Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, March 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»‘ஆயுதங்கள் 4 நாளில் தீர்ந்துவிடும்’ – பாகிஸ்தான் ராணுவ பலம் எப்படி?
    உலகம்

    ‘ஆயுதங்கள் 4 நாளில் தீர்ந்துவிடும்’ – பாகிஸ்தான் ராணுவ பலம் எப்படி?

    adminBy adminMay 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘ஆயுதங்கள் 4 நாளில் தீர்ந்துவிடும்’ – பாகிஸ்தான் ராணுவ பலம் எப்படி?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பாகிஸ்தான் சமீபத்தில் உக்ரைனுடன் ஆயுத ஒப்பந்தம் செய்தது. இதில் எம்ஜிஎஸ் பீரங்கி வாகனங்கள், எம்109 மற்றும் பிஎம்-21 பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் 155 எம்எம் மற்றும் 122 எம்.எம் ரக குண்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டதால், பாகிஸ்தானில் பீரங்கிகள் மற்றும் குண்டுகள் கையிருப்பு வெகுவாக குறைந்தது. இந்தத் தகவலை கடந்த 2-ம் தேதி நடைபெற்ற பாகிஸ்தான் ராணுவ கமாண்டர்கள் மாநாட்டில் உயர் அதிகாரிகள் சுட்டிக்காட்டி கவலை தெரிவித்தனர்.

    இந்தியா – பாகிஸ்தான் இடையே தீவிர போர் ஏற்பட்டால், பாகிஸ்தானிடம் இருக்கும் பீரங்கி குண்டுகள் மற்றும் வெடிமருந்து பொருட்கள் 4 நாட்களில் தீர்ந்துவிடும் நிலை உள்ளது. வெடிமருந்து தொழிற்சாலைகளில் உள்ள உற்பத்தி இயந்திரங்கள் மிகவும் பழமையானவை. பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்ததால் வெடிமருந்து தொழிற்சாலைகளை நவீனப்படுத்தவில்லை. அதனால் இங்கு உடனடியாக வெடிமருந்து பொருட்களை அதிகளவில் தயாரிப்பது சிரமம்.

    பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி படையைத்தான் அதிகளவில் சார்ந்துள்ளது. அப்படைக்குத் தேவையான தளவாடங்கள் குறைவாக இருப்பது, பாகிஸ்தான் ராணுவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பாக். தூதர் மிரட்டல்: இதனிடையே, ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி அளித்த பேட்டி ஒன்றில், “பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது போர் தொடுப்பதற்கு சமமானது. மேலும், பாகிஸ்தானின் சில பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்த திட்டிமிட்டிருப்பதாக நம்பத்தகுந்த உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நடக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.

    எனவே, பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினாலோ அல்லது தண்ணீர் விநியோகத்தை தடை செய்தாலோ அணு ஆயுதங்கள் உட்பட ராணுவத்தின் முழு பலத்தையும் பயன்படுத்தி நாங்கள் தாக்குதல் நடத்துவோம்” என்றார். முன்னதாக, ‘சிந்து நதியில் ஒப்பந்தத்தை மீறி எந்த ஒரு கட்டமைப்பையும் இந்தியா உருவாக்க முயற்சித்தால் அதை தகர்ப்போம்’ என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா – பாக். பதற்றம் அதிகரிப்பு: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி தாக்குதல் நடத்தி 26 பேரை சுட்டுக் கொன்றனர். இதற்கு காரணமானவர்கள் மீது கற்பனைக்கும் எட்டாத வகையில் பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார். சிந்து நதி நீர் பங்கீடு ரத்து செய்யப்பட்டது. வாகா எல்லையை மூடவும், பாகிஸ்தானியர் வெளியேறவும் உத்தரவிடப்பட்டது. இந்திய தரப்பில் தீவிரப் போர்ப் பயற்சி நடைபெற்று வருகிறது. காஷ்மீர் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன.

    இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தளபதிகள், பாதுகாப்பு படை தலைமை தளபதி ஆகியோருடன் பிரதமர் மோடி கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார். இதில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளித்தார்.

    இதனிடையே, சிந்து போர் பயிற்சி என்ற பெயரில் பாகிஸ்தான் ராணுவம் 450 கி.மீ சென்று தாக்கும் அப்தலி என்ற ஏவுகணையை சோதனை செய்து பதற்றத்தை அதிகரித்தது. இந்திய கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, பிரதமர் மோடியை நேற்று முன்தினம் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங்கை பிரதமர் மோடி நேற்று தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்புகளின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் நிலையில் கடற்படை தளபதி, விமானப்படை தளபதி ஆகியோரை பிரதமர் தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ஷில்பா சவுத்ரி: இந்திய வம்சாவளி அமெரிக்க ராணுவ வீரர் ஷில்பா சவுத்ரி விவாதத்தை கிளப்புகிறார்: ‘ஈரான் தலைவருக்காக இந்தியர்கள் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்?’ | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 7, 2026
    உலகம்

    ஹோலி கொண்டாட்டம் ஹாரோ: யுகே: ஹாரோவில் நடந்த ஹோலி நிகழ்வில் சண்டை மூண்டது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 7, 2026
    உலகம்

    ஹாலிவுட் & அனிமேஷன் மூலம் ஈரான் தாக்குதல்களை வெள்ளை மாளிகை மகிமைப்படுத்துகிறது: ‘ஜஸ்டிஸ் தி அமெரிக்கன் வே’ சீற்றத்தைத் தூண்டுகிறது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 6, 2026
    உலகம்

    ‘நாங்கள் சுடப்பட்டபோது நீங்கள் எங்கே இருந்தீர்கள்?’: கண்ணை இழந்த ஈரானிய ஆர்வலர் கமலா ஹாரிஸை அமெரிக்கத் தாக்குதல்களை எதிர்த்ததற்காக அவதூறாகப் பேசுகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 6, 2026
    உலகம்

    ‘நான் பாதுகாப்பாக உணரவில்லை’: கனடாவில் குத்திக் கொல்லப்பட்ட செல்வாக்குமிக்க நான்சி கிரேவாலின் பழைய வீடியோ வைரலாகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 6, 2026
    உலகம்

    ஈரானுடன் அமெரிக்கா-இஸ்ரேல் போர்: பல்வேறு வளைகுடா நாடுகள் இங்கிலாந்து மற்றும் கெய்ர் ஸ்டார்மர் மீது ஏன் கோபமாக உள்ளன | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உலகின் ஒரே உண்மையான நீல பழத்தை வளர்க்கும் நீல குவாண்டாங் மரத்தை சந்திக்கவும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பகல் சேமிப்பு நேரம் 2026: இந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா மற்றும் கனடா முழுவதும் கடிகாரங்கள் முன்னோக்கி வருகின்றன; நீண்ட மாலை மற்றும் குறுகிய தூக்கம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நேர்காணலுக்கு முன் மோசமான முடி வெட்டுதல் ₹5.2 கோடி வழக்குக்கு வழிவகுக்கிறது, உச்சநீதிமன்றம் ₹25 லட்சம் வழங்குகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மத்திய கிழக்கு பயண இடையூறுகள்: துபாய் விமான நிலையங்கள் புதுப்பிப்பு: 84 மணி நேரத்தில் 1,140 க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு பயணிகளின் பின்னடைவைக் குறைக்கின்றன; பயணிகள் தெரிந்து கொள்ள வேண்டியது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட வீட்டுத் திட்டத்தை எவ்வாறு அடையாளம் காண்பது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.