Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்கிறது: ட்ரம்ப் அறிவிப்புக்கு பிரதமர் மோடி வரவேற்பு
    உலகம்

    இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்கிறது: ட்ரம்ப் அறிவிப்புக்கு பிரதமர் மோடி வரவேற்பு

    adminBy adminSeptember 11, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்கிறது: ட்ரம்ப் அறிவிப்புக்கு பிரதமர் மோடி வரவேற்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வாஷிங்டன்: இந்​தி​யா, அமெரிக்கா இடையே வர்த்தக பேச்​சு​வார்த்தை தொடர்​கிறது என்​றும், பிரதமர் மோடி​யுடன் பேச ஆவலாக உள்​ளேன் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார். இதற்கு பதில் அளிக்​கும் வகை​யில், ட்ரம்​புடன் பேச நானும் ஆவலாக உள்​ளேன் என பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார்.

    அமெரிக்க அதிப​ராக 2-வது முறை​யாக பொறுப்​பேற்ற டொனல்டு ட்ரம்ப், உலக நாடு​கள் தங்​கள் நாட்டு பொருட்​களுக்கு அதிக வரி விதிப்​ப​தாக குற்​றம்​சாட்​டி​னார். இதனால், பதி​லுக்கு பதில் வரி விதிக்​கப்​படும் எனக் கூறி ஒரு பட்​டியலை வெளி​யிட்டார். இதன்​படி, இந்​திய பொருட்​களுக்கு 25% வரி விதித்​தார். இதனிடையே, இருதரப்பு வர்த்தக ஒப்​பந்​தம் ஏற்​படுத்​து​வது தொடர்​பாக இந்​தி​யா, அமெரிக்கா இடையே பல சுற்று பேச்சுவார்த்தை நடை​பெற்​றது. ஆனால், சில விஷ​யங்​களில் உடன்​பாடு எட்​டப்​ப​டாத​தால் இழுபறி நீடித்​தது.

    இதேபோல, ரஷ்​யா-உக்​ரைன் போரை முடிவுக்​குக் கொண்டு வர ட்ரம்ப் தொடர்ந்து முயற்சி செய்து வரு​கிறார். இதன்​படி, ரஷ்​யா​விடம் கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால் உக்​ரைன் போருக்கு இந்​தியா மறை​முக​மாக உதவுவ​தாக குற்​றம்​சாட்​டி​னார். கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை நிறுத்​தா​விட்​டால் கூடு​தலாக 25% வரி விதிக்​கப்​படும் என அறி​வித்​தார். இதை ஏற்க இந்​தியா மறுத்​த​தால், கூடு​தலாக 25% வரி அமலுக்கு வந்​தது. இதன் மூலம் இந்​திய பொருட்​கள் மீது 50% வரி விதிக்​கப்​பட்​டுள்​ளது. இது நியாயமற்​றது என்​றும், ஏற்​கத்​தக்​கது அல்ல என்​றும் இந்​தியா தெரி​வித்​தது.

    மேலும், பாகிஸ்​தான், இந்​தியா இடையி​லான போரை தான்​தான் நிறுத்​தினேன் என தொடர்ந்து கூறி வந்​தார். இதற்கு இந்​தியா மறுப்பு தெரி​வித்​தது. இதனால், அமெரிக்​கா, இந்​தியா இடையி​லான உறவில் உரசல் ஏற்​பட்​டது. இதற்கு நடு​வே, அதிபர் ட்ரம்ப் 4 முறை பிரதமர் மோடியை தொலைபேசி மூலம் தொடர்​பு​கொள்ள முயற்சி செய்​தார். ஆனால், அவரது அழைப்பை பிரதமர் மோடி ஏற்​க​வில்லை என தகவல் வெளி​யானது.

    அமெரிக்கா​வுடன் உரசல் ஏற்​பட்ட நிலை​யில், பிரதமர் நரேந்​திர மோடி, 7 ஆண்​டுக்கு பிறகு சீனா​வுக்கு சென்​றார். அங்கு நடை​பெற்ற ஷாங்​காய் ஒத்​துழைப்பு மாநாட்​டில் பங்​கேற்​றார். அங்கு சீன அதிபர் ஜி ஜின்​பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்​தித்​துப் பேசி​னார். இந்த சந்​திப்பை ட்ரம்ப் விமர்​சித்​தார். மேலும் ட்ரம்​பின் வரி விதிப்​பால் இந்​தியா சீனா​வுடன் நெருங்கி வரு​வ​தாக அமெரிக்​காவைச் சேர்ந்த நிபுணர்​கள் குற்​றம்​சாட்​டினர்.

    இதையடுத்​து, பிரதமர் மோடி எப்​போதும் எனது நண்​பர்​தான் என்​றும், ஆனால் அவரின் சில நடவடிக்​கைகளை நான் விரும்​ப​வில்லை என்​றும் ட்ரம்ப் சில தினங்​களுக்கு முன்பு கூறி​இருந்​தார். இது​போல இந்​தி​யா, அமெரிக்கா இடையே நல்ல நட்​புறவு உள்​ளது. அதுபற்றி கவலைப்​படத் தேவை​யில்லை என்​றும் ட்ரம்ப் கூறி​யிருந்​தார்.

    இதற்கு பதில் அளிக்​கும் வகை​யில், அதிபர் ட்ரம்​பின் உணர்​வு​கள் மற்​றும் இரு நாடு​களுக்​கிடையி​லான உறவு​கள் குறித்த நேர்​மறை​யான மதிப்​பீட்டை பாராட்​டு​கிறேன் என்று பிரதமர் மோடி கூறி​யிருந்​தார்.

