Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»இந்தியாவுடனான நல்லுறவை ட்ரம்ப்பின் ஈகோ அழிக்க அனுமதிக்க முடியாது: அமெரிக்க எம்.பி ரோ கன்னா
    உலகம்

    இந்தியாவுடனான நல்லுறவை ட்ரம்ப்பின் ஈகோ அழிக்க அனுமதிக்க முடியாது: அமெரிக்க எம்.பி ரோ கன்னா

    adminBy adminSeptember 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்தியாவுடனான நல்லுறவை ட்ரம்ப்பின் ஈகோ அழிக்க அனுமதிக்க முடியாது: அமெரிக்க எம்.பி ரோ கன்னா
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    நியூயார்க்: இந்தியாவுடனான அமெரிக்காவின் நல்லுறவை அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஈகோ அழிக்க அனுமதிக்க முடியாது என்று அமெரிக்க காங்கிரஸ்(நாடாளுமன்றம்) உறுப்பினர் ரோ கன்னா தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல், அதிபருக்கு இருக்கும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பல்வேறு நாடுகளுக்கு எதிராக கூடுதல் வரி விதித்த டொனால்ட் ட்ரம்ப், இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்ய முதலில் 25% வரி விதித்தார். பின்னர், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி மேலும் 25% வரியை விதித்தார். இதனால், இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையும் தற்போது நடைபெறவில்லை.

    அமெரிக்கா உடனான உறவில் பின்னடைவு ஏற்பட்டால் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவுடனான தனது நெருக்கத்தை மேலும் அதிகரிக்கும் என அமெரிக்க அரசியல் நோக்கர்கள் அதிபர் ட்ரம்ப்பை எச்சரித்து வந்தனர். சமீபத்தில் சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு அதை உறுதிப்படுத்துவதாக அமைந்தது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரும் அமெரிக்கா – இந்தியா கூட்டமைப்பின் இணை தலைவருமான ரோ கன்னா, “இந்தியாவுடனான அமெரிக்காவின் நல்லுறவை அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஈகோ அழிக்க அனுமதிக்க முடியாது. அமெரிக்க-இந்திய உறவை வலுப்படுத்த கடந்த 30 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு பணிகளை ட்ரம்ப்பின் நடவடிக்கை குறைமதிப்புக்கு உட்படுத்துவதாக உள்ளது. ட்ரம்ப்பின் கொள்கைகள், இந்தியாவை சீனா மற்றம் ரஷ்யாவை நோக்கி நகர்த்துகிறது. இது அமெரிக்காவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

    ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் நாடு சீனாதான். ஆனால், சீனாவுக்கான இறக்குமதி வரியைவிட, இந்தியா மீதான இறக்குமதி வரி அதிகமாக உள்ளது. இதனால், அமெரிக்காவுக்கான இந்தியாவின் தோல் மற்றும் ஜவுளி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க உற்பத்தியாளர்களையும் ஏற்றுமதியாளர்களையும் பாதிக்கிறது.

    ட்ரம்ப்பின் முடிவுக்கு காரணம் என்ன?: இந்தியா மீது ட்ரம்ப் அதிக வரி விதித்ததற்கான காரணம் மிகவும் எளிமையானது. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தப்பட்ட பிறகு, அதற்கு தான்தான் காரணம் என ட்ரம்ப் உரிமை கோரினார். இதை பாகிஸ்தான் அரசும் ஆதரித்தது. ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவும் பாகிஸ்தான் பரிந்துரைத்தது. ஆனால், இந்த விவகாரம் இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினை என்று இந்தியா தெரிவித்தது. ட்ரம்ப்பின் உரிமை கோரலுக்கு இந்தியா வலு சேர்க்க மறுத்துவிட்டது.

    இந்தியா உடனான மூலோபாய உறவை ட்ரம்ப்பன் ஈகோ அழிக்க அனுமதிக்க முடியாது. ஏனெனில், அமெரிக்கா உலகை வழிநடத்த இது மிகவும் முக்கியமாகும். இல்லாவிட்டால், அந்த இடத்தை சீனா கைப்பற்றும்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    12 வயது சோபியா ஃபோர்ச்சாஸ் யார்? கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார், மினியாபோலிஸ் சர்ச் ஷூட்டிங்கில் அவரது மண்டை ஓட்டின் ஒரு பகுதி அகற்றப்பட்டது | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 3, 2025
    உலகம்

    இந்தியா மீதான இறக்குமதி வரி மறுபரிசீலனையா: ட்ரம்ப் சொல்வது என்ன?

    September 3, 2025
    உலகம்

    எல்லைப்புற ஏர்லைன்ஸின் கோவில்ட்! சலுகை: 9 299 க்கு வரம்பற்ற பயண பாஸ் தொடங்கப்பட்டது | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    September 3, 2025
    உலகம்

    ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு எஸ்சிஓ கண்டனம்: ரஷ்யா, சீனாவோடு இணைந்து இந்தியாவும் ஆதரவு

    September 3, 2025
    உலகம்

    வெள்ள நீர் ஓர் ஆசீர்வாதம், சேமித்து கொள்ளுங்கள்: பாகிஸ்தான் அமைச்சர் கருத்தால் சர்ச்சை

    September 3, 2025
    உலகம்

    ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,423 ஆக உயர்வு

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விக்ரமை இயக்கும் விஷ்ணு எடவன்?
    • நேரடி போட்டித் தேர்வின் மூலம் தேர்வான 2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்க ஐகோர்ட் உத்தரவு
    • அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் நாகை இறால் விவசாயிகள் அச்சம்!
    • மாதவன் 55 வயதில் இவ்வளவு இளமையாக தோற்றமளிக்கிறார்!
    • சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கியது ‘லோகா’ படக்குழு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.