Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»‘இந்திய ராணுவ தாக்குதலில் 26 பேர் பலி; இது போர் நடவடிக்கையே!” – பாகிஸ்தான் சொல்வது என்ன?
    உலகம்

    ‘இந்திய ராணுவ தாக்குதலில் 26 பேர் பலி; இது போர் நடவடிக்கையே!” – பாகிஸ்தான் சொல்வது என்ன?

    adminBy adminMay 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘இந்திய ராணுவ தாக்குதலில் 26 பேர் பலி; இது போர் நடவடிக்கையே!” – பாகிஸ்தான் சொல்வது என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இஸ்லாமாபாத்: ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை கடுமையாக விமர்சித்துள்ள பாகிஸ்தான், ‘இந்தியாவின் தாக்குதல் என்பது அப்பட்டமான போர் நடவடிக்கை. இந்தியாவின் இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். 46 பேர் காயமடைந்தனர். இந்தப் போர் நடவடிக்கைக்கு பதிலடி தரும் உரிமை உண்டு’ என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் ஆயுதங்களை நிலைநிறுத்தி, சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ள மக்களை குறிவைத்துத் தாக்கியது பாகிஸ்தானின் இறையாண்மையை மீறிய செயலாகும். ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் பிரிவு 51 மற்றும் சர்வதேச சட்டங்களின்படி, தேவையான நேரத்தில் திருப்பித் தாக்கும் உரிமை என்பது பாகிஸ்தானுக்கும் உண்டு. இந்தத் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட பொது மக்கள் கொல்லப்பட்டதற்கு இந்தியாவே காரணம்’ என்று தெரிவித்துள்ளது.

    உயிரிழப்பு விவரம்: மேலும், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்துக்கு பாகிஸ்தான் தனியாக சம்மன் அனுப்பி இந்தியாவின் தாக்குதலுக்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அத்துடன், இந்தத் தாக்குதல் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. ‘இந்தியாவின் தாக்குதல் என்பது அப்பட்டமான போர் நடவடிக்கை. இந்தியாவின் இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். 46 பேர் காயமடைந்தனர்’ என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    அதேவேளையில், இந்தியா – பாகிஸ்தானின் சர்வதேச எல்லைப் பகுதியான எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு (எல்ஓசி) அருகே வெடிகுண்டுகள் வீசி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் இந்தியக் குடிமக்கள் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக இந்திய ராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஆபரேஷன் சிந்தூர் – முன்னதாக, ‘இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையைத் தொடங்கி, பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு – காஷ்மீர் பகுதியிலும் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளைத் தாக்கின. மொத்தத்தில் 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன. இந்தியாவின் நடவடிக்கைகள் துல்லியமானவை. அத்துமீறல் இல்லாதவை.

    இந்தத் தாக்குதலில் எந்த பாகிஸ்தானிய ராணுவ நிலைகளும் குறிவைக்கப்படவில்லை. இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும், தாக்குதலை செயல்படுத்தும் முறையிலும் இந்தியா நிதானத்தைக் கடைபிடித்துள்ளது. 25 இந்தியர்களும், ஒரு நேபாளத்தைச் சேர்ந்தவரும் கொல்லப்பட்ட இரக்கமற்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற உறுதிமொழி நிறைவேற்றப்படும்’ என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. அதன் விவரம்: ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாக். பயங்கரவாத முகாம்கள் மட்டுமே குறிவைத்து அழிப்பு: மத்திய அரசு விவரிப்பு



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    நியூயார்க், நியூயார்க்: 9/11 க்கு 24 ஆண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் அல்-கொய்தா தலைவர் அஹ்மத் அல்-ஷரா, அன்காவை சிரிய ஜனாதிபதியாக உரையாற்ற | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 22, 2025
    உலகம்

    O-1 விசா என்றால் என்ன: H-1B விசா உயர்வுக்கு மத்தியில் தொழில் வல்லுநர்களுக்கான அமெரிக்க விசா மாற்று; தகுதி, விசா கட்டணம் மற்றும் விண்ணப்ப செயல்முறை | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 22, 2025
    உலகம்

    சார்லி கிர்க் துக்க நிகழ்வில் சந்தித்துக் கொண்ட டொனால்டு ட்ரம்ப் – எலான் மஸ்க்!

    September 22, 2025
    உலகம்

    ‘டிரம்பின் எச் 1 பி விசா கட்டுப்பாடுகளுக்குப் பின்னால் உண்மையான காரணம்…’: கூகிள் தலைமையகத்திற்கு வெளியே தனது புகைப்படத்திற்குப் பிறகு எச் -1 பி விசா கட்டண உயர்வுக்கு இணைய வரவு எம்பிஏ சாய் வாலாவை இணைய வரவு வைக்கிறது | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 22, 2025
    உலகம்

    திறமையான வெளிநாட்டவர்களுக்கான விசா கட்டணத்தை ரத்து செய்ய இங்கிலாந்து பரிசீலனை?

    September 22, 2025
    உலகம்

    விதி யார்? சார்லி கிர்க்கின் நினைவு ஒரு நாஜி பேரணியை ஒத்திருக்கிறது என்று வைரஸ் ஸ்ட்ரீமர் கூறுகிறார் | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விஜய்க்கு வரும் கூட்டம் வாக்குகளாக மாறாது: கமல்ஹாசன் கருத்து
    • தங்கம் விலை ரூ.83,000-ஐ கடந்து புதிய உச்சம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,120 அதிகரிப்பு!
    • H1B விசாவிற்கு யார் தகுதியானவர்? விசா எவ்வளவு காலம் செல்லுபடியாகும், அது பயணிகளை பாதிக்கும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • முக்கிய முன்னேற்றம்: ஸ்டான்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் வைரஸ்களை வடிவமைக்க AI ஐப் பயன்படுத்துகின்றனர்; தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் ஆபத்துகள் குறித்து எச்சரிக்கவும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பின்புலத்தில் பாஜக, அமித்ஷா இருப்பதால் விஜய் அகந்தைப் பேச்சு: அப்பாவு விமர்சனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.