Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»‘இந்தியா – பாக். போரை நிறுத்தியது நான்தான்’ – மோடி உடன் பேசிய நிலையில் ட்ரம்ப் மீண்டும் விடாப்பிடி
    உலகம்

    ‘இந்தியா – பாக். போரை நிறுத்தியது நான்தான்’ – மோடி உடன் பேசிய நிலையில் ட்ரம்ப் மீண்டும் விடாப்பிடி

    adminBy adminJune 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘இந்தியா – பாக். போரை நிறுத்தியது நான்தான்’ – மோடி உடன் பேசிய நிலையில் ட்ரம்ப் மீண்டும் விடாப்பிடி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி உடன் தொலைபேசியில் உரையாடிய நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது நான்தான் என அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடியை அற்புதமான மனிதர் என்றும், இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் அதிபர் ட்ரம்ப் கூறினார். அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

    “இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான். நான் பாகிஸ்தானை நேசிக்கிறேன். பிரதமர் மோடி அற்புதமான மனிதர் என நினைக்கிறேன். அவருடன் நான் நேற்று பேசினேன். இந்தியா மற்றும் அமெரிக்கா என இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளது. ஆனால், இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான்.

    பாகிஸ்தான் தரப்பில் அசிம் முனீர் மற்றும் இந்தியா தரப்பில் பிரதமர் மோடி என போரை நிறுத்த உதவினர். அவர்கள் இருவரும் செல்வாக்கு மிக்க நபர்கள். இரு நாடுகளும் அணு ஆயுத பலம் கொண்டவை. இது நான் எழுதிய கதை அல்ல என நம்புகிறேன். போரை நிறுத்தியது நான்தான்.

    முன்னதாக, பிரதமர் மோடி உடன் சுமார் 35 நிமிடங்கள் வரை தொலைபேசியில் அதிபர் ட்ரம்ப் உரையாடி இருந்தார். அப்போது, இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த விவகாரத்தில் அமெரிக்க நாடு எந்தப் பங்கும் வகிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக தெளிவுபடுத்தி இருந்தார்.

    இத்தகவலை மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இனிமேலும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை இந்தியா ஏற்காது என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்த நிலையில்தான் அதிபர் ட்ரம்ப் இதை கூறியுள்ளார். பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீரை வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் இன்று (ஜூன் 18 – அமெரிக்க நேரப்படி) சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    திறன்மிகு வல்லுநர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் சீனா – ‘கே’ விசா சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    September 23, 2025
    உலகம்

    எச் -1 பி விசா கட்டணம் உயர்வு: எச் -1 பி விசா என்றால் என்ன, அது யாரை பாதிக்கிறது, அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு என்ன அர்த்தம், மற்றும் பிற கேள்விகள் | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 23, 2025
    உலகம்

    ரெபெக்கா ஜோன்ஸ் யார்? ஆண்டிஃபா பி.ஆர் தலைவர் சார்லி கிர்க் என்று அழைத்தார் ஒரு மோசமான நபர் இறுதியாக படுகொலைக்குப் பிறகு சென்றார் | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 23, 2025
    உலகம்

    டைலெனால் என்றால் என்ன: டொனால்ட் டிரம்ப் கர்ப்பிணிப் பெண்களை வலி நிவாரணி பற்றி விசேஷமாக நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் எச்சரிக்கிறார் | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 23, 2025
    உலகம்

    எச் -1 பி விசா கட்டணம் உயர்வு என்விடியாவின் ஜென்சன் ஹுவாங் மற்றும் ஓபனாயின் சாம் ஆல்ட்மேன் ஆகியோரிடமிருந்து எதிர்வினைகளைத் தூண்டுகிறது: “குடியேற்றம் என்பது அமெரிக்க கனவின் அடித்தளம் …” | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 23, 2025
    உலகம்

    காலிஸ்தான் தீவிரவாதி இந்திரஜித் சிங் கனடாவில் கைது

    September 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நீரிழிவு நோயாளிகள் ஏன் ஒருபோதும் சபுதானாவை சாப்பிடக்கூடாது: அபாயங்கள் மற்றும் ஆரோக்கியமான மாற்றுகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 1983 உலகக் கோப்பை ஃபைனலில் கள நடுவராக செயல்பட்ட டிக்கி பேர்ட் மறைவு!
    • “திமுகவுக்கு இன்று தகுதியான எதிரிகள் இல்லை!” – உதயநிதி ஸ்டாலின் பேச்சு
    • நீண்டகால கெட்டோஜெனிக் உணவு அபாயங்கள்: கல்லீரல் செயலிழப்பு, இருதய பிரச்சினைகள் மற்றும் பல | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாமக்கல்லில் கோழிப் பண்ணை அதிபர் வீடு, அலுவலகத்தில் வருமானவரித் துறை சோதனை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.