அமைச்சகத்தின் தரவு காட்டுகிறது. அதில் 50 பள்ளிகளுக்கு மட்டுமே கட்டிட அனுமதிகள் உள்ளன என்று நாட்டின் பொதுப்பணித்துறை அமைச்சர் டோடி ஹாங்கோடோ தெரிவித்தார். விபத்து நடந்த அல் கோசினி பள்ளிக்கு கட்டிட அனுமதி இருந்ததா என்பது தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    எலோன் மஸ்க் கியூஆர் குறியீடுகளை ஸ்லாம்ஸ் செய்கிறார்: “நான் அவர்களை ஒரு கண்பார்வையாக வெறுக்கிறேன்” – அவரது விரக்தியின் பின்னணியில் இருப்பதற்கான காரணம் தொடர்புபடுத்தப்படலாம் | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    October 6, 2025
    உலகம்

    விக்கிபீடியாவுக்கு போட்டியாக குரோக்பீடியா: எலான் மஸ்க் விரைவில் அறிமுகம் செய்கிறார் 

    October 6, 2025
    உலகம்

    47,000 வெளிநாட்டு மாணவர்கள் இப்போது கனடாவில் சட்டவிரோதமாக இருக்கலாம் என்று ஐ.ஆர்.சி.சி கூறுகிறார்; ‘இந்தியா சிறந்த நாடுகளில் ஒன்று’ – இந்தியாவின் டைம்ஸ்

    October 5, 2025
    உலகம்

    புதிய எச் -1 பி பயன்பாடுகளில் ட்ரம்பின் நுழைவு கட்டணத்தை k 100 கி – – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா மீது வழக்குத் தொடர பலரும் பல கண்கள் உள்ளன

    October 5, 2025
    உலகம்

    தலைமுடியைப் பிடித்து இழுத்து… இஸ்ரேலில் கிரெட்டா தன்பெர்குக்கு நேர்ந்த அவலம்!

    October 5, 2025
    உலகம்

    அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் இஸ்கான் கோயிலில் ‘துடிப்பான’ துசெஹ்ரா கொண்டாட்டங்களுடன் இணைகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    October 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ’பைசன்’ தான் என் முதல் படம்: துருவ் விக்ரம்
    • ராமதாஸை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்
    • கொழுப்பு கல்லீரலை இயற்கையாகவே மாற்றியமைக்கவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் 3 பானங்களை AIIMS இரைப்பை குடல் நிபுணர் வெளிப்படுத்துகிறார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆரம்பநிலைக்கான மருத்துவத்தில் 2025 நோபல் பரிசு: எப்படி மேரி ப்ரூகோ, பிரெட் ராஸ்ம்டெல் மற்றும் ஷிமோன் சாகுச்சி உடலின் ‘அமைதி காக்கும் படையினரை’ கண்டுபிடித்தனர் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்துக்காக பட்ட கஷ்டங்கள்: சம்பத் ராம் விளக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.