Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»இந்தியா – பாக். மோதலின்போது 5 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்: டொனால்ட் ட்ரம்ப்
    உலகம்

    இந்தியா – பாக். மோதலின்போது 5 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்: டொனால்ட் ட்ரம்ப்

    adminBy adminJuly 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்தியா – பாக். மோதலின்போது 5 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்: டொனால்ட் ட்ரம்ப்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வாஷிங்டன்: இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அமெரிக்கா 5 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

    குடியரசு கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த இரவு விருந்தின்போது பேசிய டொனால்ட் ட்ரம்ப், “இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. அப்போது, போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. 4 அல்லது 5 விமானங்கள் வீழ்த்தப்பட்டன. ஆனால், 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என நினைக்கிறேன். ஏனெனில், நிலைமை தொடர்ந்து மோசமாகிக் கொண்டே இருந்தது. இல்லையா?

    இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையை நிறுத்திக்கொள்வதில் முன்னும் பின்னுமாக இருந்தன. அது பெரிதாகிக்கொண்டே இருந்தது. வர்த்தகத்தின் மூலம் நாங்கள் அதை முடிவுக்குக்கொண்டு வந்தோம். அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய விரும்புகிறீர்கள். நீங்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்கிக் கொள்வீர்கள் எனில், குறிப்பாக அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவீர்கள் எனில் உங்களுடன் நாங்கள் வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட மாட்டோம் என கூறினேன். ஏனெனில், இரண்டு நாடுகளுமே சக்திவாய்ந்த அணுஆயுத நாடுகள்.

    8 ஆண்டுகளில் எந்த அமெரிக்க நிர்வாகமும் சாதிக்க முடியாததை ஆறு மாதங்களில் நாங்கள் சாதித்துள்ளோம். இதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நாங்கள் நிறைய போர்களை நிறுத்தி உள்ளோம். இவை கடுமையான போர்கள்” என தெரிவித்தார்.

    கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, கடந்த மே 7ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் வான்வழி தாக்குதலைத் தொடங்கியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

    இந்தியாவின் இந்த ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. இதனால், போர் தீவிரமடைந்த நிலையில், இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்களில் பாகிஸ்தானின் விமானப்படைத் தளங்கள் கடும் சேதமடைந்தன.

    இதன் காரணமாக, போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் டிஜிஎம்ஓ அழைப்பு விடுத்தார். இந்திய டிஜிஎம்ஓவை தொடர்பு கொண்டு அவர் விடுத்த இந்த அழைப்பை ஏற்று இந்தியா போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டது.

    எனினும், போர் நிறுத்தத்துக்கு தாங்களே காரணம் என அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

    இந்நிலையில், அதிர்ச்சி தரும் விதமாக 5 ஜெட் விமானங்களை அமெரிக்கா சுட்டு வீழத்தி இருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் புதிய தகவல் ஒன்றை தெரிவித்திருக்கிறார். அந்த 5 ஜெட் விமானங்கள் எந்த நாட்டுக்குச் சொந்தமானவை என்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. அமெரிக்கா சுட்டு வீழ்த்திய 5 ஜெட் விமானங்களால் ஏதேனும் ஒரு நாடு பாதிக்கப்பட்டதா அல்லது இரண்டு நாடுகளுமே பாதிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    காலிஸ்தான் தீவிரவாதி இந்திரஜித் சிங் கனடாவில் கைது

    September 23, 2025
    உலகம்

    ‘குடும்பம் அல்லது தொழில்?’: டிரம்ப் ஒடுக்குமுறைக்கு மத்தியில் எச் -1 பி தொழிலாளர்கள் கடினமான தேர்வை எதிர்கொள்கின்றனர்; இதை சோகமான என்று அழைக்கவும் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 23, 2025
    உலகம்

    பாகிஸ்தான் விமானப்படை தாக்குதலில் அப்பாவி மக்கள் 30 பேர் உயிரிழப்பு

    September 23, 2025
    உலகம்

    ரஷ்யா பல்கலைக்கழகத்தில் சேர, உத்தர்கண்ட் மேன் ‘உக்ரேனில் போர் முன்னணிக்கு அனுப்பப்பட்டது’ | இந்தியா செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 23, 2025
    உலகம்

    எச்1பி விசா கட்டண உயர்வு கெடுபிடி: அதிக நிபந்தனைகள் இல்லாத ‘கே’ விசாவை அறிமுகம் செய்த சீனா – முழு விவரம்

    September 23, 2025
    உலகம்

    எச்1பி விசா: அமெரிக்க அரசின் அறிவிப்பால் விமானத்தில் இருந்து அவசரமாக இறங்கிய இந்தியர்கள்

    September 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சிறந்த கால்பந்து வீரருக்கான Ballon d’Or விருதை வென்றார் பிரான்ஸின் டெம்பெல்லே!
    • காலிஸ்தான் தீவிரவாதி இந்திரஜித் சிங் கனடாவில் கைது
    • தீபிகாவுக்கு பதில் அனுஷ்கா: ரசிகர்கள் கோரிக்கை
    • திமுக பொதுக்கூட்டம் நடந்த சாலையில் ஆம்புலன்ஸை விட வேண்டாம் என பேசிய நாகர்கோவில் மேயர்: வீடியோவால் சர்ச்சை
    • இந்த “சாதாரண” தலைவலி ஒரு பக்கவாதத்திற்கு முன் ஒரே எச்சரிக்கையாக இருக்கலாம்! – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.