    இந்த சூழ்​நிலை​யில், அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலை​தளத்​தில் நேற்று முன்​தினம் வெளி​யிட்ட பதி​வில், “இந்​தி​யா, அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்​சு​வார்த்​தை​யில் ஏற்​பட்ட தடைகளுக்கு தீர்வு காண்​பது தொடர்​பான பேச்​சு​வார்த்தை தொடர்ந்து நடை​பெறுகிறது. வரும் வாரங்​களில் என்​னுடைய சிறந்த நண்​பர் பிரதமர் மோடி​யுடன் பேச ஆவலாக இருக்​கிறேன். இரண்டு சிறந்த நாடு​களுக்கு இடையி​லான வர்த்தக பேச்​சு​வார்த்தை வெற்​றிகர​மாக முடிவுக்கு வரு​வ​தில் எந்த சிரம​மும் இருக்​காது என்று நான் உறு​தி​யாக நம்​பு​கிறேன்” என கூறி​உள்​ளார்.

    ட்ரம்​பின் கருத்​துக்கு பதில் அளிக்​கும் வகை​யில், பிரதமர் நரேந்​திர மோடி எக்ஸ் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், “இந்​தி​யா​வும் அமெரிக்கா​வும் நெருங்​கிய நட்பு நாடு​கள், அத்​துடன் இயற்​கை​யான கூட்​டாளி​யும் கூட. இந்​தி​யா, அமெரிக்கா இடையி​லான வர்த்தக பேச்​சு​வார்த்​தை, இருதரப்பு கூட்​டாண்​மை​யின் எல்​லை​யற்ற வாய்ப்​பு​களை திறக்​கும் என்ற நம்​பிக்கை எனக்கு இருக்​கிறது. இந்த பேச்​சு​வார்த்​தையை விரைந்து முடிக்க எங்​கள் அதி​காரி​கள் குழு முனைப்​புடன் செயல்​பட்டு வரு​கிறது. நானும் அதிபர் ட்ரம்​புடன் பேச ஆவலுடன் இருக்​கிறேன். இரு நாட்டு மக்​களுக்​கும் நல்ல எதிர்​காலத்தை உறுதி செய்ய நாங்​கள் ஒன்​றிணைந்து செயல்​படு​வோம்” என கூறி​யுள்​ளார்.

    பிரதமர் மோடி எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட இந்த பதிவை, ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலை​தளத்​தில் பகிர்ந்​துள்​ளார். இது இருதரப்பு உறவில் முன்​னேற்​றம் ஏற்​படு​வதற்​கான அறிகுறி​யாக அமைந்​துள்​ளது.

    அமெரிக்​கா​வின் முரண்​பாடு: இந்​தி​யா​வுடன் வர்த்தக பேச்​சு​வார்த்தை தொடர்​வ​தாக ட்ரம்ப் தெரி​வித்​துள்ள நிலை​யில், இந்​தியா மீது 100% வரி விதிக்​கு​மாறு ஐரோப்​பிய நாடு​களை அவர் வலி​யுறுத்தி உள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

    அமெரிக்கா மற்​றும் ஐரோப்​பிய ஒன்​றிய அதி​காரி​களுக்கு இடையி​லான பேச்​சு​வார்த்​தை​யில் பங்​கேற்ற ட்ரம்ப், ரஷ்​யா​விடம் கச்சா எண்​ணெய் வாங்​கும் இந்​தி​யா, சீனா உள்​ளிட்ட நாடு​கள் மீது 50 முதல் 100 சதவீதம் வரை வரி வி​திப்​ப​தற்​கான வாய்ப்​பு​கள்​ குறித்​து பரிசீலிக்​கு​மாறு கேட்​டுக்​ கொண்​ட​தாக தகவல்​ வெளி​யாகி உள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    நேபாளத்தில் வன்முறை ஓயாததால் பதற்றம் நீடிப்பு: அரசியல்வாதிகளை குறிவைத்து தாக்குதல்

    September 11, 2025
    உலகம்

    யார் லாரி எலிசன்: 393 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிகர மதிப்புள்ள உலகின் பணக்காரர் | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 10, 2025
    உலகம்

    இயல்பு நிலைக்கு திரும்பும் நேபாளம் – மீண்டும் செயல்பட தொடங்கிய காத்மாண்டு விமான நிலையம்

    September 10, 2025
    உலகம்

    பிரான்ஸில் தொடங்கிய ‘அனைத்தையும் தடுப்போம்’ போராட்டம் – 200 பேர் கைது

    September 10, 2025
    உலகம்

    இந்தியாவிடம் திடீரென இறங்கி வரும் ட்ரம்ப் – பின்னணியில் அச்சமா, ராஜதந்திரமா?

    September 10, 2025
    உலகம்

    கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை: ட்ரம்ப் திட்டவட்டம்

    September 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தெற்கு ரயில்வேயில் முதல் அம்ரித் பாரத் விரைவு ரயில்: ஈரோடு – பிஹார் ஜோக்பனி இடையே இயக்க ஒப்புதல்
    • தமிழக அஞ்சல் துறை சார்பில் வாடிக்கையாளர் குறை தீர்க்கும் முகாம்: செப்.22-க்குள் கருத்துகளை அனுப்பலாம்
    • மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் உதவி சித்த மருத்துவ அலுவலர் 27 பேர் விரைவில் நியமனம்
    • இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேசுவரம் – காசி கட்டணமில்லா ஆன்மிக பயணம்
    • காப்பீடு, பங்குச் சந்தை முதலீடுக்கு யுபிஐ பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சம் வரை உயர்வு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.