Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»இந்தியா – பாக். போரை ட்ரம்ப் நிறுத்தினாரா? – அமெரிக்காவில் சசி தரூர் அளித்த பதில்
    உலகம்

    இந்தியா – பாக். போரை ட்ரம்ப் நிறுத்தினாரா? – அமெரிக்காவில் சசி தரூர் அளித்த பதில்

    adminBy adminJune 5, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்தியா – பாக். போரை ட்ரம்ப் நிறுத்தினாரா? – அமெரிக்காவில் சசி தரூர் அளித்த பதில்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வாஷிங்டன்: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ராணுவ மோதலை டொனால்ட் ட்ரம்ப்தான் முடிவுக்குக் கொண்டு வந்தாரா என்பது பற்றி தனக்குத் தெரியாது என்றும், பாகிஸ்தானிடம் ட்ரம்ப் பேசி இருக்கலாம் என்றும், தான் பாகிஸ்தானியோ, அமெரிக்கரோ இல்லை என்றும் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

    பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கடுமையான நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் வகையில், அனைத்து கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்து பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையிலான குழு கொலம்பியா உட்பட பல்வேறு நாடுகளின் பயணங்களை முடித்துக்கொண்டு அமெரிக்கா சென்றுள்ளது.

    இந்த பயணம் தொடர்பாக சசி தரூர் வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ராணுவ மோதலை, வர்த்தகத்தின் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறி இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த சசி தரூர், “வெள்ளை மாளிகையுடனான எங்கள் உறவில் எந்தவிதமான சிக்கல்களையும் ஏற்படுத்த நான் இங்கு வரவில்லை என்பதால் நான் அதைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. அமெரிக்க அதிபர் பதவி மற்றும் அமெரிக்க அதிபர் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. மேலும், அவரது தரப்பில் பேசியவர்கள் பாகிஸ்தானிடம் என்ன சொன்னார்கள் என்பது பற்றி எங்களுக்கு சரியாகத் தெரியாது என்று நினைக்கிறேன்.

    முதல் நாளிலிருந்தே எங்கள் சமிக்ஞை என்னவென்றால், பாகிஸ்தான் திருப்பித் தாக்கினால், நாங்கள் அவர்களை இன்னும் கடுமையாகத் தாக்குவோம். அவர்கள் நிறுத்தினால், நாங்கள் நிறுத்துவோம். நாங்கள் அதை முதல் நாளிலிருந்தே சொன்னோம். கடைசி நாளிலும் அதைச் சொன்னோம்.

    எனவே எங்கள் பார்வையில், எங்களை நிறுத்தச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் பாகிஸ்தான் நிறுத்தினால் நாங்கள் நிறுத்தப் போகிறோம். நிச்சயமாக, அவர்கள் பாகிஸ்தானுடன் பேசியிருக்கலாம். அவர்கள் பாகிஸ்தானிடம் பல்வேறு விஷயங்களைச் சொல்லியிருக்கலாம்.

    என்ன சொல்லப்பட்டது என்பது எங்களுக்கு ஒருபோதும் தெரியாது, ஏனென்றால் அது அவர்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான விஷயம். நான் பாகிஸ்தானியும் இல்லை, அமெரிக்கனும் இல்லை என்பதால் என்னால் உங்களுக்குச் சொல்ல முடியாது” என்று கூறினார்.

    காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் உங்களின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், நாடு திரும்பியதும் நீங்கள் என்ன செய்தி சொல்லப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த சசி தரூர், “ஒருவர் நாட்டுக்கான பணியில் இருக்கும்போது, ​​இந்த விஷயங்களைப் பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். தேசிய நலனுக்காகப் பணியாற்றுவது ஒருவித கட்சி விரோதச் செயல் என்று கருதுபவர்களிடம் நான் கேள்வி கேட்பதைவிட, அவர்கள் தங்களைத் தாங்களே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

