Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல்: அயர்லாந்து அதிபர் கண்டனம்
    உலகம்

    இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல்: அயர்லாந்து அதிபர் கண்டனம்

    adminBy adminAugust 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல்: அயர்லாந்து அதிபர் கண்டனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    Last Updated : 13 Aug, 2025 12:11 AM

    Published : 13 Aug 2025 12:11 AM
    Last Updated : 13 Aug 2025 12:11 AM

    இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல்: அயர்லாந்து அதிபர் கண்டனம்
    அயர்லாந்து அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்ஸ் | கோப்புப்படம்

    டப்ளின்: கடந்த சில வாரங்களாக அயர்லாந்தில் வசித்து வரும் இந்திய மக்கள் மீது இனவெறி ரீதியான தாக்குதல் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்ஸ்.

    “இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல் வெறுக்கத்தக்கது. நாம் அளிக்கும் மதிப்புகளுக்கு இந்த செயல் முற்றிலும் முரணாக உள்ளது. இத்தகைய நம் எல்லோரையும் குறைத்து மதிப்பிட செய்யும். அயர்லாந்து சமூகத்துக்கு இந்தியர்கள் அளித்த மகத்தான பங்களிப்பை மறைக்கும் வகையில் இது உள்ளது.

    இங்கு வாழ்வாதாரம் தேடி வந்தவர்களை நாம் கண்ணியமாக நடத்த வேண்டும். ஏனெனில், இந்தியா மற்றும் அயர்லாந்து இடையே ஆழமான வரலாற்று ரீதியான தொடர்பு உண்டு. அது விடுதலை போராட்டத்தில் இருந்து தொடங்கியது என்பதை மறக்க கூடாது. அப்படி நடந்தால் அது நம்மை நாமே இழப்பதற்கு சமம். வன்முறையை தூண்டும் வகையிலான வெறுப்பு பேச்சுகள் தனிநபர்களுக்கு தீங்கு விளைவிப்பதோடு அயர்லாந்து சமூகத்தின் நீடித்த மற்றும் அடிப்படை உள்ளுணர்வை அழித்துவிடும்” என தனது அறிக்கையில் அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்ஸ் கூறியுள்ளார்.

    அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தாக்குதல்: கடந்த ஜூலை 19-ம் தேதி அன்று 40 வயதான இந்தியாவை சேர்ந்த அமேசான் ஊழியர் அயர்லாந்தில் தாக்குதலுக்கு ஆளானார். அவரது முகத்தில் காயம் ஏற்பட்டதாகவும், ஆடை கிழிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

    பின்னர் டப்ளின் நகரில் 32 வயதான இந்தியர் மீது நடந்த தாக்குதலில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல். இதே போல லக்விர் சிங் என்பவர் மீது தாக்குதல் நடந்தது. ‘நீ உன் சொந்த நாட்டுக்கு திரும்ப செல்’ என சொல்லி அந்த தாக்குதல் அவர் மீது நடந்தது. ஆகஸ்ட் 6-ம் தேதி அன்று சைக்கிளில் பணிக்கு சென்ற இந்தியர் மீது தாக்குதல் நடந்தது. அதே நாளில் 6 வயது சிறுமி மீது சிறுவர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த சூழலில்தான் அந்த நாட்டு அதிபர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    டப்ளினில் வெளிநாட்டினர் மீதான இனவெறித் தாக்குதல் சம்பவங்களை அடுத்து அண்மையில் அயர்லாந்தில் உள்ள இந்திய தூதரகம், இந்திய மக்களை முன்னெச்சரிக்கை உடன் இருக்குமாறு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
    Follow

    FOLLOW US

    Google News

    தவறவிடாதீர்!




    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    சீனாவில் பெருகும் நவீன கால ‘மன்னார் அண்ட் கம்பெனி’கள் – போலி வேலையும் பின்புலமும்

    August 12, 2025
    உலகம்

    இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – ரிக்டரில் 6.3 ஆக பதிவு

    August 12, 2025
    உலகம்

    அரசாங்கம் OCI விதிகளை இறுக்குகிறது: வெளிநாட்டு குடியுரிமை வைத்திருப்பவர்கள் அந்தஸ்தை இழக்க நேரிடும்; 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட குற்றச்சாட்டுகள் ரத்து செய்ய வழிவகுக்கும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    August 12, 2025
    உலகம்

    இந்திய-ஆரிஜின் டாக்டர் வினய் பிரசாத் வெளியேறிய சில வாரங்களுக்குப் பிறகு எஃப்.டி.ஏ-க்கு திரும்புகிறார்; லாரா லூமர் இதை ‘மிகச்சிறந்த முடிவு’ என்று அழைக்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    August 12, 2025
    உலகம்

    ‘நேர்காணலுக்கு என்னை அழைத்த ஒரே நிறுவனம் சிபொட்டில் தான்’: இந்தியன் -ஆரிஜின் டெக்கியின் சிலிக்கான் வேலி கதை வைரலாகி வருகிறது – இந்தியாவின் டைம்ஸ் ஆஃப் இந்தியா

    August 12, 2025
    உலகம்

    அணு ஆயுதத்தை ஏவ கட்டளையிடும் தலைவர்கள் அனைவரும் இறந்தாலும் பழிக்கு பழிவாங்க ரஷ்யா தயார் நிலையில் வைத்துள்ள ‘டெட் ஹேண்ட்’

    August 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்: பள்ளிகளுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்
    • வைட்டமின் கே 1: இந்த வைட்டமின் இதய நோய் அபாயத்தை 43%குறைக்க முடியும், தினசரி நுகர்வு முக்கியமானது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆர்.நல்லகண்ணு நூற்றாண்டு சிறப்பு வெளியீடு: ‘அறவாழ்வின் அடையாளம்’ நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
    • சிம்லா வெர்சஸ் மணாலி: எந்த ஹில் டவுன் எடுக்க வேண்டும்
    • வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரியில் இன்று கனமழை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.