Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»இந்திய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க தடை: பாகிஸ்தானுக்கு 2 மாதங்களில் ரூ.1,240 கோடி இழப்பு
    உலகம்

    இந்திய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க தடை: பாகிஸ்தானுக்கு 2 மாதங்களில் ரூ.1,240 கோடி இழப்பு

    adminBy adminAugust 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்திய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க தடை: பாகிஸ்தானுக்கு 2 மாதங்களில் ரூ.1,240 கோடி இழப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லையை பயன்படுத்த தடை விதித்தது அந்நாட்டு அரசு. இந்திய அரசும் இதே நடவடிக்கையை கையில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லையை பயன்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது முதல் கடந்த ஜூன் 30-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் இதனால் பாகிஸ்தானுக்கு சுமார் 1,240 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 4.1 பில்லியன். இதை அந்த நாட்டின் செய்தி நிறுவனம் அரசு தரப்பு தகவல் உடன் உறுதி செய்து செய்தியாக வெளியிட்டுள்ளது.

    அந்த செய்தியில் இதை பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் உறுதி செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலை அடுத்து சிந்து நதி நீரை நிறுத்தியது. இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் பதிவு செய்யப்பட்ட இந்திய விமானங்கள், இந்திய விமான நிறுவனங்கள் சார்பில் இயக்கப்படும் விமானங்கள் என இந்திய தொடர்பு கொண்ட அனைத்து விமானங்களுக்கும் பாகிஸ்தான் தடை விதித்தது.

    இதன் காரணமாக பாகிஸ்தான் நாட்டின் வான் போக்குவரத்து சுமார் 20 சதவீதம் குறைந்துள்ளது. இந்த தடை நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் நாள் ஒன்றுக்கு 100 முதல் 150 இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தி வந்ததாக தகவல். இப்போது அது முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்தியாவில் இருந்து அயல்நாடுகளுக்கு செல்லும் இந்திய விமானங்கள் மாற்றுப்பாதையில் தடையின்றி பயணத்தை தொடர்ந்து வருகிறது. மறுபக்கம் பாகிஸ்தானுக்கு இதே உத்தரவை இந்தியா பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கெனவே நிதி நெருக்கடியால் பாகிஸ்தான் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய வான்வெளியை பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் பயன்படுத்த முடியாத காரணத்தால் பயண நேர நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து தென்கிழக்கு ஆசியாவுக்கு செல்லும் விமானங்கள் இந்திய வான்வெளியை தவிர்க்க வேண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    வரும் 24-ம் தேதி காலை 4.59 மணி வரையில் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த தடை உத்தரவு பிறப்பித்துள்ளது அந்த நாட்டு விமான போக்குவரத்து ஆணையம்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மற்றும் அமைவிடங்களை இந்தியா அழித்தது. தொடர்ந்து பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியையும் இந்திய முறியடித்தது. பின்னர் இருதரப்புக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

    ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 16 கட்டிடங்கள் தரைமட்டம்; மீட்புப் பணிகள் தீவிரம்

    August 11, 2025
    உலகம்

    உக்ரைன் அமைதிக்காக அறிக்கை வெளியிட்ட ஐரோப்பிய தேச தலைவர்கள்: ஜெலன்ஸ்கி நன்றி

    August 10, 2025
    உலகம்

    இந்தியா மீது 50 சதவீத வரிவிதிப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஜனநாயகக் கட்சி எம்.பி. எதிர்ப்பு

    August 10, 2025
    உலகம்

    உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பேச ட்ரம்ப் – புதின் ஆக.15-ம் தேதி சந்திப்பு

    August 10, 2025
    உலகம்

    இந்தியா மீதான வரி விதிப்பு அமெரிக்காவை பாதித்துள்ளது: ட்ரம்ப்பின் நண்பர் கருத்து

    August 9, 2025
    உலகம்

    ‘இது மனம் உடைந்தது’: இங்கிலாந்தில் உள்ள இந்திய மூல உணவக உரிமையாளர் காழ்ப்புணர்ச்சிக்குப் பிறகு துப்பறியும் நபராக மாறுகிறார், போலீசார் அவரிடம் ‘சான்றுகள்’ என்று சொன்னார்கள் – டைம்ஸ் ஆப் இந்தியா

    August 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்தை உருவாக்கியோரின் சிலைகளை திறந்து வைத்தார் ஸ்டாலின்
    • ஒரு பெரிய சம்பளம் இல்லாமல், வெறும் 10 ஆண்டுகளில் இந்திய நடுத்தர வர்க்க குடும்பங்கள் எவ்வாறு 1.2 கோடியை உருவாக்க முடியும்- CA பகிர்கிறது உதவிக்குறிப்புகள்- டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உ.பி.யில் போலி காவல் நிலையம் நடத்தி நன்கொடை வசூல் செய்த 6 பேர் கும்பல் கைது
    • மகேஷ் பாபு படம் நிலை என்ன? – ராஜமவுலி அப்டேட்
    • பாமக யுத்தக் களம் – வெல்லப் போவது ராமதாஸா, அன்புமணியா?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.