    தற்போது நாங்கள் இங்கே ஒரு குறிப்பிட்ட பணியில் கவனம் செலுத்துகிறோம் என்று நான் உண்மையிலேயே உணர்கிறேன். பல்வேறு தனிநபர்களால் என்ன சொல்லப்படுகிறது அல்லது சொல்லப்படவில்லை என்பதைப் பற்றி கவலைப்பட அதிக நேரம் செலவிடத் தேவையில்லை, ஏனெனில் எங்களுடைய கவனம் இந்த மிக முக்கியமான பணியில் உள்ளது. நேரம் வரும்போது, ​​நாங்கள் அதை கையாள்வோம்” என்று தெரிவித்தார்.

    நீங்கள் காங்கிரசில் தொடர்ந்து நீடிப்பீர்களா அல்லது பாஜகவில் இணைவீர்களா என்பது தொடர்பாக சமூக ஊடகங்களில் அதிக விவாதங்கள் நடக்கிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த சசி தரூர், “நான் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர். எனது பதவிக்காலத்தில் இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளன. இப்போது ஏன் இதுபற்றி கேட்க வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை” என தெரிவித்தார்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தொலைபேசி அழைப்புக்கு பிரதமர் மோடி சரணடைந்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சசி தரூர், “ஜனநாயகத்தில் இது இயல்பானது. கட்சிகளுக்கு இடையே போட்டி இருக்கும், விமர்சனங்களை வெளிப்படுத்தும், கோரிக்கைகளை வைக்கும். நாங்கள் இங்கு ஒரு கட்சியின் அரசியல் நோக்கத்திற்காக வரவில்லை. நாங்கள் இந்தியாவின் பிரதிநிதிகளாக இங்கு இருக்கிறோம். மூன்று மதங்கள், ஏழு மாநிலங்களைச் சேர்ந்த ஐந்து அரசியல் கட்சிகள் எங்கள் குழுவில் இடம்பெற்றுள்ளன.” என தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    சிங்கப்பூர் நைட்ஸ்பாட் மரணம்: அபாயகரமான கும்பல் தாக்குதலுக்காக இந்திய மூல மனிதர்; 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    July 1, 2025
    உலகம்

    இந்திய வம்சாவளி மனிதர் சிங்கப்பூரில் கலவரத்திற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார் – டைம்ஸ் ஆப் இந்தியா

    July 1, 2025
    உலகம்

    வங்கதேசத்தில் இந்து பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: உள்ளூர் அரசியல்வாதி உட்பட 5 பேர் கைது

    July 1, 2025
    உலகம்

    சிறுகோள்களில் உலோகங்கள்

    June 30, 2025
    உலகம்

    ‘கடவுளின் எதிரிகள் பழிவாங்கப்படுவார்கள்’ – ட்ரம்ப், நெதன்யாகுவை கடுமையாக சாடும் ஈரான் மதகுரு

    June 30, 2025
    உலகம்

    ஈரானால் சில மாதங்களிலேயே யுரேனியம் செறிவூட்டலை தொடங்கமுடியும்: சர்வதேச அணுசக்தி முகமை தலைவர்

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு 6-ஆக அதிகரிப்பு
    • ஆல் டே ப்ராஜெக்ட்ஸ் டார்சான் அறிமுகத்திலிருந்து கே-பாப் ஸ்டான்களிலிருந்து பின்னடைவை எதிர்கொள்கிறது: காட்சிகள் முதல் அதிர்வு வரை, ரசிகர்கள் அதை வாங்கவில்லை
    • சிங்கப்பூர் நைட்ஸ்பாட் மரணம்: அபாயகரமான கும்பல் தாக்குதலுக்காக இந்திய மூல மனிதர்; 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நன்கொடை கேட்டு தாக்குதல்: விசிகவினரை கண்டித்து மேலூரில் வர்த்தக சங்கம் கடையடைப்பு
    • Prepieabeades அறிகுறிகள்: 5 அறிகுறிகள் முன்னுரிமைகள் (இரத்த பரிசோதனை இல்லாமல்) | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.